Wednesday, October 1, 2025

LAL SINGH CHADHA (2022)

ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம். 

உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.

மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.


வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.

படத்தின் உயிரே அதன் அமீர்கான் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது. 

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்னவோ ஆங்கிலத்தின் Forrest Gump இன் Tom Hanks, Robin Wright கதாபாத்திரங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றார்கள்.  ஆங்கில படம் வசனங்கள் மனதை தொடும் அளவுக்கு இந்தியில் மற்றும் தமிழில் இல்லை. சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.

தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.

இந்தத் திரைப்படம் எளிமை, தூய்மை, நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற அன்பு ஆகியவை மனித வாழ்வை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குகின்றன என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது. அமீர் கதாபாத்திரம் அறிவிலும் உலகியலிலும் “பலவீனன்” என்று கருதப்பட்டாலும், அவன் இதயம் இயேசு பாராட்டும் குழந்தை மனப்பான்மையை உடையது. அவன் எந்தச் சூழலிலும் குறை கூறாமல், பழிவாங்காமல், கிடைத்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறான். உலகின் கணக்கில் பெரியதாய் தோன்றாத வாழ்க்கையிலும், உண்மையான அன்பு, விசுவாசம், நேர்மை ஆகியவற்றை வாழ்ந்தால், அந்த வாழ்க்கை இறைவனின் திட்டத்தில் ஆழமான அர்த்தம் பெறுகிறது.

Overall Rating:  7.2 / 10

COLD WAR (2018)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கும் கம்யூனிச நாடாக மாறிப் போயிருந்தது போலந்து. 

மேற்கு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா அனைத்தும் “சுதந்திர ஜனநாயக நாடுகள்” எனக் கருதப்பட்டாலும், கம்யூனிச ஆட்சிகள் அவற்றை எதிரி நாடுகளாக பார்த்தன. போலந்தில் நடப்பதும் கம்யூனிச ஆட்சி என்பதால் தாமாகவே அவை போலந்துக்கும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன. இந்த உலக நாடுகளில் அரசியல் சூழலுக்கு இடையில் ததும்பிப் பெருகிய ஒரு காதலின் கதைதான் Cold War (2018 film) 


போர்முடிந்த பிறகு நாயகனும் அவனது மேலாளரும் சேர்ந்து போலந்து நாட்டின் நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் வேலையை அரசு உதவியுடன் செய்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் இசையைக் கண்டுபிடித்து ஒரு இசைக்குழு உண்டாக்குவதுதான் நோக்கம். அப்படி தங்கள் இசைத் திறமையை வெளிக்காட்ட வந்திருப்பவர்களில் ஒருத்திதான் நாயகி. அவளைப் பார்த்த கணமே நாயகனுக்குப் பிடித்து விடுகிறது. கோடி முகங்களில் ஒரு முகம் மட்டும் உயிரின் வேரில் பூவை மலர்த்துமே அது போல முதல் பார்வை முதல் ஈர்ப்பு என இருவருக்கும் இடையில் காதல் தளும்பத் தொடங்குகிறது.

இசைக்குழுவினரை கம்யூனிச சித்தாந்தம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பாடல் பாடச் சொல்லி அரசாங்கம் அறிவுறுத்தும் போது நாயகன் எதிர்க்கிறான், மேலாளன் தனது தொழில் வளர்ச்சிக்காக ஒப்புக்கொள்கிறான். நாயகிக்கோ எப்படியாவது நாயகனோடு இந்த வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட வேண்டும். இசைக்குழுவை விட்டு நீங்கும் முடிவை நாயகன் எடுக்கிறான். 

ஒரு அரிய வாய்ப்பில் பெர்லினில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு நாயகனுடன் இந்த நாட்டை விட்டே ஓடிவரச் சம்மதிக்கிறாள். எங்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்றால் பிரான்ஸ்க்கு. போலந்து நாட்டின் எதிரி நாட்டுக்கு. ஆனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அவள் வரவில்லை, நாயகன் மனமுடைந்து அவன் மட்டுமே பிரான்ஸ்க்கு சென்றுவிடுகிறான். 

