Sunday, April 12, 2026

“இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday)

திருத்தந்தை Pope John Paul II அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டில் போலந்து நாட்டைச் சேர்ந்த புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார். அதே நாளில், பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை “இறை இரக்கத்தின் ஞாயிறு” (Divine Mercy Sunday) என்று திருச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புனிதர் Saint Faustina Kowalska அவர்களுக்கு 1930 ஆம் ஆண்டில் இயேசுவின் திருஇருதயக் காட்சி அருளப்பட்டது. அந்தக் காட்சியின் மூலம், உலகமெங்கும் இறை இரக்கத்தின் செய்தி பரவ வேண்டுமென்று ஆண்டவர் அவரை அழைத்தார். 

உயிர்த்த இயேசு ஆண்டவருடைய திரு இதயத்தில் இருந்து வெண்மை மற்றும் சிவப்பு நிற கதிர்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வெள்ளைக்கதிர் திருமுழுக்கையும்,  சிவப்பு  நற்கருணை திருவருட்சாதனத்தையும் குறிப்பிடுகிறது. இதனால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது: இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக நாமும் இந்த அகில உலகமும் மீட்கப்படுகின்றோம். இந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? ஒப்புரவு அருட்சதனம் பெற்றுக்கொண்டு, நற்கருணையை உண்டோமேயென்றால் நம்முடைய அனைத்து  நிந்தைகளுக்கும் பரிகாரம் கிட்டும். 

பெற்றோர்கள் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு கடவுளை "தண்டிக்கும் கடவுளாக" அறிமுகப்படுத்துகிறார்கள். தவறு செய்தால் கடவுள் கண்ணை குத்திவிடுவார். தீமைகள் செய்பவர்கள் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போலப்படுவர் என்று ஆயுதம் ஏந்திய கடவுளாக நாம் அறிமுகப்படுத்துகின்றோம். ஆனால் திருத்தந்தி பிரான்சிஸ் "கடவுளின் முகம் இரக்கம்" என்று அழைக்கிறார். 

கடவுளின் இரக்கம் எப்படி வெளிப்படுகிறது? என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நற்செய்தி, கடவுள் அவரது இதயத்தை நம் விரலால் தொடக்கூடிய அளவுக்கு நெருங்கி வருகிறார் என்று சொல்கிறது. பலவீனம் பலவீனங்கள் கொண்ட இந்த மானுட உலகை, கடவுள் நேசிக்கிறார், ஏற்றுக்கொள்கிறார். அவர்களை தம்முடைய இதயத்தைத் தொட, இதயத்தில் இருந்து அருளை பெற்றுக்கொள்ள அழைக்கிறார். 

இயேசு, குறைபாடுகள், பலவீனங்கள், அச்சம், கலக்கம், பயம் கொண்ட சீடர்கள் மேல், ஊதி, தூய அனுப்புகிறார், அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்கிறார். சீடர்கள் ஒருவரை மற்றொருவர் மன்னிக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார். பாவ சங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும். திருத்தந்தையே பாவ அறிக்கை செய்கிறார்.  ஆகவே நாம் அனைவரும் பாவிகள். நம் உடல் மன நோய்கள் பாவக்கட்டுகள் அகல நாம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்ய வேண்டும். பிலிப்பைன்ஸ் நாட்டில் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்காக நோயிற்பூசுதல் தந்த அனுபவம். ஆகவே ஆன்மீக தயாரிப்பு அவசியம். 

திரு அவையில் எவ்வளவுதான், கூட்டு அறிக்கை அல்லது கூட்டு ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தனிப்பட்ட விசுவாசம், இறை நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட ஜெபத்திற்கு எப்போதுமே வல்லமை உண்டு . இறைவன் அதை விரும்புகிறார். இயேசுவின் சீடரான தோமையார், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" 

தோமா இயேசுவின் இதயத்தை தொட்டு அவரை தனிப்பட்ட அனுபவத்தினால் அடைய எண்ணுகிறார். அனுபவம் பெறுகிறார்; "என் கடவுளே! என் ஆண்டவரே! என அறிக்கையிடுகிறார். இயேசுவின் ஐந்து காயங்களும் தழும்புகளும் எதை குறிக்கின்றன? தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின் உண்மையான அன்பை குறிக்கின்றது. (யோவான் 15:13)

உடல் காயம் மற்றும் மன காயங்களால் துன்புறும் மனிதர்களை மதிக்கிறோமா?


