Saturday, December 20, 2025

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு (A)

எசாயா 7:10-14. உரோமையர் 1:1-7. மத்தேயு 1:18-24

ஒரு ரீல் நினைவுக்கு வருகிறது. "வாழ்க்கையில பெருசா சாதிக்கணும்னு நினைக்கும் போது பசி வருகிறது. சரி, சாப்பிட்டு சாதிக்கலாம் அப்படின்னு நினைக்கும்போது, தூக்கம் வருகிறது. பசியையும் தூக்கத்தையும் ஜெயிப்பவனால் மட்டுமே சாதிக்க முடியும்."

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் செலவிடுகிறானாம். தூக்கம் நேரம் வீணாக்கம் அல்ல; அது தனது வாழ்க்கையை சீரமைக்கும் அவசியமான ஓய்வு.  எங்கள் மனநலக காப்பகத்தில் உள்ள பலர் எதனால் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றால் பலருக்கு தூக்கமின்மை பெரிய வியாதியாக இருக்கிறது. ஒரே ஒரு நாள் கூட நல்ல தூக்கம் இல்லாவிட்டால், எரிச்சல், கோபம் போண்ற மன நோய்கள்
அதிகரிக்கும். தூக்கம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தினமும் 6 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்குபவர்கள் அடிக்கடி நோயுற்றுவிடுவார்கள். “தூக்கம் சோம்பல் அல்ல; அது உடல் சொல்லும் குரலைக் கேட்கும் ஞானமே அது.”

இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும், அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.

முதல் வாசகம்: கிமு 735-ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசன் அசீரியாவை எதிர்க்க திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான்.  இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார்: ‘பயம் வேண்டாம். ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’ (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். ஆக, அச்சம் என்னும் தூக்கத்திலிருந்த ஆகாசு ஆண்டவராகிய கடவுள் எசாயா வழியாக அருளிய அடையாளத்தால் துணிவுக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), முதலில், பவுல் தன்னைப் பற்றி பதிவு செய்கின்றார் – ‘இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,’ ‘திருத்தூதன்,’ மற்றும் ‘நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.’ ஆண்டவராகிய திருஅவையை, ஆண்டவரின் திருஅவையை அச்சுறுத்துவதற்காகத் தமஸ்கு புறப்பட்ட சவுல் தூக்கத்திலிருந்து விடுதலை பெறுகின்றார். புதிய அடையாளங்களைப் பெற்றுக்கொள்கின்றார். இரண்டாவதாக, ‘தாவீதின் மரபினரான இயேசுவே கடவுளின் மகன்’ என முன்மொழிந்து பிறஇனத்தார் அனைவரையும் நம்பிக்கைக்கு விழித்தெழச் செய்கின்றார். ஆக, நம்பிக்கையின்மை என்னும் தூக்கத்திலிருந்த பவுல் (மற்றும் பிறஇனத்தார்) இயேசு கிறிஸ்து தமஸ்கு வழியில் தோன்றிய நிகழ்வு வழியாக நம்பிக்கைக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் ‘பெயரிடும் நிகழ்வால்’ உறுதிசெய்யப்படுகிறது. நிகழ்வில் அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த யோசேப்பு திடீரென தூங்கிவிடுகின்றார். கனவில் ஆண்டவரின் தூதர் அவரிடம் பேசுகின்றார். இரு செய்திகள் தரப்படுகின்றன. ஒன்று, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான். இரண்டு, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய பெயர்.

Sleeping St. Joseph

வாழ்வின் எதார்த்தங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, உடனடியாகத் தூங்கிவிடுதல் நலம்
என்பது யோசேப்பு தருகின்ற முதல் பாடமாக இருக்கின்றது.  கடவுளின் திட்டங்கள் நமக்கு புரியாத போது, இந்த வாழ்வு நம்மை அலைக்கழிக்கும் போது, பலருடைய விமர்சனங்களால் நாம் கூனி குறுகி நிற்கும்போது, பல தோல்விகளை சந்தித்து துவண்டு விழும்போது நாமும் தூங்கியாக வேண்டும். ஆனால்,  ஆனால் கடவுளின் வெளிப்படுத்துதலுக்காக ஆயத்தமாய் இருக்க வேண்டும். காதுகளை தீட்டிக்கொண்டு செவிமடுக்க வேண்டும். நிராகரித்தல் என்னும் தூக்கத்திலிருந்த யோசேப்பு கனவில் நிகழ்ந்த வெளிப்பாட்டின் வழியாக ஏற்றுக்கொள்தல் என்னும் நிலைக்கு விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்று நம் வாழ்வில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் நிலைகளில் இருக்கக் காரணம் நாம் கொள்ளும் அச்சம், நம்பிக்கையின்மை, மற்றும் நிரகாரித்தல் ஆகியவைதாம். இவற்றால்தாம் நம் அமைதியும் நிலைகுலைகிறது. தனிப்பட்ட வாழ்வு பற்றிய அச்சம், இறைவன்மேல் நம்பிக்கையின்மை, மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும் நிரகாரித்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விழித்தெழ வேண்டும் எனில் என்ன செய்வது? இறைவனின் குறுக்கீட்டைக் கண்டடைந்து அதை உறுதியாகப் பற்றிக்கொள்வது.