இருவரும் இருவேறு திசையில் வாழ நேர்கிறது. காலங்கள் ஓடுகின்றன, அவனுக்குச் சில காதலிகள் வாழ்வில் வருகிறார்கள். அவளுக்குச் சில காதலன்கள் வாழ்வில் வருகிறார்கள். ஆனாலும் அணையாத சுடராய் இந்தக் காதல் மட்டும் எப்போதும் எரிந்தபடியே இருக்கிறது. அவள் சிறந்த பாடகியாக மாறி இருக்கிறாள், அவன் ஓர் இசையமைப்பாளனாக மாறி இருக்கிறான்.

சிலகாலம் கழிந்து அவளைத் தேடிச் சென்று சந்தித்து காரணம் கேட்பான், நீ ஏன் என்று வராமல் போனாய்? "என்னால் உன்னோடு வரமுடியாமல் போனதுக்கு மன்னித்துக்கொள், ஒருவேளை அன்று நாம் சேர்ந்து ஓடிப் போயிருந்தால் இருவருமே தோற்று இருப்போம். வாழ்விலும் சரி. கனவிலும் சரி"

"என் இடம் வந்துவிட்டது இனி என்னைப் பின்தொடராதே" என்று சொல்லிவிட்டுச் சிறுது தூரம் சென்று அடக்கமாட்டாமல் திரும்ப ஓடிவந்து முத்தம் தருவாள். அதுதான் அவர்களின் காதலின் துவக்கமும், நிறைவும். வெட்ட வெட்டப் பல்லாயிரம் கிளைகளாகப் பெருகும் காதல் இது. 

நாயகி போலந்துக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும், நாயகனும் போலந்துக்கு செல்வான். ஆனால் போலந்தைப் பொறுத்தவரை இவன் எதிரிநாட்டுக்கு தப்பிச் சென்றவன், தேசதுரோகி. கைது செய்யப்படுகிறான்.  பதினைந்து வருட சிறை தண்டனை. நாயகிக்குத் தெரிந்து சிறைக்குத் தேடிவருவாள். 

நீ ஏன் இங்க வந்த? போ போயி யாராவது உனக்கு உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆண்மகனாக தேர்ந்தெடுத்து சந்தோசமா வாழு. என்பான். அவனை அழுத்தமாக முத்தமிட்டுச் சொல்வாள். "அப்படி ஒருத்தன் இன்னும் பிறக்கல. நான் உன்னை வெளியில் கொண்டுவருவேன் எப்படியாவது."

இதற்குப் பிறகான இறுதி பத்து நிமிடக் கதையைச் சொல்ல மாட்டேன். அதைக் காணுங்கள். மனதைக் கரைத்து நினைவில் அகலாது நின்றுவிடக் கூடிய ஒரு உன்னத காதல். 

“ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” (மாற் 8:36) என்ற வார்த்தைகள் இந்தக் கதையில் உயிர் பெறுகின்றன. விடுதலை மறுக்கப்படும் இடத்தில், மனித மரியாதை மிதிக்கப்படும் சூழலில், காதலும் நம்பிக்கையும் சுவாசிக்க முடியாது என்பதை நாயகன் விக்டர்–நாயகி ஸூலா உறவு நினைவூட்டுகிறது. “சமாதானம் செய்பவர்கள் பேறுபெற்றோர்” (மத் 5:9) என்ற நற்செய்தி அழைப்பின் ஒளியில், Cold War மனித இதயம் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேர்வு செய்யும் போது உறவுகள் உடைகின்றன என்றும், உண்மை, தியாகம், மன்னிப்பு ஆகியவை உள்ள இடத்தில்தான் உண்மையான ஒன்றியம் சாத்தியமென்றும் அமைதியாகச் சொல்கிறது.

படம் பாரத்து முடித்ததில் இருந்து மனம் முழுக்க ஒரு வெறுமையும், வெறுமை முழுக்க காதலும் நிரம்பியிருக்கிறது. (நன்றி: முக நூல் நண்பர்)

Overall Rating:  7.1 / 10

Tuesday, September 9, 2025

Sore; A wife from the future

வார வார எத்தனை படங்கள் வந்து கொண்டிருக்கிறது? எடுத்த கதையை எடுத்தால் என்ன பிரச்சனை? கதைக்கு இங்கே பஞ்சம் என்று சொல்பவர்கள் எல்லாம் கொரிய படங்களை பார்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்! ஒவ்வொரு சீனும் என்ன மேக்கிங் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 2025ல ஒரு இந்தோனேசியன் ரொமான்டிக் சயின்ஸ் பிக்ஷன் டைம்லூப் படமாக வெளியான Sore; A wife from the future.

