Wednesday, December 3, 2025

FIRST HOLY COMMUNION

நற்கருணை புதுமைகள் மற்ற அனைத்து புதுமைகளையும் விட (மரியா மற்றும் புனித அந்தோணியார்) பெயரிலே நிறைவேற்றும் புதுமைகளைவிட மேலானது. காரணம் இங்கே ஆண்டவர் இயேசுவின் நேரடியான பிரசன்னம் செயலாற்றுகிறது.

 2024 ஆம் ஆண்டு வெளிவந்த Miracles of Carlo Acutis  புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். எப்போது நற்கருணை புதுமைகள் நடக்கின்றன. குருவானவர் அல்லது ஆயர் ஆண்டவருடைய உடல் மீது ஐயப்பப்படும் போது அல்லது மக்கள் சில நேரம் ஐயப்படும் போது இந்த புதுமையும் நடக்கின்றன என்று கூறுகின்றனர். 

ஆனால் நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அனுதினமும், எப்பொழுதெல்லாம் திருப்பலி நடக்கின்றதோ அப்போது இந்தப் புதுமை நடக்கின்றது. நம் கண்களுக்கு புலப்படுவதில்லை ஆனால்  அப்பம் ஆண்டவருடைய உடலாகவும், ரசம் ஆண்டவருடைய ரத்தமாகும் மாறுகின்றது. 

நற்கருணை உட்கொள்ளும் போது உடல், உள்ள ஆன்ம தயாரிப்பு அவசியம்.

1. உடலை தயாரிக்க வேண்டும்: நன்கு குளித்துவிட்டு, பல் துலக்கி கைகளை சுத்தம் செய்து நற்கருணை வாங்க வேண்டும். நற்கருணை ஆராதனை போது முழந்தால் பணியிட்டு ஆராதனை செலுத்த வேண்டும். மது பிரியர் ஜோக், நாவில் வாங்குபவர்கள் நாவில் வாங்கலாம் அல்லது கைகளை எளிமையாக திறந்து வைக்கவும். இடது கையை மேலேயும், வலது கையை கீழேயும் வைத்து வாங்கவும். ஆமென் என்று சத்தமாக சொல்லவும். 

2. உள்ள தயாரிப்பும் அவசியம் காரணம் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்துவிட்டு மேற்கொண்டு உட்கொள்ள வேண்டும். 

Dine in and Dine out அனுபவம். ஒரு ஓட்டலுக்குச் சென்றால் உள்ளே அமர்ந்து கொண்டு அனைவரும் பேசி நாம் உண்ணலாம் அல்லது பார்சல் வாங்கி வெளியே வந்து நமக்கு பிடித்தமான இடத்திலோ வீட்டிலோ அமர்ந்து வசதியாக உண்ணலாம் இதை இரண்டும் அவரவர் அனுபவத்திற்கு ஏற்றார் போல நற்கருணியை பெறுவதிலும் இந்த இரண்டு அனுபவமும் முக்கிய பங்கு வைக்கின்றன நற்கருணை உங்களை மாற்றுகிறது உங்கள் சமூகத்தையும் மாற்றுகிறது இயேசுவை உட்கொண்டவர் இன்னொரு ஏசுவாக செயல்பட வேண்டும்

Tuesday, December 2, 2025

International Day of Persons with Disability (December 3)

இன்று புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலரின்
பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதே நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.  நமது சபைக்கு மிகவும் நெருக்கமான இந்த மாற்றுத்திறனாளிகளை பற்றி ஒருசில சிந்தனைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
  • சமூகத்தில் ஏன் இந்த மாற்றுத்திறனாளிகள்?
  • கடவுள் எதற்காக இவ்வுலகில் ஊனமுற்றவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் படைத்தார்? 
  • எதற்காக இத்தனை குறைபாடுகள், ஏனிந்த ஊனங்கள்? 