Wednesday, April 8, 2026

Easter Vigil

பாஸ்கா ஞாயிறு 

பாஸ்கா ஞாயிறு திருவிழிப்பு திருப்பலி, திருச்சபையில் “அனைத்து திருப்பலிகளின் தாய்” என அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், இந்த இரவில் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவை விழித்திரந்து, எதிர்நோக்கி, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்பதுதான். இது சாதாரண ஒரு திருப்பலி அல்ல; இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் மனித வரலாற்றின் மாபெரும் மாற்றத்தை நினைவுகூரும் புனிதமான விழிப்பு.

நேற்றைய நாள்—புனித வெள்ளி—துயரத்தின் நாள், அமைதியின் நாள், இருளின் நாள். “மூன்று மணி முதல் இருள் உண்டாயிற்று” என்று நற்செய்தி சொல்வதை நாம் கேட்டோம். அது மனிதன் பயத்தில், குழப்பத்தில், நம்பிக்கையிழந்த நிலையில் வாழ்ந்த தருணத்தை நினைவூட்டுகிறது. சீடர்களும் பயத்தில் சிதறிப்போனார்கள்; மனித உள்ளங்கள் இருளால் மூடப்பட்டிருந்தன.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கமே நமக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது: “வாரத்தின் முதல் நாளில், விடியற்காலையில் பெண்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.” இந்த ‘விடியல்’ என்பது ஒரு சாதாரண கால குறிப்பல்ல; அது இருள் முடிந்து ஒளி பிறக்கும் தருணம். அது மரணம் முடிந்து உயிர் வெல்லும் தருணம். அது பயம் நீங்கி நம்பிக்கை எழும் தருணம்.

“ஈஸ்டர்” என்ற சொல் itself கிழக்கில் உதிக்கும் சூரியனை நினைவூட்டுகிறது. அதனால் தான் பாஸ்கா பெருவிழா ஒளியின் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய திருப்பலியில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சடங்கும்—புதிய நெருப்பு, பாஸ்கா மெழுகுவர்த்தி, ஒளி பகிர்தல்—அனைத்தும் ஒரு மெய்ப்பொருளை அறிவிக்கின்றன: இருள் நிரந்தரமல்ல; ஒளியே இறுதியில் வெல்லும்.

எனவே, இந்த புனித இரவில் நாம் நினைவுகூர வேண்டியது ஒன்றே: எவ்வளவு இருள் இருந்தாலும், கடவுளின் ஒளி அதை வெல்லும். எவ்வளவு பயம் இருந்தாலும், உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு துணைநிற்கிறார். இந்த விழிப்பு நமக்கு ஒரு அழைப்பு—இருளில் தங்காமல், ஒளியில் நடக்கவும்; நம்பிக்கையில்லாமல் வாழாமல், உயிர்த்தெழுந்த ஆண்டவருடன் புதிய வாழ்வைத் தொடங்கவும்

கத்தோலிக்கர்களில் பலர் இயேசுவின் உயிர்ப்பை உறுதியாக நம்புகிறார்கள். அதே சமயம், இயேசுவின் உயிர்ப்பை நம்ப மறுப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். ஒரு நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிக்க “உண்மை” மட்டும் போதாது; அதற்கு தகுந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் தேவையாகின்றன. அப்போதுதான் அது நியாயமான உண்மையாக ஏற்கப்படும்.

அப்படியானால், இயேசுவின் உயிர்ப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் எப்படி நிரூபிக்க முடியும்? அந்த காலத்தில் இன்றையபோல் வங்கிகள், கடைகள், வீடுகள் போன்ற இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் கிடையாது. கல்லறையின் கல் எவ்வாறு உருண்டு அகன்றது? வானதூதரின் தோற்றம் எப்படி இருந்தது? அவர்கள் சொன்ன வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டதா? இவையெல்லாவற்றிற்கும் வெளிப்படையான ஆதாரங்களை நாம் காட்ட முடியாது.

ஆனால், நண்பர்களே, உயிர்ப்பின் உண்மை கேமராவில் பதிவாக வேண்டிய ஒன்று அல்ல; அது நம் இதயத்தில் நம்பப்பட வேண்டிய உண்மை. இந்த உண்மைக்கு வலுவான சாட்சிகள் யார் என்றால், சீடர்களே. அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சாட்சிய வாழ்வு, அவர்கள் சந்தித்த துன்பங்களும் தியாகங்களும்—இவை அனைத்தும் உயிர்த்த இயேசுவை அவர்கள் உண்மையாக அனுபவித்ததற்கான வலுவான சான்றுகளாகின்றன. பயத்தில் ஓடியவர்கள் தைரியமான சாட்சிகளாக மாறினர்; இதுவே உயிர்ப்பின் ஆழ்ந்த சாட்சி.