திருத்தந்தை பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர் Sleeping St. Joseph என்ற ஒரு பக்தி முயற்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது ஒரு அருட்சகோதரி கொடுத்த இந்த Sleeping St. Joseph சுரூபத்தை  எப்போதுமே தன்னுடைய தலையணைக்கு அருகில் வைத்துக்கொள்வாராம். தூங்கும் போது தன்னுடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ துன்பங்கள் கவலைகள் அனைத்தையும் திரு அவையின் சவால்களையும் ஒரு பேப்பரில் எழுதி அந்த சிலையின் அடியில் வைத்து தூங்கச் செல்வார். தூங்கும்போது கடவுள் நம் பிரச்சனைகளை சரி படுத்துகிறார். ஆகவே வருடம் முடிவில் தான் கவனித்தாராம் ஏராளமான பேப்பர்கள் அங்கே இருந்தன.  

திருவருகைக்காலத்தின் நான்காம் (இறுதி) வாரத்திற்குள் நுழையும் நாம் இறைநம்பிக்கை வைத்தபடி, பிரச்சினைகளை கடவுளிடம் கையளித்தபடி, அயர்ந்து தூங்குவோம். இறை வார்த்தையின் படி செயல்படுவோம். விழித்தெழுந்து அமைதியின் அரசரைக் கண்டுகொள்வோம்.

“From Celebration to Transformation”

Christmas Message 2025

A few days ago, a world-famous Argentine footballer, Lionel Messi, visited India for a short period. His arrival created a great impact across the country. Television channels, newspapers, and social media spoke only about his visit. It was a grand celebration — meetings with politicians, photo sessions with celebrities, and massive public events. Huge sums of money (they tell about 500 crores) were spent to host and celebrate a global icon for just a few days.

At the same time, Sunil Chhetri, one of India’s greatest football legends, stood silently on the sidelines. A player who has brought pride to our nation for decades, who has been among the top goal scorers in international football, remained largely unnoticed. He was asked to wear Messi’s jersey, and he stood at the corner of the stadium, forgotten. This fact reveals a painful truth for me about Strong Xmas message: we often celebrate fame more than faithfulness, glamour more than gratitude, popularity more than perseverance.

This incident invites us to pause and reflect on our own celebrations — especially our celebration of Christmas.

Sometimes, Christmas too risks becoming a grand event: bright lights, expensive decorations, shopping, parties, carols and social media displays. We celebrate Christmas everywhere — except where it truly matters: in our hearts. I am not telling you not to celebrate Christmas itself, but never forget its purpose.


The purpose of Messi’s visit was to inspire local footballers and ignite a deeper love for the Football game. Likewise, the purpose of Christmas is not merely to showup our gifts, but to transform lives. The birth of Jesus is not meant to remain a beautiful story or a yearly ritual. It is an invitation for change — to recognize Christ not only in the crib, but in the poor, the forgotten, the wounded, and the unnoticed people around us.

Jesus is born not in palaces, but in a manger. Not among famous players, celebrities, politicians, but among shepherds. Not in noise, but in silence. Christmas reminds us that God chooses simplicity over show, love over luxury, and humility over hype.

This Christmas, let us ask ourselves:

  • Are we celebrating Jesus, or only Christmas?
  • Are we welcoming Christ into our homes, or only decorating our houses?
  • Are we touched by His birth, or merely entertained by the festival?

May this Christmas 2025 move us from celebration to transformation, from external glitter to inner grace, from gifts under the tree to Christ in the heart.

Let the real miracle of Christmas happen within us — where Jesus is truly born, lives, and changes us.

