Monday, June 15, 2026

திருமணம் ஒரு திருவருட்சாதனம்

திருமணம் ஒரு திருவருட்சாதனம்

இன்றைய உலகில் திருமண வாழ்க்கை பல சவால்களை எதிர்கொள்கிறது: வேலைப் பளு, பொருளாதார அழுத்தம், சமூக ஊடகங்களின் தாக்கம், நேரமின்மை, கருத்து வேறுபாடுகள், அதிகரித்து வரும் விவாகரத்து, தனிமனித மைய சிந்தனை போன்றவை. இவற்றை மனதில் கொண்டு, திருமண தம்பதியருக்கு மிகவும் தேவையான மூன்று முக்கிய பண்புகள்:

திருமணம் எப்படி பார்க்கப்படுகிறது? 

பீட சிறுவர்கள் ஏக்கமாக, வயதானவர்கள் பாவமாக  உங்களை பார்க்கிறார்கள்

எனக்கு வாழ்நாளில் கிடைக்காத, ஏன் உங்களுக்கே இரண்டாவது வாய்ப்பில்லாத நிலையில் இது கிடைக்கிறது. 


1. Understanding: 

திருச்சபையின் போதனையின்படி, திருமணம் ஒரு திருவருட்சாதனம். அது வெறும் சமூக ஒப்பந்தமோ சட்டப்பூர்வ உடன்படிக்கையோ அல்ல; மாறாக, இறைவனால் ஏற்படுத்தப்பட்ட புனித உடன்படிக்கை.

ஒன்றித்தன்மை (Unity): ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, வாழ்நாள் முழுவதும் ஒரே துணையாக வாழ்வது. “இருவர் ஒரே உடலாயிருப்பர்.” (மத் 19:5)

பிரிக்க முடியாத தன்மை (Indissolubility)

திருமண பந்தம் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.” (மத் 19:6)


கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் அடையாளம் (Sign of Christ’s Love for the Church)

கணவன்-மனைவியின் அன்பு, கிறிஸ்து தனது திருச்சபையை நேசித்த அன்பின் அடையாளமாக அமைகிறது.


2. Sacrifice: அன்பான உரையாடல் (Healthy Communication)

  • ஒருவரை ஒருவர் கவனமாகக் கேட்பது.
  • உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படையாகப் பகிர்வது.
  • குற்றம் சாட்டாமல் பேசுவது.
  • தவறான புரிதல்களை உடனடியாகச் சரிசெய்வது.
  • பொறுமையும் மன்னிப்பும் (Patience and Forgiveness)
  • யாரும் நிறைவானவர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்வது.
  • சிறிய குறைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது.
  • மனக்கசப்புகளைச் சேர்த்து வைக்காமல் மன்னிப்பது.
  • மீண்டும் மீண்டும் உறவைப் புதுப்பிப்பது.


3. Affection: அன்பின் உடன்படிக்கை (Covenant of Love) அர்ப்பணிப்பும் விசுவாசமும் (Commitment and Fidelity)

கவர்ச்சியான அன்பிலிருந்து பரஸ்பரமான அன்பிற்கு மாற வேண்டும். 

* உணர்ச்சிகளை மட்டும் அல்ல, முடிவையும் அடிப்படையாகக் கொண்ட அன்பு.

* எந்தச் சூழலிலும் உறவைப் பாதுகாக்கும் மனநிலை.

* குடும்பத்தை முன்னுரிமையாகக் கருதுதல்.

* இறைவனை மையமாக வைத்து வாழ்தல்.

*  உயிரை உருவாக்குவதற்கான திறந்த மனம் (Openness to Life)


Friday, June 12, 2026

Sacred Heart of Jesus

இயேசுவின் திருஇருதயம், பெருவிழா


இச 7:6-11. 1 யோவா 4:7-16. மத் 11:25-30

கடவுள் அன்பாய் இருக்கிறார்

24 அக்டோபர் 2024 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் ‘திலெக்ஸித் நோஸ்’ (‘அவர் நம்மை அன்பு செய்தார்’) என்னும் தன் நான்காவது சுற்றுமடலை வெளியிட்டார். இச்சுற்றுமடலின் நோக்கம் என்ன? (அ) இயேசு கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்தல். (ஆ) மேலோட்டமான இந்த உலகத்தை விடுத்து நம் வாழ்வின் மையத்துக்குக் கடந்துசெல்தல். (இ) இயேசுவின் தூய்மைமிகு இதய பக்திமுயற்சி நமக்கு விடுக்கும் சமூக கடமைகளைப் புரிந்துகொள்தல்.

(அ) பெருவிழா வரலாற்றுப் பின்புலம்

1. விவிலியத்தில் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் பல திரு அவை குருக்கள் எழுதியுள்ளார்கள்.

2. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇருதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.

3. திருத்தந்தை 9-ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13-ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11-ஆம் பயஸ் ‘இரக்கம்நிறை மீட்பர்’ என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.

(ஆ) திருஇதய பக்தி முயற்சிகள்

1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல்.

2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.

3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.

4. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.

(இ) திருஇதயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள்


2. அன்பே சிவம்: அன்பு என்னும் செயல்

அவர் தம் மக்கள்மேல் கொண்ட அன்பினால் அவர்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். கடவுளின் அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, நம் உள்ளத்தில் உணரும் ஒரு சிந்தனை அல்ல. மாறாக, நமக்கு வெளியே காணக்கூடிய அளவில் நிகழ்ந்தேறும் செயல். நாம் வாழ்வில் ஏற்படும் மாற்றம். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அன்புக்காக ஏங்குகிறோம். வலிமையான யானை, அன்பு ஒருவனை மாற்றுகிறது ஒருவனை குணப்படுத்துகிறது. காரணம் அன்பே அன்பே கடவுள். 

2. அன்பு நம்மை காயப்படுத்தும்: நம் அன்புக்குத் தூண்டுதல்

அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார். அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். இயேசுவின் இதயத்தில் முட்கள் நமக்குள் இருந்து வழிந்து ஓடும் ரத்தம் போர் வீரர்கள் படைவீரர்கள் சிலுவையிலும் அவர் குணப்படுத்துகிறார். தண்ணீரும், இரத்தமும்.

நாம் பாவம் செய்யும்போது கடவுளை காயப்படுத்துகிறோம் கடவுளுடைய இதயத்துக்கு எதிராக குற்றம் செய்கிறோம். 


3. தொடர் கற்றல்

நம் சுமைகளை அகற்றுவதாக வாக்களிக்கிற இயேசு அவருடைய சுமைகளை நம்மேல் ஏற்றுமாறு நம்மை அழைக்கிறார் (நற்செய்தி வாசகம்). ‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். நாம் சொற்களைப் பயன்படுத்திப் பேசும்போது நம் மொழி வளர்வதுபோல, அன்பு என்னும் செயலும் நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கு எளிதாகிறது.

நீங்களும் ஆண்டவரைப் போல அன்பு செய் கடவுளைப் போல அன்பு செய்ய வேண்டும் ஒருவரை ஒருவர் அன்பு செய்கிற நிபந்தனை இல்லாமல் அன்பு செய் காயப்படுத்துகிறது உங்களுக்கு உபத்திரம் செய்பவர்களுக்கு அன்பு செய்யுங்கள். 

Popular Posts