இன்றைய உலகில் நாம் பல கேள்விகளுக்கான பதில்களை ChatGPT, Google, AI Gemini போன்றவற்றில் எளிதாகக் காணலாம். ஆனால் வாழ்க்கையின் ஆழமான உண்மைகள், அனுபவங்கள்—அவை இயந்திரங்களால் அல்ல, அனுபவித்த மனிதர்களால் மட்டுமே நமக்கு வெளிப்படுகின்றன

ஏசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு, சீடர்கள் கதவுகளை மூடி பயத்தில் மறைந்து இருந்தார்கள். மரணப் பயத்தால் ஓடியவர்கள் அவர்கள். ஆனால் உயிர்ப்புக்குப் பிறகு, அதே சீடர்கள் வெளியில் வந்து இறைவார்த்தையை தைரியமாக பகிரங்கமாக அறிவிப்பவர்களாக மாறினார்கள்.

பேதுரும் யோவானும் திருத்தூதர் செயல்கள் 4:20-ல் தலைமைச்சங்கத்தின் முன், குருமார்களிடம் உறுதியாகச் சொல்கிறார்கள்: “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பேசாமல் இருக்க முடியாது.” உயிர்த்த ஏசுவைப் பற்றிய அவர்களின் அனுபவம் அவர்களுக்கு இந்தத் தைரியத்தை அளித்தது. இந்த வீரம் எங்கே இருந்து வந்தது? 

அவர்கள் பல துன்பங்களையும் தாங்கினர். பலர் சிறை சென்றார்கள். பவுல் குறைந்தது நான்கு அல்லது ஐந்து முறை சிறைவாசம் அனுபவித்தார். பிலிப்பியில், சீலாவுடன் சேர்ந்து அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சேசரியாவில் சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அந்தச் சிறைவாசத்திலேயே அவர் கடிதங்களை எழுதத் தொடங்கினார். சிறையிலிருந்தபோதும் பல அதிசயங்கள் நிகழ்ந்தன; சிறைக் காவலரும் அவரது குடும்பத்தாரும் இரட்சிப்பைப் பெற்றார்கள்.

ஆகவே, உயிர்த்த ஏசுவின் அனுபவம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்லறையை நோக்கி வந்தவர்களை, அவர் கலிலேயாவை நோக்கி புறப்படச் செய்கிறார். இறப்பை நோக்கி பயத்தில் வாழ்ந்தவர்களை, புதிய வாழ்வை நோக்கி அழைக்கிறார். “கலிலேயாவுக்குச் செல்லுங்கள்” என்ற அழைப்பு, புதிய தொடக்கத்திற்கான அழைப்பாக மாறுகிறது.

“நற்செய்தியில் ‘உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்கு போய்க் கொண்டிருக்கிறார் ஏசு’ என்ற வார்த்தைகளின் மூலம், ஆண்டவர் ஒரு புதிய செய்தியை அளிக்கிறார். அதாவது: “பின்சென்று பார்க்காதீர்கள்; திரும்பிப் போகாதீர்கள்; முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்” என்ற அழைப்பு.

ஏசு எப்போதும் முன்னேற்றத்திற்கே அழைக்கிறார். கடந்த கால வலிகள், பாவங்கள், பழிவாங்கல்கள்—இவற்றில் சிக்கிக்கொண்டு வாழ வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அவற்றை மனதில் பிடித்துக்கொண்டு இருப்பதை விட, அவற்றை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல வேண்டும் என்று அழைக்கிறார்.

சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையில், நாமும் பழைய வாழ்க்கையின் கட்டுப்பாடுகளையும், துன்பங்களையும் விட்டுவிடாமல் பிடித்துக்கொள்கிறோம்.

ஆனால், இயேசு நமக்குக் கொடுக்கும் அழைப்பு தெளிவானது: கடந்ததை விட்டுவிட்டு, புதிய வாழ்க்கையை நோக்கி முன்னேறுங்கள். உயிர்த்த ஆண்டவர் நம்மை எப்போதும் முன்னே செல்லச் செய்கிறார்; பின்னோக்கி அல்ல

நாம் வாழ்க்கையில் “கடந்து செல்லும்” மனிதர்களாக இருக்க வேண்டும் என்ற அனுபவத்தை, இன்றைய வாசகங்கள் நமக்கு அளிக்கின்றன. குறிப்பாக, இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பாஸ்கா விழாவைக் கொண்டாடிய போது, ஆண்டவரின் தூதர் “கடந்து சென்றார்” என்று நாம் வாசிக்கிறோம். அந்தக் கடத்தல் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது விடுதலையின் தொடக்கம். அவர் கடந்து சென்றபோது, எகிப்தியர்களின் வல்லமையை முறியடித்து, இஸ்ரவேல் மக்களை பாதுகாத்தார்.