Merry Christmas and a transformed New Year 2026.

Thursday, December 18, 2025

HOLINESS IS WHOLENESS - 183rd BIRTHDAY OF ST. L. GUANELLA

“Holiness Is Wholeness” 

யார் இந்த புனித லூயிஸ் குவனெல்லா?
எதற்காக அவரை நாம் “புனிதர்” என்று அழைக்கிறோம்?

புனித குவனெல்லா… 

  • புனித அந்தோனியார் போன்று
அற்புதங்களால் உலகை வியப்பில் ஆழ்த்தியவர் அல்ல.
  • புனித தாமஸ் அக்குவினாஸ் போன்று
ஆழ்ந்த இறையியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளால்
திருச்சபையை வளப்படுத்தியவரும் அல்ல.
  • புனித பியோ போன்று
இயேசுவின் திருக்காயங்களைத் தமது உடலில் சுமந்தவரும் அல்ல.

ஆனால்…

புனித லூயிஸ் குவனெல்லா,
“புனிதம் என்பது ஒரு முழுமை.” என்று கூறி வாழ்ந்தவர். மனிதத்தை முழுமையாக வாழ்ந்தாலே புனிதராக முடியும் என்று நிரூபித்தவர்.


புனித குவனெல்லா நமக்குச் சொல்வது:
புனிதம் என்பது உடல் நலம், மன நலம், ஆன்ம நலம்
இவை மூன்றும் இணைந்ததுதான் வாழ்வின் அழகு.

அற்புதங்கள்-புதுமைகள் எதுவும் நிகழ்த்தாமல்,
தன் அன்றாட வாழ்வையே அற்புதமாக மாற்றியவர்
புனித லூயிஸ் குவனெல்லா.






1. உடல்நலம்: Saint Guanella was, first of all, fully human. உடலைத் துறந்து அல்ல, உடலை அன்பின் கருவியாக மாற்றுவது புனிதம். பிரச்சிஸியோ என்ற கடினமான மலைப்பகுதிகளில் பிறந்தவர். He was born among the mountains; he had the gift of hard work, sobriety, and perseverance. He was from the river Rabbiosa, and so he possessed remarkable physical stamina. He used to work for the poor, the sick, and the abandoned. His holiness was not detached from the body; rather, his body became an instrument of love. He cared for concrete needs—bread, shelter, work—because he knew that grace does not float above human misery but enters it. He often says, “Give bread and the Lord.” The first need for man is to give bread for his bodily health. Before giving the spiritual A holy life, therefore, does not neglect physical well-being but uses strength and health in the service of others.

2. மன நலம்: சிந்திக்கும் மற்றும் கற்றுக் கொடுக்கும் திறன்: Secondly, Saint Luigi Guanella was a man of clear intelligence and was recognized as a good and passionate educator. He lived in a time of social upheaval, poverty, and anticlericalism, yet he was neither bitter nor rigid. He reflected, discerned, planned, educated, and adapted. Guanella, after learnt from Don Bosco, became capable of shaping minds and restoring dignity, particularly among the mentally disabled and marginalized. His mental balance was a result of realism and hope—he saw human weakness clearly, yet always believed in the possibility of renewal. He said often, “Holiness is not escapism, but a healthy, compassionate way of thinking, rooted in truth and mercy.

3. ஆன்ம நலன்: ஆன்மாவை உலகிலிருந்து பிரித்து அல்ல, உலகின் துயரங்களில் கடவுளைக் காண்பதே புனிதம். Above all, Saint Guanella was a Man of God. His spiritual life was the center that held everything together. His assiduous prayer, deep love for the Eucharist, devotion to Scripture, and total trust in Divine Providence gave unity to his actions. “It is God who does,” he repeated often. This spiritual abandonment did not make him passive; instead, it made him fearless. Because his soul rested in God, his body could labor tirelessly, and his mind could remain serene even amid misunderstanding and failure.

Dear friends, Saint Luigi Guanella shows us that holiness is a healthy harmony between the full and right use of your body, mind, and Soul. He had a body spent generously in service, a mind formed by wisdom and compassion, and a soul anchored in constant communion with God.

In a fragmented world, where people are exhausted in body, anxious in mind, and empty in spirit, Saint Guanella’s life is a prophetic reminder: to love God and neighbor fully, we must be whole persons. May his example inspire our families, our ministries, and our communities to seek not just success or comfort, but the joyful balance that leads to true holiness.