முதல் காட்சியில், படுக்கையில் இருந்து எழுந்தவன் அருகில் ஒரு அந்நிய பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். "யார் நீ". என் பெயர் sore, உன் வருங்கால பொண்டாட்டி, நான் எதிர்காலத்தில் இருந்து வருகிறேன். நம்மைப் போல் முதலில் நம்ப மறுப்பவன் பிறகு யாருக்குமே தெரியாத அவனது ஆழமான ரகசியங்கள்  அவள் சொல்வதின்  வழியாக நம்பத் தொடங்குகிறான். "இன்னும் மூன்று வருடங்கள் கழித்து நீ என்னை சந்திப்பாய் என் மீது காதல் கொள்வாய், நான் இப்போது உன் வாழ்வை செம்மைப்படுத்ததான் வந்திருக்கிறேன். இனி நீ நான் சொல்வதைக் கேட்டால் மட்டும் போதும் என்று,  குடி புகைப் பழக்கத்தை நிறுத்தச் சொல்கிறாள், அதிகாலையில் எழுந்து உடல்நலம் பேணச் சொல்கிறாள். சம்மதிக்கிறான். ஒரு நாள் அவளுக்குத் தெரியாமல் புகைப் பிடிக்கிறான். அப்போதுதான் உண்மை சொல்வாள். நீ இப்படிதான் என் சொல்பேச்சுக் கேட்காமல் உடலைக் கெடுத்து எட்டு வருடம் கழித்து இறந்துவிட்டாய். நான் தனியாகிவிட்டேன். சொல்லிய மறுகணம் அவள் மூர்ச்சையாகி இறந்துவிடுவாள்.


மீண்டும் கதை முதலில் இருந்து தொடர்கிறது. இவர்தான் தன்னுடைய மனைவி அப்படிங்கறதுக்கு கதாநாயகன் அடுத்து என்னதான் செய்தார் அதை கண்டுபிடிக்கிறதுக்கு. இப்படி பல விஷயங்களுக்கான விடைதான் இந்த படத்துடைய மொத்த கதையே.

இந்த படத்தின் இயக்குனர் யாண்டி லாரன்ஸ், ஒரு பெஸ்ட் இந்தோனேசிய இயக்குனர். இந்த படத்துல அட்டகாசமான எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரம் ஸொரெ என்ற ஹீரோயின் கதாபாத்திரம். அதை அந்த அளவுக்கு அழகாக உணர்ந்து உள்வாங்கி அட்டகாசமாக ஸ்கிரீன்ல புல் ஆஃப் பண்ணாங்க. அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ். இது ஒரு டைம் லூப் படம். பொதுவாக தமிழில் இந்த மாதிரியான டைம் லூப் படங்கள் மிக மிக அரிது. அடுத்து என்ன நடக்க போதோ என்ற ஒரு பதபதைப்பு, பரபரப்பு  ஒவ்வொரு சீனிலும்! 


படத்துல ஹீரோவே பேசிக்காக ஒரு போட்டோகிராபர் என்பதால் சினிமட்டோகிராபி ஸ்டன்னிங்காக இருக்கும். படத்துடைய சினிமட்டோகிராபர் படத்துடைய மியூசிக் டைரக்டரும் அந்த அளவுக்கு மியூசிக் எங்க வருது உள்ள வருது வெளிய போகுதுனே தெரியாது. சீன்ல நமக்கு கொடுக்க வேண்டிய அந்த உணர்ச்சியை காட்சிகள் கடத்துது.  

இந்த படம் கிட்டத்தட்ட 13 கேட்டகிரில நாமினேட் ஆகி ஆல்ரெடி ஒன்பது விருதுகளை வென்ற ஒரு தரமான படம்தான் . Adult Content பொறுத்த அளவுக்கு எதுவுமே கிடையாது தாராளமாக ஃபேமிலியோட பார்க்கக்கூடிய படம்தான். 