விவிலியத்தின் தொடக்க நூலின் அனைத்து மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட உள்ளார்கள் என்று வாசிக்க காண்கிறோம் (தொ.நூ 1:27) 

அன்றைய காலத்தில் ‘ஊனம்’ என்பது கடவுளின் தண்டனை அல்லது சாபம் என்று மக்கள் நம்பினர். ஆனால் விவிலியம் “கடவுளின் செயல்கள் ஊனம் மூலம் வெளிப்படுத்தப்படலாம்” என்று கூறுகிறது. "கடவுளின் செயல்கள் அவரில் வெளிப்படும் பொருட்டு இது நடந்தது." - (யோ 9:3) ஊனம் என்பது ஒரு குறைபாடு அல்ல. கடவுள் அவர்களின் மூலமும் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.


19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் லூயிஸ் குவனெல்லா “மாற்றுத்திறனாளிகள் கடவுளின் பரிசுகள்” என்று கூறினார். அவர்கள் விண்ணகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடவுளின் தேவதூதர்கள்.  மாற்றுத்திறனாளிகளை “செல்ல குழந்தைகள்” என்றழைத்தார். 

ஒரு அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தவன் வளர்ந்து மருத்துவராகி சாதிக்கத் துவங்கி விட்டான். இளையவன் இன்ஜினியராகி இல்லத்தில் இனிதே நுழைந்து விட்டான். மூன்றாவது மகனோ, இரண்டு கால்களையும் இளம்பிள்ளை வாதத்தால் இழந்து, வாழ்க்கையை வருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார். 

இந்த மூவரில் அப்பாவின் பாசத்துக்குரிய செல்ல மகன் யார்? சந்தேகமே இல்லாமல் ஊனத்தோடு பிறந்த மூன்றாவது மகனே தந்தையின் பார்வையில் செல்ல குழந்தையாய் தெரிகிறான். 

கடவுளைத் தந்தையாக பாவித்த அவருக்கு "செல்லக் குழந்தையாக" தெரிகிறார்கள், இந்த உலகின் கடை எல்லை வரை ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள். போலிகளைப் படைத்து வெறுத்து போன இறைவன் ஒரு மாற்றத்திற்காக உண்மை உயிரை, முழுமையற்ற உடலுக்குள் வைத்து படைத்தார். அவர்கள் தான் கடவுளின் பிரதிநிதிகள். இந்தப் புரிதலினாலே மிகவும் நெருக்கமாக தான் அன்பு செய்த, உடல் நலம் குன்றிய குழந்தைகளை தான் தோற்றுவித்த சபைகளின் முதன்மைப் பணியாக செய்தார்.

ஒருமுறை கோமோ நகர ஆயர் அவர்கள் அந்நகரத்தில் குவனெல்லா தோற்றுவித்த இல்லமான இறைபராமரிப்பு இல்லத்தின் கதவுகளைத் தட்டி தான் குவனெல்லாவைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அந்த இல்லத்து பணியாளர் ஒருவர், "தந்தை குவனெல்லா, தனது இல்லத்தில் செல்லக் குழந்தைகளோடு சீட்டு விளையான்டு கொண்டிருப்பதைக் கூறினார்". இதைக் கேட்டவுடன் சிறிது அப்சட்டான ஆயர், “மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் விளையாட வாய்ப்பில்லை. புனிதரை விரைவில் அழைத்து வாருங்கள்” என்றார். அந்த பணியாளரோ, "ஆம் ஆயர் அவர்களே! செல்லக் குழந்தைகளை உயர்ந்தவர்களாக மதிக்கும் வரை அவர்களுக்கு விளையாட்டுகள் புரியப் போவதில்லை” என்றார். பிறகு என்ன! ஆயர் நீண்ட நேரம் விளையாட்டு முடியும் வரை இருந்து குவனெல்லாவை சந்தித்து தான் சென்றார். செல்லக் குழந்தைகள் தான் அவரது நிறுவனத்தின் முதலாளிகள். அவர்களின் நிமிடத் துளிகளை மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு, தன்னுடைய மணித்துளிகளையும் செலவிட தயங்கவில்லை.