Amen.

Saturday, December 13, 2025

மகிழ்ச்சி ஞாயிறு

திருவருகைக்காலம் 3ஆம் வாரம்

மகிழ்ச்சி மெசியாவின் செயல்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே சண்டே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ என்னும் சொல்லுடன் தொடங்குகின்றன.

சிரிப்பு பற்றிய ஒரு குட்டி ஜோக்கிலிருந்து துவங்குகிறேன்: 

  • முகத்தில் சிரிப்பு இல்லாதவனைப் பார்த்து ஒருவர் கேட்டார்:
“என்னப்பா, சிரிக்கவே இல்லையே?”
  • அவன் சொன்னான்:
“சார்… சிரிப்பு ஃப்ரீ தான்,
ஆனா காரணம் இல்லாம சிரிச்சா
ஆளுங்க சந்தேகப்படுறாங்க!”

உங்களுக்கு சிரிப்பு தருவது எது? நீங்கள் எதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?

  •  பிரியாணி சாப்பிடுவது
  •  ஃபுட்பால் விளையாடுவது
  • வகுப்புகளுக்கு விடுமுறை விடுவது

மகிழ்ச்சி என்பது ஒரு ‘ரெலடிவ்’ (தனிநபர்சார் உணர்வு) எமோஷன். அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்று கிடையாது. 

நெக்ஸ்ட் கொஸ்டின்: மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? ‘உள்ளிருந்து வருகிறது’ என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன?  மனதுக்கு உள்ளே இருந்து வருவது உன்னத மகிழ்ச்சியாக (Joy) மாறாக சற்று நேரமே நீடிப்பது சிற்றின்பம் (happiness) எனப்படும். 

அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்தது இன்பதிற்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்தது நிறை மகிழ்ச்சிக்காகவே! 

மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் அக மகிழ்ச்சி என்று முழுமகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. ‘எல்லாம் முடிந்தது’ என்று நினைத்த மக்களுக்கு, ‘முடியவில்லை, விடிகிறது’ என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது – ‘பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,’ ‘பொட்டல்நிலம் அக்களிக்கிறது,’ ‘லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது’ – படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. 

பாடம் 1: Do not worry about the past, Be firm உள்ளத்தில் உறுதி

இஸ்ராயேல் மக்கள் கடந்த காலத்தின் அடிமைத் தனத்தில் நொந்து போய், திளைந்து போய் இருந்தவர்களிடம், "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்என அழைப்பு விடுக்கின்றார் எசாயாDo not worry about the past, do not waste your time by regretting the past life. மாறாக, Increase Gratitude. கிடைப்பதை வைத்து 

மகிழுங்கள் அடிக்கடி உங்களை மற்றவர்களோடு கம்பேர் செய்யாதீர்கள். நீங்கள் கடவுளுடைய கொடை உறுதியாக கூறுங்கள். சின்ன சின்ன செயல்களுக்கு கூட நன்றி கடவுளுக்கு நன்றி கூறுங்கள் குறிப்பாக உணவுக்கு கிடைத்தகுடும்பத்திற்கு கிடைத்த நபர்களுக்கு மனிதர்களுக்கு நன்றி கூறி ஜெபியுங்கள்



இன்றைய இரண்டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு ‘நிறைவுகாலம்’ (‘பரூசியா’) பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒரு வகையான அவசரம் அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம் அவர்களுக்கு இருந்தது.  இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, ‘பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,’ ‘ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்’ இருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.



(ஆ) பாடம் 2 - பொறுமை:  நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்துகொண்டே வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்துகொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். Be calm, relate with every one. Experience the present life. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.


நற்செய்தி வாசகம்: இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: ‘பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார்.


பாடம் 3: நன்மை தரும் செயல்கள் செய்து அனுபவிக்க வேண்டும்: யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ உறுதியோடு இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நற்செயல்கள்: பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 


நண்பர்களே! நன்மை தரும் செயல்கள் அதிகம் செய்ய வேண்டும். Do at least one act of kindness daily. A kind word, a smile, and help at home for your family. மொபைல் உபயோகிப்பதாதை தவிர்ப்பீர். Put the phone down during meals. We lose a lot of time because of mobile phones. Look at each other. Listen. Happiness begins with attention. Even just one minute of prayer or silence each day can bring calm, unity, and inner strength to the family.


மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றிய அச்சம் யாக்கோபின் திருஅவைக்குத் துன்பம் தருகிறது. (இ) நற்செய்தி வாசகத்தில், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்றும் மூன்று துன்ப நிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.


கடந்த காலத்தின் அடிமைத் தனத்தின் துவளாமல், இரண்டாம் வாசகம் காட்டும் பொறுமையோடும், நற்ச்செய்தி காட்டும் பிறரன்புப் பணிகளின் வழியாகவே மெசியாவின் செயல்கள் கண்டு கொள்ளப்ப்டும்.  மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல. அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன. அவரின் செயல்கள் நம் வாழ்வில் சிற்றின்பகமன்று, மாறாக, நிறைமகிழ்ச்சி தருகின்றன.


Thursday, December 11, 2025

Our Lady of Guavadalupe - Feast

மறையுரை

குவாடலூபே அன்னை விழா - திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி

எசாயா 48:17-19. மத்தேயு 11:16-19

டிசம்பர் 12 ஆம் நாள் உலகம் முழுவதும் குவாடலூபே அன்னை திருவிழாவை கொண்டாடுகிரோம், அன்னை மரியா இல்ல பல இடங்களில் காட்சி கொடுத்திருக்கிறார். மெக்சிகோ நாட்டு குவாடலூபே அன்னயின சிறப்பம்சம் என்ன? 

13ம் நூற்றாண்டில் மிக்சிகோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்த Juan Diego என்ற 13 வயது மலைவாழ் சிறுவனுக்கு சிறுவனுக்கு மரியா அற்புதமாக தோன்றினார். 

ஆயர் அவர்களும், மற்றவர்களும் நம்பிக்கைக்கான ஒரு அடையாளம் கேட்டபோது அடுத்த முறை மரியாள் காட்சி தந்த போது அவருடைய பாரம்பரிய உடையான (Tilma) மேலாடையில் ரோஜாக்களை சேகரித்து ஆயரின் அறையில் திறந்த போது அன்னையின் அற்புதத் திருவுருவம் அந்த ஆடையில் அச்சிடப்பட்டிருந்தது.

இதில் என்ன சிறப்பு என்றால் என்னவென்றால் குவாடலூபே  அன்னையின் உருவமும், விவிலியத்தின் இறுதி நூலான திருவழிப்பாட்டு நூல் குறியீடுகளோடு பொருத்தமாக இருந்தது. திரு அவையின் இருபெரும் தூண்கள் அன்னையும் விவிலியமும். 

இது ஒரு இயற்கைக்கு மாற்றான அற்புதம் என்று அனைவரும் உணர்ந்தனர். இதனால் ஆயர் அங்கு ஆலயம் அமைத்தார். இன்று அது உலகில் கோடிக்கணக்கான யாத்திரிகர்கள் வரும் குவாடலூபே தாயின் திருத்தலம், மெக்ஸிகோ நகரத்தில் உள்ள Basilica of Our Lady of Guadalupe ஆகும்.


குவாடலூபே அன்னைக்கு அற்புத செபம்

அன்பும் அருளும் நிறைந்த குவாடலூபே அன்னை,
எங்கள் தாயாகி, எங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் கருணைச் செல்வியே,
உமது பரிசுத்த திருவுருவத்தில் எங்களை உன்னதமான அன்பால் தழுவியருளும்.

உமது திருவிரல்களில் மலர்ந்த ரோஜாக்கள் போல,
எங்கள் வாழ்விலும் அருள் மலர்ச்சி உண்டாகச் செய்யும்.


எங்கள் கவலைகளை அமைதியாக மாற்றி,
எங்கள் காயங்களை ஆறுதலின் மணத்தால் ஆற்றுதலாக்கும் தாயே,
எங்களை உமது திருத்தோழமையில் பாதுகாத்தருளும்.

அன்னை, நோயாளிகளுக்கு ஆற்றல்,
துயரப்படுவோருக்கு நிம்மதி,
அதிர்ச்சியில் இருப்போருக்கு துணை,
இருளில் நடப்போருக்கு வெளிச்சம் நீரே.
எங்கள் குடும்பத்தைக் காக்கவும்,
எங்கள் மனங்களை வலிமைப்படுத்தவும்,
எங்கள் பாதைகளை உண்மையின் வழியிலே நடத்தவும்.