அதேபோல், செங்கடலைக் கடக்கவும் ஆண்டவர் துணையாக இருந்தார். இஸ்ரவேல் மக்களின் பார்வையில் கடல் என்பது அச்சத்தையும் தீமையையும் குறிக்கும் ஒரு அடையாளமாக இருந்தது. ஆனால் அந்தக் கடலைக் கடந்து சென்ற அனுபவத்தின் முடிவில், அவர்கள் கடவுளிலும் மோசேயிலும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.

இதனால், “கடந்து செல்லுதல்” என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் ஒரு முக்கியமான அழைப்பு. துன்பங்களையும், சோதனைகளையும், தீமைகளையும் கடந்து செல்ல வேண்டும்; அவற்றில் நின்று விடக்கூடாது.

இரண்டாவது, அபிரகாம் தனது மகன் இசாக்கைப் பலியிடுவதற்காக மூரியா மலைக்கு சென்றதை நாம் நினைவுகூர்கிறோம். அது ஒரு பெரிய சோதனை. ஆனால் அவர் பின்வாங்கவில்லை; நம்பிக்கையுடன் முன்னேறினார். அதுபோல, இயேசுவும் சிலுவையைச் சுமந்து முன்னேறினார். அவர் மூன்று முறை விழுந்தார்; ஆனாலும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

கடவுள், அபிரகாமுக்கு இசாக்கை மீண்டும் அளித்தது போலவே, உயிர்த்தெழுந்த இயேசுவை நமக்குக் கொடுக்கிறார். இது நமக்கு புதிய நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் அளிக்கிறது.

மேலும், ழைய ஏற்பாட்டில், தொடக்க நூல் 19:24-ல், சோதோம் நகரத்தை கடவுள் அழித்ததை நாம் வாசிக்கிறோம். கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்து அந்த நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் லோத்தின் குடும்பத்தாருக்கு மட்டும் ஒரு கட்டளை வழங்கப்பட்டது: “திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள்” என்று. ஆனால் லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள்; அதனால் அவள் உப்புத்தூணாக மாறினாள். ஏன் இவ்வளவு கடுமையான தண்டனை? விவிலியத்தின் பார்வையில் “திரும்பிப் பார்த்தல்” என்பது கடவுளின் இறை பராமரிப்புக்கு எதிரான பாவம்.

உயிர்த்தெழுந்த இயேசு நமக்கு ஒளியின் நாளை அளிக்கிறார்; புதிய வாழ்வை வழங்குகிறார். எனவே அவர் நமக்குக் கூறும் அழைப்பு தெளிவானது: “திரும்பிப் பார்க்காதீர்கள்.” கடந்த வாழ்க்கை, கடந்த காயங்கள், கடந்த பாவங்கள், கடந்த அவமானங்கள், தோல்விகள்—இவற்றில் தங்கிவிடாதீர்கள். நமது கடந்த காலத்தைப் பற்றி தொடர்ந்து நினைத்து, அதில் சிக்கிக்கொண்டு இருப்பதை நிறுத்த வேண்டும். வேதனையான அனுபவங்கள் நிரந்தரமானவை அல்ல; அவை தற்காலிகமானவை. அந்த வேதனைகளே நம்மை வளர்ச்சிக்குத் தள்ளும் ஒரு வலிமையாக மாறலாம்.

ஆகையால், இந்த உயிர்ப்பு பெருவிழாவில், புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்வோம்.

அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்.



.


Thursday, April 2, 2026

எந்தக் கடவுள் போரை நிறுத்துவார்?

புனித வெள்ளி மறையுரை

அன்புடைய சகோதரர் சகோதரிகளே,

மனித வரலாறு இரண்டு மரங்களின் நடுவே நிற்கிறது.

முதல் மரம் – தொடக்க நூலில் காணப்படும் நன்மைத் தீமை அறியக் கூடிய மரம்.

அது கண்களுக்கு இனிமையானது. விரும்பத் தக்கது.

மனிதன் கீழ்ப்படியாமையைத் தேர்ந்தெடுத்தான். 