அன்பின் பணியாளர் சபையைத் துவங்கிய நேரங்களில் தனது சபையில் சேர விரும்பும் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்திட ஒவ்வொரு மறைமாவட்ட பங்குகளிலும் சென்று இறையழைத்தல் கூட்டம் ஏற்பாடு செய்தார். அவர் எப்போது வெளியே சென்றாலும் தன்னோடு ஐந்தாறு செல்ல குழந்தைகளையும் கூட்டிச் செல்வார்கள். ஒருமுறை கோமா நகரத்து பங்கு இளைஞர்களை சந்தித்தபோது குவனெல்லாவோடு வந்திருக்கிற செல்லக் குழந்தைகளை பார்த்து அவர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு தந்தை குவனெல்லா, “இந்த சிறப்பு குழந்தைகளிடம் உங்களிடமும், என்னிடமும் இல்லாத ஆற்றல் ஒன்று உள்ளது. ஏனெனில் அவர்கள் கடவுளின் சிறப்பு அருள் பெற்றவர்கள் (Innocence and angelic grace).  

செல்லக் குழந்தைகளை எந்த வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்கள் அன்பின் பணியாளர் சபையில் சேரலாம். பட்டப்படிப்புகளும், நூலகங்களும் தர முடியாத அனுபவங்களை இவர்களின் அருகாமையில் அறிந்து கொள்ளலாம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகம் அறிவியலின் பயனை அனுபவிக்கும் உலகம். இங்கு அறிவு தான் அனைத்தையும் அளக்கும் அளவுகோல்! தோற்றம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் கருவி! அழகை கண்டு கொள்வதும் அன்பு செய்வதும் மனிதருக்கு மிக எளிது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மறைந்து கிடக்கும் திறன்களையும் அறிந்த அன்பு செய்வது என்பது மிக அரிது.

இன்றைய தினத்தில் நமது இல்லங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இருக்கும் அனைத்து இருக்கும் அனைத்து மாற்று திறனாளிகளும் அன்பு, அரவணைப்பு மற்றும் கண்ணியம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தி ஜெபிக்கும் குவனெல்லிய இல்லங்கள். 


Monday, December 1, 2025

The Face of the Faceless (2025)

சினிமா துறையில் நமது மண்ணைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ படம் 2024ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, 123க்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளைக் குவித்திருக்கிறது, அது, மாதா டிவி பெருமையுடன் வழங்கி வெளியிட்ட "ஃபேஸ் ஆப் தி பேஸ்லஸ்". "முகம் இல்லாதவர்களுக்கு முகமாக" என்னும் இந்தியத் திரைப்படம். 

1954ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து வளர்ந்த ராணி மரியா (அருட்சகோதரி) மத்திய பிரதேசத்திலே உள்ள உதயநகர் என்னும் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களுக்காக தன் வாழ்வையே கொடுத்த ஒரு உண்மை கதைதான் இந்தப் படம். அவர்களுக்கு படிப்பு வசதி இல்லாது, ஏழ்மையான நிலையில் மிகவும் தாழ்வுற்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த மக்களை முன்னேற்ற களத்தில் இறங்குகிறார். ஆனால் இதை அந்த பழங்குடியின மக்களே புரிந்து கொள்ளவில்லை, அவரை அடித்தும் விரட்டுகிறார்கள்.


ராணி மரியா தான் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் தொடர்ந்து அந்த மக்களுக்காக உதவுகிறார். தன்னுடைய கண்முன்னே நடக்கக்கூடிய அநீதிகளை எல்லாம் தட்டி கேட்கிறார்,  குழந்தைகளுக்கு படிப்பு, தொழில் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த உதவுகிறார். ஆதிக்க சக்திகள், நில உடமையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். இறுதியில் ராணிமரியா அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

புதுமுக இயக்குனர் 'சாய்ச்சன் பி ஓசப்' மக்களுக்கு நல்ல ரியாலிட்டி வாழ்வை ஒரு கதையாக எடுத்துச் சொல்ல முயற்சித்ததற்காகவே ஒரு விசில். வின்சி அலோசியஸ் தான் ராணிமரியாவாகவே வாழ்ந்திருப்பது பாராட்டுக்குரியது. மாதா தொலைக்காட்சி தமிழிலும் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்தது துல்லியமான வேலை. அருட் சகோதரியோடு தொடர்ந்து ஒரு தோழியாகவே பயணம் செய்யக்கூடிய பழங்குடியினத்து பெண்ணாக சோனாலி என்பவர் நடித்திருக்கிறார். அவரும் உண்மையாகவே சிறப்பான ஒரு தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து பொருள் உணர்ந்து நடித்திருக்கிறார்.  

