இயேசுவின் திருஇருதயம், பெருவிழா
இச 7:6-11. 1 யோவா 4:7-16. மத் 11:25-30
கடவுள் அன்பாய் இருக்கிறார்
24 அக்டோபர் 2024 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் ‘திலெக்ஸித் நோஸ்’ (‘அவர் நம்மை அன்பு செய்தார்’) என்னும் தன் நான்காவது சுற்றுமடலை வெளியிட்டார். இச்சுற்றுமடலின் நோக்கம் என்ன? (அ) இயேசு கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்தல். (ஆ) மேலோட்டமான இந்த உலகத்தை விடுத்து நம் வாழ்வின் மையத்துக்குக் கடந்துசெல்தல். (இ) இயேசுவின் தூய்மைமிகு இதய பக்திமுயற்சி நமக்கு விடுக்கும் சமூக கடமைகளைப் புரிந்துகொள்தல்.
(அ) பெருவிழா வரலாற்றுப் பின்புலம்
1. விவிலியத்தில் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் பல திரு அவை குருக்கள் எழுதியுள்ளார்கள்.
2. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇருதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.
3. திருத்தந்தை 9-ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13-ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11-ஆம் பயஸ் ‘இரக்கம்நிறை மீட்பர்’ என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.
(ஆ) திருஇதய பக்தி முயற்சிகள்
1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல்.
2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.
3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.
4. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.
(இ) திருஇதயம் நமக்கு முன்வைக்கும் பாடங்கள்
2. அன்பே சிவம்: அன்பு என்னும் செயல்
அவர் தம் மக்கள்மேல் கொண்ட அன்பினால் அவர்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். கடவுளின் அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, நம் உள்ளத்தில் உணரும் ஒரு சிந்தனை அல்ல. மாறாக, நமக்கு வெளியே காணக்கூடிய அளவில் நிகழ்ந்தேறும் செயல். நாம் வாழ்வில் ஏற்படும் மாற்றம். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அன்புக்காக ஏங்குகிறோம். வலிமையான யானை, அன்பு ஒருவனை மாற்றுகிறது ஒருவனை குணப்படுத்துகிறது. காரணம் அன்பே அன்பே கடவுள்.
2. அன்பு நம்மை காயப்படுத்தும்: நம் அன்புக்குத் தூண்டுதல்
அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார். அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். இயேசுவின் இதயத்தில் முட்கள் நமக்குள் இருந்து வழிந்து ஓடும் ரத்தம் போர் வீரர்கள் படைவீரர்கள் சிலுவையிலும் அவர் குணப்படுத்துகிறார். தண்ணீரும், இரத்தமும்.
நாம் பாவம் செய்யும்போது கடவுளை காயப்படுத்துகிறோம் கடவுளுடைய இதயத்துக்கு எதிராக குற்றம் செய்கிறோம்.
3. தொடர் கற்றல்
நம் சுமைகளை அகற்றுவதாக வாக்களிக்கிற இயேசு அவருடைய சுமைகளை நம்மேல் ஏற்றுமாறு நம்மை அழைக்கிறார் (நற்செய்தி வாசகம்). ‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். நாம் சொற்களைப் பயன்படுத்திப் பேசும்போது நம் மொழி வளர்வதுபோல, அன்பு என்னும் செயலும் நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கு எளிதாகிறது.
நீங்களும் ஆண்டவரைப் போல அன்பு செய் கடவுளைப் போல அன்பு செய்ய வேண்டும் ஒருவரை ஒருவர் அன்பு செய்கிற நிபந்தனை இல்லாமல் அன்பு செய் காயப்படுத்துகிறது உங்களுக்கு உபத்திரம் செய்பவர்களுக்கு அன்பு செய்யுங்கள்.