அந்த மரத்தின் கனியை உண்டபோது, பாவம் உலகிற்குள் நுழைந்தது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

அந்த மரம் அழகாகத் தோன்றினாலும், அதன் விளைவு மரணம்.

இரண்டாவது மரம் – சிலுவை மரம்.

அது அவமானத்தின் சின்னம். குற்றவாளிகளுக்கே உரிய தண்டனை.

ஆனால் அந்த சிலுவைமேல் நின்றவர் இயேசு.

அவர் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்தார்:

“அப்பா, என் சித்தமல்ல, உமது சித்தமே ஆகட்டும்” என்றார்.


திரு. பவுல் சொல்லும் வார்த்தை நமக்கு நினைவில் வருகிறது (ரோமர் 5):

"ஒரு மனிதனால் பாவம் உலகில் நுழைந்தது; மற்றொரு மனிதனால் இரட்சிப்பு உலகில் வந்தது."


  • அந்த முதல் மரம் மனிதனை வீழ்த்தியது.
  • இந்த இரண்டாவது மரம் மனிதனை எழுப்புகிறது.

இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளி சடங்குகள் நடைபெறுகின்றன.

ஆனால் சில இடங்களில்—இஸ்ரேல், காசா, லெபனான்— பாதுகாப்பு காரணமாக அந்த சடங்குகளே தடைபடுகின்றன.


நாம் கேட்கத் தொடங்குகிறோம்: இது புனித பூமியா? அல்லது சபிக்கப்பட்ட பூமியா?

எத்தனை போர்கள்!எத்தனை அழிவுகள்!

சாதாரண மனிதர்கள் கட்டிய வீடுகள், அன்புடன் வளர்த்த பிள்ளைகள் எங்கேயோ இருந்து வரும் குண்டுகளால் அழிக்கப்படுகின்றனர்.


திருத்தந்தை ஃபிரான்சிஸ் கூறியதுபோல்:“போரில் யாரும் வெற்றி பெறவில்லை; அனைவரும் தோல்வியடைந்தவர்களே.” In a war, there is no real winner, all are losers.

அப்போது மனிதன் கேட்கிறான்: “கடவுள் எங்கே?” “எந்த கடவுளை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும்?” “எந்தக் கடவுள் இந்த போரை நிறுத்துவார்?”


ஒரு மனிதன் சாலையில் சென்று கொண்டிருந்தான். திடீரென பாதாள சாக்கடியில் விழுந்துவிட்டான். முதல் இருவர் கம்பும் கயிறும் கொடுத்தனர்—அவர்கள் உதவி செய்ய விரும்பினர், ஆனால் தொலைவில் இருந்தனர்.

மூன்றாவது ஒருவர் வந்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் உடனே உள்ளே குதித்தார். தன்னுடைய தோள்களில் அவனைத் தாங்கி அவனை காப்பாற்றினார். அந்த மனிதனைத் தனது தோள்களில் சுமந்து மேலே கொண்டுவந்தார்.

அவர்தான் இயேசு.

மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்;

இயேசு காப்பாற்றுகிறார்.


அதுவே சிலுவையின் அர்த்தம்:

தொலைவில் இருந்து பார்க்கும் கடவுள் அல்ல,

உள்ளே இறங்கி நம்மைத் தூக்கும் கடவுள்.


பிலிப்பியர் 2:10-11:

“இயேசுவின் நாமத்தில் விண்ணிலும், மண்ணிலும், மண்ணுக்குக் கீழிலும் உள்ள அனைவரும் மண்டியிடுவார்கள்; அனைத்து நாவுகளும் ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என்று அறிவிப்பார்கள்.”

Every knee Shall Babu in front of the grass every time shall profess the name of Christ?

புனித வெள்ளியில் நாம் என்ன செய்வோம்?

ஜெபிப்போம்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்போம்.

நம் தலைவர்களுக்காக ஜெபிப்போம்.

மன்னிப்போம். மன்னிப்பு கேட்போம்.


ஏனெனில்,

முதல் மரம் பாவத்தை கொண்டு வந்தது;

சிலுவை மரம் மன்னிப்பை அளிக்கிறது.


முதல் மரம் மனிதனை கடவுளிடமிருந்து பிரித்தது;

சிலுவை மரம் மனிதனை மீண்டும் கடவுளோடு இணைக்கிறது.

இன்று நாம் தேர்வு செய்ய வேண்டியது இதுதான்:

கீழ்ப்படியாமையின் மரமா?

அல்லது கீழ்ப்படிதலின் சிலுவையா?


ஆமென்.


Popular Posts