இந்த திரைப்படத்தில் பல உணர்ச்சி ததும்பக்கூடிய தருணங்களை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பழங்குடியின மக்களின் மூட நம்பிக்கையினால் ஒரு பெண்ணினுடைய மரணம்,  மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ராணிமரியாவின் தலைமையிலே கட்டிய சிறிய பள்ளிக்கூடம், கிணறு, கிராமதத்துக் குழந்தைகளின் எதார்த்தமான நடிப்பு இவையெல்லாம் படத்திற்கு ப்ளஸ். 

கிளைமாக்ஸில் அருட் சகோதரினுடைய தாய் கொலை செய்தனுடைய கரங்களை பற்றி பிடித்து கொண்டு, "என்னுடைய மகளின் இரத்தம் தோய்ந்த அந்த கரங்களை நான் முத்தமிடலாமா!" என்று சொல்லி முத்தமிட்ட அந்த காட்சி நம்முடைய கண்களை கலங்க வைக்கிறது. மன்னிப்பின் மகத்துவத்தை எடுத்துச் சொல்கிறது. நாம் எப்படிப்பட்ட நிலையிலும் மன்னிக்க முடியும் என்று கண்ணீரில் எண்ட் கார்டு போடுகிறார்கள். 

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தஃபேஸ் ஆப் தி பேஸ்லெஸ் திரைப்படம் "சிறந்த கிறிஸ்தவ திரைப்படம்" என்று அறிவித்திருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும், கண்டு பகிர வேண்டிய நல்ல திரைப்படம். 

Overall Rating:  6.0 / 10

FRANKENSTEIN (2025)

Frankenstein – இறைவார்த்தையின் வெளிச்சத்தில் ஒரு பார்வை

Frankenstein திரைப்படம் வெறும் திகில் படமல்ல; அது மனிதன், படைப்பு, பொறுப்பு, மற்றும் அன்பு குறித்து கேள்வி எழுப்பும் ஒரு ஆழமான கருவைத் தாங்கிய திகில்படம். 

"இறைவன் தாம் படைத்த அனைத்தையும் நல்லதாகவே கண்டார்” (தொடக்கம் 1:31). இந்த உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் இறைவனிடமிருந்து வந்ததே. மனிதன் சிறு பொருட்களை உருவாக்கினாலுமே, அவன் இறைவனின் இடத்தைப் பிடிக்க முடியாது. 


1818ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் 'Frankenstein'  இன்று வரை மொத்தம் 423 முழுநீள திரைப்படங்கள், 204 குறும்படங்கள், 78 தொலைக்காட்சி தொடர்களில் இந்த நாவல் எடுத்தாளப் பட்டிருக்கிறது. இம்முறை Guillermo del Toro (The Shape of Water க்காக சிறந்த இயக்குனர் விருது பெற்ற ஹாலிவுட்டின் சிறந்த/பிரம்மாண்ட இயக்குனர் என்றே சொல்வேன்) இந்த கதையை செய்திருக்கிறார். 

கதை: மருத்துவர் victor Frankensteinக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஒன்று உண்டாகிறது. பல்வேறு இறந்தவர்களின் உடலில் இருந்து ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஒன்றாக இணைத்து ஒரே ஆளாக ஓர் உயிரை உண்டாக்கிவிடவேண்டும், அதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறார். அரசாங்கம் இதனை "கடவுளுக்கு எதிரான செயல்" என மறுக்கிறது. செல்வந்தர் ஒருவரின் துணையோடு இந்த ஆராய்ச்சியை செய்து ஒரு மனிதனை உண்டாக்கியும் விடுகிறார். அந்த மனிதனுக்கு இறப்பு என்பதே இல்லை. அவனை யாராலும் அழிக்கவும் முடியாது. அளப்பரிய உடல் பலத்தோடு இருக்கிறான், எல்லா காயங்களும் உடனுக்குடன் தாமாகவே ஆறிவிடுகின்றன. எந்த ஆயுதமும் அவனை சாகடிக்காது. இத்தனை ஆற்றல் இருக்கக் கூடிய ஒருவன் மனிதன் அல்ல மிருகம் என நினைக்கிறார் victor Frankenstein. அதன் விளைவுகளை எப்படி சந்திக்கிறார் என்பதே கதை.   