 நம்முடைய திருஅவையில், மறைக்கல்வி மற்றும் பல குடும்பங்களில் இந்த படத்தை நிச்சயமாக ப்ரொபோஸ் செய்யலாம்.  உங்களுடைய Reviewக்கு பயன்படும்படியான சில சிந்தனைகள்:

  • No Marriage is perfect. "எந்தக் கல்யாணமும் குறைபாடற்றது அல்ல, உன்னிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்ட பிறகு எனக்குத் தோன்றும். இறந்து இறந்து பத்தாயிரம் முறை பிறந்தாலும் நான் உன்னையே தான் தேடி வருவேன்" அவன் ஆச்சர்யப்பட்டு ஓ இவ்வளவு காதலிக்கிறாயா என்னை! என்பான்.
  • "அவளால் அவனை மாற்ற முடியவே முடியாது", அப்போதுதான் உணர்வாள், யாரையும் யாரால்  மாற்ற முடியாது, ஏனெனில் அது எப்போதும் உன்கையில்தான் இருக்கிறது, அதைச் செய்யவேண்டியது நீதான். 
  • அது ஒரு கட்டத்துக்கு மேல போகும்போது நமக்கே இவ்வளவுதாமா வாழ்க்கை அப்படிங்கிற அளவுக்கு  நம்மை அறியாமல் மனசு ரொம்ப நொந்து போய்விடுகிறோம். மன்னிப்பு, ஏற்றுக் கொள்தல் இவைதான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர். 


Wednesday, September 3, 2025

A HIDDEN LIFE (2019)

உலகப்புகழ் பெற்ற இயக்குனர் டெரன்ஸ் மாலிக் இயக்கத்தில் வெளியான ஒரு உன்னதமான படைப்பு.. இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஆஸ்திரிய விவசாயி பிரான்ஸ் ஜேகர்ஸ்டேட்டரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், ஒரு மனிதனின் மனசாட்சிக்கும் அதிகாரமிக்க அரசாங்கத்து அநீதிக்கும் இடையிலான போராட்டத்தை மிக ஆழமாகப் பேசுகிறது.

1939-ஆம் ஆண்டு உலகப் போர் பரவும் போது, ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ள புனித ராதகுண்ட் என்ற அழகிய கிராமத்தில் பிரான்ஸ் ஜேகர்ஸ்டேட்டர், மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார். அவர்கள் மிகவும் ஏழ்மையான ஆனால் அன்பும் அமைதியும் நிறைந்த ஒரு விவசாய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். போர் தீவிரமடையும் போது பிரான்ஸ் ராணுவப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார். அங்கு பயிற்சியில் இருக்கும்போது நாஜிக்களின் கொள்கைகள் மனசாட்சியைப் பிசைக்கின்றன. அவருக்கு உண்மையில் ஹிட்லருக்கு கீழ் வேலை செய்ய விருப்பமில்லை. ஒரு கத்தோலிக்கராகப் பிறர் மீது வன்முறை செலுத்துவதையும், அடக்குமுறையையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பயிற்சி முடிந்து வீடு திரும்பும் பிரான்ஸ், ஹிட்லரின் கொள்கைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை எடுக்கிறார். இது அவரது குடும்பத்தை கிராம மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே எதிர்ப்பை உண்டாக்குகிறது. அவரையும் அவர் குடும்பத்தையும் சிறை பிடிக்குறார்கள். இறுதியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்ணீரின் வழியாக சொல்லி இருக்கிறது படம்.


இது வெறும் போர் சார்ந்த திரைப்படம் மட்டுமல்ல; மாறாக மனிதனின் அறம் மற்றும் உறுதிப்பாட்டைப் பற்றிய ஒரு ஆன்மீகத் தேடல் எனலாம். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரமிக்கத்தக்க இயற்கை அழகை ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் விட்மர் தனது கேமராவில் கவிதையாக வடித்திருக்கிறார். காட்சிகள் பார்வையாளர்களை அந்த அமைதியான கிராமத்து வாழ்க்கையோடு ஒன்றச் செய்கிறது. ஒரு மனிதன் அநீதிக்கு அடிபணிய மறுக்கும்போது, அவன் சார்ந்த சமூகம் அவனை எப்படித் தனிமைப்படுத்துகிறது என்பதையும், அந்தச் சூழலில் அவனது குடும்பம் சந்திக்கும் துயரங்களையும் படம் எதார்த்தமாகப் படம்பிடித்துள்ளது.