குவாடலூபே அன்னை,
உமது அன்பு போர்வையில் எங்களைச் சூழவைத்து,
தெய்வகுமாரனின் அருளைப் பரிந்துரைத்து,
எங்கள் வேண்டுகோள்களை ஏற்று நிறைவேற்றும் தாயே,
எங்களுக்காக விண்ணப்பம் செய்.

ஆமென்.

Sunday, December 7, 2025

Immaculate Conception

புனித கன்னி மரியாவின் அமல உற்பவம், பெருவிழா

தொடக்கநூல் 3:9-15, 20. எபேசியர் 1:3-6, 11-12. லூக்கா 1:26-38

கறை நல்லது!

‘அன்னை கன்னி மரியா அமல உற்பவி – பிறப்புநிலைப் பாவம் இல்லாமல் கருவுற்றவர் – என்னும் வழுவாநிலைக் கோட்பாடு, ‘இன்எஃபாஃபிலிஸ் தேயுஸ்’ என்னும் கொள்கைத் திரட்டின் வழியாக 1854-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் நாளில் திருத்தந்தை 9-ஆம் பயஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பின் காலமான திருவருகைக்காலத்தில் இப்பெருவிழா கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்கிறது. ஏனெனில், அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவம் கடவுள் மனுவுருவாதலுக்கான தொடக்கமாக இருக்கிறது.

கன்னி மரியின் அமல உற்பவம் பற்றிய குறிப்பு நேரடியாக திருவிவிலியத்தில் இல்லை. ஆனால், திருக்குரானில் ‘ஸூரா மர்யம்’ என்னும் அலகில் ‘மர்யம் பாவ அழுக்கின்றி பிறக்குமாறு கடவுள் அருள்கூர்ந்தார்’ என வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், திருக்குரானைப் பொருத்தவரையில் இயேசு ஓர் இறைவாக்கினர். இறைவாக்கினர் பாவ அழுக்கின்றிப் பிறப்பவர் என்பதால், அவரைப் பெற்றெடுப்பவர் பாவ அழுக்கில்லாமல் இருக்கிறார் என்பது திருக்குரானின் புரிதல்.

‘பாவமற்ற நிலை, தூய்மை, சுத்தம், அழுக்கற்ற நிலை, அ-மலம்’ என்று இன்றைய நாளில் அன்னை கன்னி மரியாவின் தூய்மையை, புனிதத்தைப் போற்றுகிறோம். இந்தப் புரிதல் இன்றைய நாளுக்குப் பொருந்துமா?

‘தூய்மை என்பது கடவுள்தன்மைக்கு அடுத்த நிலை’ என்று சொல்லி வந்த நாள்கள் கடந்து, இப்போது ‘கறை நல்லது’ (cf. Surf Excel) என்று சொல்ல நாம் பழகிக்கொண்டோம். நாம் பயன்படுத்துகிற டெட்டால், லைசால் போன்றவை கூட 99.9 சதவிகதமே கிருமிகளைக் கொல்கின்றன. கறையோடு இருக்கிற தலைவர்களை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம். கறையோடு சமரசம் செய்துகொள்கிறோம். அன்னை கன்னி மரியா ‘கறையற்றவர்’ என்று சொல்வது சற்றே அவரை நம்மிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

இரண்டாவதாக, ‘தூய்மை’ அல்லது ‘புனிதம்’ என்பதை எப்போதுமே மேன்மை என்று சொல்லிவிடவும் முடியாது. எடுத்துக்காட்டாக, சாலை ஓரத்தில் படுத்துறங்கும் வீடற்ற பெண்ணுக்கும், நாடோடிப் பெண்களுக்கும் அவர்களுடைய அழுக்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு. தூய்மையாகவும் சுத்தமாகவும் அவர்கள் இருந்தால் அவர்களுடைய இருத்தலுக்கு அதுவே ஆபத்தாக முடியும். ஆக, ‘அழுக்கும் அழகே’ என்பதே இவர்களுக்கு ஏற்புடைய கருத்துருவாக இருக்கிறது.

ஆக, ‘அன்னை கன்னி மரியா தூய்மையானவர். நாமும் தூய்மையாக இருக்க வேண்டும்’ என்று நம் சிந்தனையைச் சுருக்கிவிட வேண்டாம். அவர்களுடைய தூய்மையின் நோக்கம், அது வழங்குகிற சவால் என்பதை முன்நிறுத்தி நாம் சிந்திப்போம்.