Frankenstein இல் உருவாக்கப்படும் உயிர் ஒரு “அரக்கன்” அல்லஅவன் அன்புக்காக ஏங்கும் ஒரு படைப்பு. "என்னால் தனிமையாக இருக்க முடியவில்லை, நீ என்னை ஏதோ விலங்கு என நினைத்து அழிக்கப் பார்த்தாய். ஆனால் எனக்குள் மனித உணர்வுகள் இருக்கின்றன, என்னை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அதனால் எனக்கு என்னைப் போலவே இன்னொரு துணையை உண்டாக்கித் தா" விக்டர் மறுக்கிறார். "ஒன்று நீ அழி. அல்லது என்னை அழித்து விடு. நீ, நான் அடையும் எல்லா துயரங்களையும் அடையவேண்டும். வலியை அனுபவிக்க வேண்டும்" என்று விக்டரை துன்புறுத்தத் தொடங்குகிறான். 

  • அரக்கன் உருவானது ஆய்வகத்தில் அல்ல;
  • மனித இதயத்தில் அன்பு இல்லாத இடத்தில்தான்.

மனிதன் அன்பு செய்ய மறுக்கப் படும்போதுதான் விடுதலையும் இல்லாமல் சிறையும் இல்லாமல் நரகத்தை அனுபவிக்கிறான். திருவிவிலியம் கேட்கும் கேள்வி இதுதான்: “உன் சகோதரன் எங்கே?” (தொடக்கம் 4:9) இந்தக் கேள்வியே Frankenstein கதையின் மையம்.

நாம் உருவாக்கியதை, பெற்றதை, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை அன்போடு கவனிக்கிறோமா? இல்லையா? ஒவ்வொரு மனிதனையும் காயினாக மாற்றுவதும், இன்னொரு கடவுளின் சாயலாக மாற்றுவதும் நம் பார்வையில் தான் உள்ளது. அன்பில்லாத அறிவு அபாயமாக மாறும். பொறுப்பில்லாத படைப்பு அழிவை உருவாக்கும்.

படத்தில் அவன் மீது எலிசெபத்க்கு வருகின்ற பிரியம்-காதல் புரிந்துகொள்ளக் கூடியதே! - The Shape of Waterன் எலிசா தான் நினைவுக்கு வந்தாள். (இயக்குனரின் அற்புதமான இன்னொரு படம்!) அடித்து சொல்கிறோம் இயக்குனருக்கு விருது காத்திருக்கிறது. 

Frankenstein நமக்கு சொல்லும் இறைவார்த்தைச் செய்தி இதுதான்: "அன்பு இல்லாமல் எந்த உயிரும் மனிதராக மாற முடியாது".

Overall Rating:  8.0 / 10

Tuesday of the 1st Week of Advent

Is 11:1-10; Lk 10:21-24

Brothers and Sisters! Do you feel you are cut down by failures, relationship problems, financial crisis, depression, or anxiety?

When everything seems broken or lost, God still creates new beginnings. The coming of the Messiah, the Son of David, is the sign of hope for our lives.

Today’s first reading opens with the prophecy: “A shoot shall sprout from the stump of Jesse.” (Is 11:1)

Who is the father of King David? Jesse.

In the time of Isaiah, the people thought the Kingdom of Israel would be cut down, just like a dead stump. Exile, sin, and defeat made it seem as though the story of God’s people would end. But the prophet announces something astonishing: God can bring life from what looks like nothing.




  • He can grow greatness from your brokenness.
  • He can restore hope when the world sees only ruins.
  • This is the power of our God — life through the Messiah.

The Spirit of the Lord rests upon Him: wisdom, understanding, counsel, and strength.

What once was dead will bear fruit again. Do not feel tired, wounded and ended. Life would begin at any time.