வசனங்களை விட மெளனத்திற்கும், பின்னணி இசைக்கும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான பார்வைகளுக்கும் இயக்குனர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 

குறிப்பாக, கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் வழி வெளிப்படும் அன்பு, எந்தச் சூழலிலும் பிரியாத ஒரு உன்னதமான பிணைப்பைச் சித்தரிக்கிறது. "உலகம் இன்றும் சீராக இருப்பதற்குப் பின்னால், வரலாற்றில் இடம் பெறாத பல மனிதர்களின் மறைக்கப்பட்ட தியாகங்களே காரணம்" என்ற உயரிய தத்துவத்தை இந்தப் படம் மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது. வாழ்வின் தார்மீக விழுமியங்களை நேசிக்கும் எவரும் தவறவிடக் கூடாத ஒரு காவியம் இது.

அவரைச் சந்திக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் கத்தோலிக்க குருக்கள் என அனைவரும், "வெறுமனே வாயால் மட்டும் சத்தியம் செய்துவிட்டு உன் குடும்பத்தோடு போய் வாழ், கடவுள் உன் மனதை அறிவார்" என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால் பிரான்ஸ், ஒரு பொய் சத்தியம் செய்துவிட்டு விடுதலையாவதை விட, உண்மையாக இருந்து சாவதே மேல் என நினைக்கிறார். சிறையில் இருந்தபடி அவரும் அவரது மனைவி பானியும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொள்ளும் கடிதங்கள் அவர்களின் அன்பையும் மன உறுதியையும் காட்டுகின்றன.

பிரான்ஸ் மற்றும் பானி ஆகிய இருவருக்கும் இடையிலான உறவு வெறும் கணவன்-மனைவி என்ற நிலையையும் தாண்டி, ஒரு உயர்ந்த லட்சியத்திற்காகப் பிணைக்கப்பட்ட ஆன்மீகப் பிணைப்பாகத் தெரிகிறது.

இறுதியில்,  அந்த கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் உங்கள் நெஞ்சை வருடும்.

Overall Rating:  7.2 / 10

Tuesday, September 2, 2025

MUMU I HEAR YOU PAPA (2025)

2025 இல் ஒரு கொரியன் எமோஷனல் ட்ராமாவாக வெளிவந்த Mumu I hear you Papa. 

படத்தின் கதை. ஹீரோ ஒரு ஏசி மெக்கானிக். மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய குடும்பத்தை வழி நடத்தி வருகிறார். இவருடைய வேலை, சம்பள குறைவு, இவற்றெல்லாம் காரணம் காட்டி இவர் விவாகரத்து செய்கிறார் மனைவி. இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தான் Mumu, என்னை கேட்டால் படத்தின் உடைய ஹீரோயின் கதாநாயகி. 


அந்த பொண்ணுதான் சொல்லப்போனா அந்த கதையின் நாயகி. நம்ம கதாநாயகனுக்கு இந்த உலகமே தன்னுடைய பொண்ணுதான். இந்த பொண்ணுக்கு உலகமே தன்னுடைய அப்பாதான். இதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் நம்ம கதாநாயகனுக்கு காது கேட்காது. அதனால அவர் எதை கம்யூனிகேட் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலும் அதை சைகையிலயேதான் வந்து அவர் கம்யூனிகேட் பண்ணுவாரு. கதாநாயகனுக்கு தன்னுடைய மகள் ரொம்ப ரொம்ப முக்கியம். அவன் மேலதான் உயிரே வச்சிருக்கேன். நம்ம கதாநாயகனுடைய மனைவி திருப்பி வருகிறாள். "என் மகளை தயவு செஞ்சு என்கிட்டயே கொடுத்துருங்க" அப்படின்னு லீகலாக அப்ரோச் பண்ண போக இதுக்கப்புறம் இந்த கதையில என்னதான் நடந்தது இதுதான் இந்த படத்துடைய மொத்த கதையே. 