(அ) கன்னி மரியாவின் தூய்மை அவருடைய வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கிறது

‘சிலர் மேன்மையாகவே பிறக்கிறார்கள். சிலர்மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. சிலர் மேன்மையை அடைகிறார்கள்’ என்கிறார் ஷேக்ஸ்பியர். அன்னை கன்னி மரியா மேன்மையாகப் பிறக்கிறார். அதே வேளையில் தன்னுடைய சரணாகதி வாழ்க்கையால் மேன்மையை அடைகிறார். சதுரங்க விளையாட்டில் இந்தப் பக்கம் இருக்கிற ‘சிப்பாய்கள்’ பலகையின் அந்தப் பக்கம் சென்றுவிட்டார்கள் என்றால் அவர்கள் வலிமையானவர்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு கட்டமாக அவர்கள் நகர்ந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சி அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்று முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் … முன்குறித்து வைத்தார்’ என எழுதுகிறார் பவுல். நம் வாழ்க்கை என்பது வரலாற்று விபத்து அல்ல, மாறாக, அதற்கென ஒரு நோக்கத்தை கடவுள் வரையறுத்துள்ளார் என்பது பவுலின் புரிதலாக இருக்கிறது. அன்னை கன்னி மரியாவுடைய வாழ்க்கையின் நோக்கத்தை வானதூதர் வழியாக கடவுள் வெளிப்படுத்துகிறார் (நற்செய்தி வாசகம்). இதைப் போல, காண்கின்ற, கேட்கின்ற வகைகளில் கடவுள் தம் திருவுளத்தை நமக்கு வெளிப்படுத்துவதில்லை. அக, புற அறிகுறிகளைக் கொண்டே நாம் அதைக் கண்டுகொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் மேன்மைக்காகப் பிறந்துள்ளோம். மேன்மைக்காகவே கடவுள் நம் அனைவரையும் தேர்ந்தெடுத்து முன்குறித்து வைத்துள்ளார்.

(ஆ) நம் இருத்தல் அல்ல, மாறாக, நம் மாற்றமே நம் மதிப்பைக் கூட்டுகிறது

‘பெண்’ என்னும் நிலையில் இருந்த முதல் பெண், ‘தாய்’ (‘ஏவா’) என்னும் நிலைக்கு மாறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குக் காட்டுகிறது. பெண்ணின் வித்துக்கும் பாம்பின் வித்துக்குமான பகையை இறையியலாக்கம் செய்து இயேசு கிறிஸ்துவுக்கும் தீமைக்கும் உள்ள பகை என்று நாம் புரிந்துகொள்கிறோம். விவிலிய நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டால், விலக்கப்பட்ட கனியை உண்கிற நிகழ்வு மானிட வாழ்வில் பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. கண்கள் திறக்கப்பட்ட நிலைக்கு மானிடம் நுழைகிறது.

நாம் எப்படி இருக்கிறோம் என்பது அல்ல, மாறாக, நாம் எப்படி ஆகிறோம் அல்லது மாறுகிறோம் என்பதே முக்கியமானது. நாம் குழந்தையாக இருந்தபோது, ‘நீ என்ன ஆகப்போகிறாய்?’ என்று மற்றவர்கள் நம்மிடம் கேட்கிறார்கள். நாம் வளர்ந்தவுடன், ‘நீ என்னவாக இருக்கிறாய்’ என்று கேட்கிறார்கள். வளர்ந்தவுடன் ஒரு தேக்கநிலை வந்துவிடுகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதே நமக்கு மதிப்பு தருகிறது. பால் தன் இருத்தல் நிலையை விடுத்து தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் என மாறும்போதுதான் அதன் மதிப்பு கூடுகிறது. சாதாரண இரும்பு டங்ஸ்டன் இழையாக மாறும்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்கிறது.

நாசரேத்தூர் இளம்பெண் என்னும் கன்னி மரியா கடவுளின் தாய் என மாறுகிறார். இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக இருப்பது அவருடைய அமல உற்பவம். ஆக, மாறிக்கொண்டே இருந்து நம் மதிப்பைக் கூட்ட இன்றைய நாள் நம்மை அழைக்கிறது.