In the Gospel, Jesus rejoices in the Spirit and tells us that this revelation is not given to the proud, the powerful, or the worldly wise, but to the humble—to those with the heart of a child. God’s kingdom is accessed not through intellect or status, but through trust, simplicity, and openness.

As we prepare our hearts in this Advent season, let us welcome Christ with childlike faith. When we kneel before Him as children of the Kingdom, we discover that no stump in our life is truly dead—because where Jesus enters, new life begins.

Friday, November 14, 2025

34th Sunday Ordinary time,

ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், திங்கள்

தானியேல் 1:1-6, 8-20. லூக்கா 21:1-4

(Thanks: Fr. Yesu Karunanidhi, blogger)

கண்ணீரும் காசும்

‘இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை’ என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். ‘கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்’ என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை’ நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை ‘கைம்பெண்’ என அழைக்க, லூக்கா மட்டும், ‘அவர் வறுமையில் வாடியவர்’ என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.

நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:

(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்

‘பற்றாக்குறை’ என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்

அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.

(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது.

லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை’ என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, ‘அன்றைய நாளைப் பற்றிக் கூட’ அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.

நிற்க.

இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. ‘கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்’ என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா?

கைம்பெண்களின் கடைசிக் காசைப் பெற்றுத்தான் ஆலயமும் ஆலயத்தின் குருக்களும் வாழ வேண்டுமெனில் அத்தகைய அமைப்புகள் தேவையா? அமைப்பை உடைப்பதை விடுத்து அமைப்புக்குள் மக்கள் தங்களையே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல இருக்கிறது இயேசுவின் செயல்பாடு. இன்றும் சில நேரங்களில் சில இடங்களில், ‘ஏழைக் கைம்பெண் போல அனைத்தையும் காணிக்கை போடுங்கள்’ என்று அருள்பணியாளர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் வானளவாகக் கோவில் கட்டவும், ஊர் பாராட்ட சப்பரம் இழுப்பதற்கும் இன்றும் ஏழைகளும் கைம்பெண்களும் தங்கள் கடைசிக் காசுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய கண்ணீரும் நம் ஆசையும் ஒருபோதும் குறைவதில்லை!

Saturday, November 8, 2025

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !

ஞாயிறு, 9 நவம்பர் ’25

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !  

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா; எசே 47:1-2, 8-9, 12. 1 கொரி 3:9-11, 16-17. யோ 2:13-22

லாதெரன் பேராலய நேர்ந்தலிப்பு விழா! ஒரு ஆலயத்திற்கு இவ்வளவு பெரிய விழாவா! ஆம்! இது ஒரு பசிலிக்கா, பேராலயம்! திருத்தந்தையர்கள் அனைவரும் பாரம்பரியமாக வசித்து வந்த ஆலயம். 

இவை எல்லாவற்றையும் விட ஆலயம் என்பது கிறிஸ்துவின் மேல் எழுப்பப்பட்ட ஒரு சமூகம்! புதிய ஜோராபூர் ஆலயம்! ஒவ்வொரு ஆலயமும் அதைச் சார்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. ஆலயமணி , தேர்த்திருவிழா, சப்பரம், எங்க ஊரு கோயிலில் மானப்பிரச்சனை, 

இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட, சாலமோன் அரசர் கட்டிய அந்த எருசலேம் தேவாலயத்தில் இயேசுவின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்பே உருவான இயேசு, இரக்கமே உருவான இயேசு, கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, கோவிலிலிருந்து துரத்தினார்;

ஒரு சாமானியனின் கோபம் "கோபம் மூக்குக்கு மேல வருகிறது" 

விவிலிய பின்னணி: எருசலேம் நகரத்தின் பாஷ்கா விழா, 19 வயது நிரம்பிய ஒவ்வொரு யூதனும் தங்களுடைய வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாக எப்படி ஆவது எருசலேம் ஆலயத்திற்கு சென்றிருக்க வேண்டும். அப்படி செல்லும்போது இந்த காரியங்கல் செய்ய வேண்டும். 

1. அவர்கள் வரி கட்ட வேண்டும். கோவில் வரி கட்ட வேண்டும் இந்த கோவில் வரி மிக அதிகமான வரி காரணம். எருசலேமுக்கு அருகில் உள்ளவர்கள் அடிக்கடி செல்வார்கள், ஆனால் புரவினத்தார்கசல். என்றாவது ஒருவர்கள் அதிகமாக வரி கட்ட வேண்டும்.