இந்த படத்தை பட் நிச்சயமாக நீங்க பார்க்கும்போது உங்களுக்கு I am Sam (2001), Deiva Thirumagal (2013) கண்ணுக்குள்ள கன்பார்மா ஓடியே தீரும். 

இந்த படத்துடைய கதாநாயகனும் அட்டகாசமாக புல் ஆப் பண்ணி இருக்கிறார். அந்த குட்டி பொண்ணு நடிப்புதானா இல்ல உண்மையாவே அவருடைய சொந்த பொண்ணா அப்படிங்கிற அளவுக்கு எனக்கு ஒரு சந்தேகம். அந்த அளவுக்கு அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ் செம்மையாக புல் ஆஃப் பண்ணிருந்தது அந்த பொண்ணு. குறிப்பாக ஒரு ஃப்ளூட் எடுத்து அந்த பொண்ணு காது கேட்காத தன்னுடைய அப்பாவுக்கு வாசிச்சு காமிக்கிற ஒரு சீன் ஒன்னு இருக்கு நீங்க பாருங்க, யாரு பார்த்தாலும் கண்கள் எல்லாம் குளமாயிடும் நமக்கு. அந்த மாதிரி ஒரு காட்சி. .

இந்த படம் ஏற்கனவே வந்து ரெண்டு பேருமே பெஸ்ட் ஆக்டருக்கு வாங்கிட்டாங்க. இவர் ஹீரோ சிறந்த நடிகருக்கான விருது வாங்கிட்டாரு. அந்த குட்டி பொண்ணு சிறந்த குழந்தை நட்சத்திர அவார்டு வாங்கிருச்சு.

படத்துடைய பேக்ரவுண்ட் ஸ்கோரிங்கமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு எமோஷனல் சீக்குவன்ஸையும் பேக்ரவுண்ட் ஸ்கோரிங்ல உங்க புல் ஆஃப் பண்ண விதமே வேற அட்டகாசமாக பண்ணிருந்தாங்க. இதைத் தாண்டி மாற்றுத் திறனாளிகள் அவர்களுடைய செய்தியை சொல்ல அவர்கள் படும் கஸ்டம் - குறிப்பா, வாய் பேச முடியாத, இவங்க படுற கஷ்டம்ல்லாம் எவ்வளவுங்கிறது இந்த படத்தை பாருங்க. நிச்சயமாக ஒரு நல்ல ஃபீல இந்த படம் கொடுக்கும். மாற்றுத் திறனாளிகளின் துன்பங்களை விஷுவலா பேசுன ஒரு படம். 

Overall Rating:  7.5 / 10

Sunday, August 17, 2025

Solemnity of Assumption - August 15

Dear brothers and sisters, dear young Seminarians,

Today we celebrate our Blessed Mother Mary, who was assumed into heaven, body and soul. This great feast reminds us that our bodies are not just containers or temporary shells. We are created as whole persons — body, mind, and spirit — and God cares about every part of us.

Some people today think only physical fitness matters. But a wise person said, “A truly good life is like a three-legged stool — it stands strong only when physical, mental, and spiritual fitness are in balance.”

So, dear young priests and religious in formation, how is your spiritual fitness? Your religious fitness?

Let me take an example from sports: We admire Cristiano Ronaldo. At nearly 40 years old, he is still running with the best. While many former stars slow down, Rooney and Maradona were fat and with bellies. But Ronaldo continues to shine. How come?

It is because of self-discipline and constant formation — his training, diet, lifestyle, and mental strength. He never stops preparing.

In the Church and in our Guanellian Congregation, formation is our primary mission. We invest time, resources, and love to shape hearts for God. Even our Ratio dedicates many pages to formation stages — because we care about your future, and about the people you will serve.

1. Priority of Formation

Jesus Himself formed His disciples for three years —

  • Spiritual formation: He taught them to pray
  • Human formation: He taught the Beatitudes — to be humble, compassionate
  • Pastoral formation: He sent them out two by two to serve and proclaim

In Matthew 7, Jesus calls us to build our house on a rock — a strong foundation that survives storms. This is not only for priests or preachers — every Christian needs formation.

So, do not compromise yourself.