2. காணிக்கை பலி செலுத்த வேண்டும். சந்தையில் ஆடு மாடுகள், புறாக்கள், பறவைகள் மற்றும் பலவிதமான மிருகங்கள் கடவுளுக்கு பலியிடுவதற்காக விலங்குகளை விற்க ஆரம்பித்தனர். ஏனெனில் பணக்காரர்கள் பெரிய விலங்குகளை வாங்குவார்கள். ஏழைகள் மாடப்புறாக்களை .

3. புரவினத்தாரின் நாணயங்கள் கோவிலில் நாணயங்களாக மாற்றப்பட்ட பின்னரே வரி கட்ட முடியும், ஆறில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வர். ஏழைகள் அநியாய வட்டிக்கு நாணயம் செலுத்தினார்கள். இதன் காரணத்தினாலே  திருப்பதி வேளாங்கண்ணி இந்த திருத்தலங்களை விட அதிகமான பன்மடங்கு அதிகமான காணிக்கை எருசலேம்.


யேசுவின் கோபத்திற்கு இதுவே காரணம்!  இறைவனுக்கு முதலிடத்தை கொடுக்க மறந்த மக்கள்! கடவுளின் பெயரால் ஏழைகலுக்கு நடக்கும் சமூக அநீதி! கடவுளுக்கு பலியிட தொலைவிலிருந்து கோவிலுக்கு வருகின்றார். ஏழை மக்கள் துன்பப்படுகின்றார். Courtyard is the unique place for the gentiles, for the high-priests, Pharisees and other people have their own space in the Temple of Jerusalem. The unique place for the poor is being encroached for the business purpose.  அவர்கள் வழிபடும் இடங்களில் சந்தைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன, எப்போதும் கூச்சல் இறைச்சல். 

இயேசுவின் உண்மையான கோபம் அவர் கடவுள் மீதும் ஏழைகள் மீதும் வைத்திருந்த எல்லையற்ற அன்பு வெளிப்படுத்தியது. 

1. ஆலயத்தில் கடவுளுக்கு முதலிடம்: "என்னுடைய இல்லத்தை கள்வர் குகையாக மாற்றaதீர்கல்". லூக் இiறவேண்டலின் வீடு! உடல் வழியாக, உல்லம் வழியாக வனக்கம் செய்ய வேண்டும். நறகருனை ஆராதனை.  ஆலயம் கடவுல் வசிக்கும் இடம், அவர் எஙகும் இருக்கிரார், ஆனால் கோவிலில் வசிக்கிறரர். 

நம்மை முன்னிறுத்துவதில் பயன் கிடையாது. மாராக, கடவுளுக்கே முன்னுரிமை! அதனாலே நற்கருநையே பேழை ஆலயத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். காரணம் இயேசுவே-நற்கருநையே மையம், பல நேரங்களில் நாம் ஆலயங்களை நம் பல்வேறு சொந்த பணிக்கு உபயோகப்படுத்துகிரோம். எப்பொதும் இரைச்சல், ஆட்டம், பாட்டம்! Fashion show, திறமைகளை வெளிப்படுத்தும் மேடை அல்ல! மாறாக கடவுளுக்கு முதலிடம்! ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; (1 கொரி 3:17)

2. அமைதி சுத்தம், ஜெபம்: உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் ஆலயம். (கொரி 6:19) கடவுள் விரும்பியது காணிக்கவில்லை அல்ல மாறாக நொறுங்கொண்டு இதயத்தை. 

ஒவ்வொரு பங்கின் இலக்கு! மக்களை அவர்களுடைய ஆன்மாவை இறைவனிடத்தில் வந்து சேர்க்க வேண்டுமே! தவிர உள்ளத்தில் உணர உதவியாக இருக்க வேண்டும். பெயருக்காகவும், நம்முடைய விசுவாசமும், இறை பக்தியும் மற்றவர்களை கவர்ந்து அவர்களையும் இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்கும். 

Popular Posts