  • ➡ Give yourself fully to formation
  • ➡ Learn the ways of prayer
  • ➡ Grow in knowledge of the Church and the Congregation
  • ➡ Avoid mediocrity — choose creativity, discipline, and holiness

Mary teaches us the same interior strength. In the Magnificat she says: “My soul proclaims the greatness of the Lord.” (Lk 1:46) Mary doesn’t start with, “My mouth praises karaoke” or “My body dances zumba,” but with “My soul.” Praise begins from her soul, from the heart. Let God form your heart — so His Word can take root there. As our Ratio says: “By the Ways of the Heart.” We follow rules not out of force — but out of love and goodness.

Formation in the Guanellian family is life-long — not just initial training for priests, but also for collaborators, staff, and all our ministries.

2. Transmission of Charism & Mission

Grandparents pass on culture to children so that the family does not forget its identity. Without this transmission, we become rootless.

In the same way, we have received a precious charism from St. Louis Guanella —

  • 💙 the family spirit
  • 🙏 trust in Providence
  • 🤝 care for the poor with a preventive and loving approach

This is not just history — this is our DNA. It is now our turn to preserve, live, and pass it on with joy and conviction.

3. Best Preparation for Mission

To serve the Guanellian mission in today’s world, we need:

  • ✔ Pastoral professionalism
  • ✔ Cultural awareness
  • ✔ Skills suitable for our mission
  • ✔ Formation that prepares us for practical charity

The world is waiting for men and women who are: spiritually strong, disciplined like athletes, compassionate like Mary and be rooted in charism and mission

On this feast of the Assumption, 

  • Mary reminds us of our destination — heaven. 
  • Formation reminds us of our journey — discipleship. 
  • Charism reminds us of our identity — the Guanellian family.

Mary, assumed into heaven — pray for us!

St. Louis Guanella — pray for us!

Wednesday, August 6, 2025

Moses and Peter are fallible leaders, but invited to remain faithful in the Lord

We make most of our decisions under the influence of human thinking and emotions; most of the time, it is done unconsciously, rather than according to God’s plan. 

Both readings reveal a powerful truth: even those closest to God—Moses and Peter—can fail to obey His will when they rely on human understanding instead of divine trust.


1. Any Leadership is fallible and towards the path of conversion until death:

  • Moses disobeyed by striking the rock instead of speaking to it as God commanded. God commanded him to speak to the rock; instead, Moses struck out of human emotions like anger and impatience. Moses did not follow God's precise instructions. 
  • Peter, a future leader of the Church, to whom the keys are handed over, is not able to think according to the mind of God. He tried to prevent Jesus from fulfilling His mission of suffering and death. 

Both are called, chosen and appointed by God as leaders. But they failed to see the deeper wisdom of God's plan. It is possible for any popular leaders, for the leaders are always learners. We can understand in a sense that Peter was still a disciple, not sent on a mission, so he was impatient to speak according to the mind of human beings. But Moses, just towards the end of his life, promised the land; he was supposed to be a mature leader, but he failed. We are learning until death. God is the teacher who sends his servants on his own mission.


2. Human Thinking or acting out of emotions is common/natural for leaders

Moses and Peter are doing good and well-intended actions. They did not plan and commit the errors.

  • Moses thought striking the rock (as he had done before) would be sufficient. Peter thought avoiding the cross was the right thing because he wanted to care the Lord.
  • Human thinking or emotion is dangerous; Moses' action reveals pride rather than humility or compassion. He spoke as if he and Aaron were the ones performing the miracle, not God.

God's ways are not our ways. Human wisdom can never replace divine instruction. Even good-intentioned actions, if not aligned with God's will, can lead us astray. Necessities for our time of silence, recollection, 


3. God's Call for Humble Obedience

Leaders like Moses and Peter show us that failure is part of the journey, but so is growth. God’s interference is not a punishment, but a correction; it is not rejection—it is an invitation to deeper trust. Holiness requires obedience, even when we don't understand. Peter, after his rebuke, would go on to become the rock of the Church. Moses, though denied entry into the Promised Land, remained God's faithful servant to the end.

Personal Reflection:

Leaders are fallible, meaning they are capable of making mistakes. This is a natural part of being human, but the Lord is inviting them to a lifelong journey of discipleship that demands humility, obedience, and faith.





Popular Posts