(இ) கேள்வியிலிருந்து சரணாகதிக்கு

‘இது எப்படி நிகழும்?’ என்னும் கேள்வியிலிருந்து ‘கடவுளால் எல்லாம் நிகழும்’ என்னும் வாக்கியத்திற்குக் கடந்து செல்கிறது நற்செய்தி வாசகம். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ என்று வானதூதர் மொழியக் கேட்ட மரியா, ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்கிறார். ‘உம் சொற்படியே நான் நிகழ்த்துகிறேன்’ என்று தன்னை முதன்மைப்படுத்தாமல், கடவுள் தன் வாழ்வில் செயல்படுமாறு அனுமதிக்கிறார். பல நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகளை நாமே தலைமேல் எடுத்துக்கொண்டு நின்று கலக்கமும் கவலையும் அடைகிறோம். பல நேரங்களில் வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளுக்குள் நிற்பதில்லை. நிகழ்வுகள் அதன்போக்கில் நடந்துகொண்டிருக்கின்றன. சற்றே நாம் தள்ளி நின்று இறைவன் செயலாற்றுமாறு அனுமதித்தல் நலம்.

கன்னி மரியாவின் தூய்மை கடவுள் அவருக்குக் கொடுத்த கொடை. அந்தக் கொடை செயலாற்றுமாறு அனுமதிக்கிறார் மரியா. ‘கடவுளால் எல்லாம் நிகழும்’ என்பது நம்முடைய நம்பிக்கை அறிக்கையாக இருக்கும்போது நாமும் நிபந்தனையின்றி சரணடைய முடியும்.

இன்றைய நாளில், அன்னை கன்னி மரியாவின் அமல உற்பவத்துக்காக கடவுளுக்கு நன்றிகூறுகிற வேளையில், தூய்மை என்பது அவருடைய தாய்மைக்கான தயார்நிலை என்பதை அறிந்துகொள்வோம்.

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான தயார்நிலையை நாம் பெற்றிருக்கவும், ஒவ்வொரு பொழுதும் மேன்மையை நோக்கி நகரவும், தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கவும், சரணாகதி மனநிலையுடன் வாழ்க்கையை வாழவும் முயற்சி செய்வோம்.

Thanks: அருள்திரு யேசு கருணாநிதி

Friday, December 5, 2025

திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி

பரிவு: மானுடம்மேல் படைத்தவன் கொள்ளும் பேரன்பு

எசாயா 30:19-21, 23-26. மத்தேயு 9:35-10:1, 6-8

சமீபத்தில் தீபாவளி வெளியீடாக வந்த 'பைசன்' என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்தேன். தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, ஜாதியச் சிக்கல்களிலும், கலவரங்களிலும் புதைந்து கிடந்த ஒரு இளைஞன், பல்வேறு அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து, ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடும் கபடி வீரனாக உயர்கிறான்.

அதில் என்னை ஆழமாகத் தொட்ட ஒரு வரி— இரு முக்கியமான ஜாதித் தலைவர்கள் அடிக்கடி கூறும் வசனம்:

“ஒருத்தன் அடிமட்டத்திலிருந்து தன்னுடைய திறமையை நம்பி மேலே எழுந்து வர்ரானா … அவனை விட்டுடு!”

இந்தப் பண்பு தலைவர்களுக்கு மட்டுமன்று, அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. —
இரக்கக்குணம்!


இறைவனுடைய பேரிரக்கம் - இந்தப் பெரும் பிரபஞ்சத்தையே படைத்து, தந்தைபோல் அன்புடன் வழிநடத்தும் இறைவன், தனது பேரிரக்கத்தின் உச்சத்தை, கிறிஸ்துவின் பிறப்பில் மனிதருக்கு வெளிப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய சிறையில் துன்பப்படும் யூதர்களை நோக்கி இறைவாக்கினர் எசாயா, மெசியாவை “உங்கள் போதகர்” என்று அறிமுகப்படுத்துகிறார். இதுவரை “உங்கள் அரசர்,” “உங்கள் குரு,” “உங்கள் இறைவாக்கினர்” என்று கேட்ட மக்களுக்கு, “போதகர்” என்ற புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்தப் போதகர்

* மனிதர்மீது பரிவு கொள்ளும் போதகர்,

* “இதுதான் வழி… இதில் நடந்துசெல்லுங்கள்!” என்று உண்மையை காட்டும் போதகர்.



இன்றைய நற்செய்தியில், இயேசு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பரிவு கொள்கிறார். அவரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் கூட்டத்தில் இருந்தபோதும், அவர்கள்மீதும் compassionate heart உடன் பரிவு கொள்கிறார். 

ஆண்டவரின் குரல் நம் உள்ளத்தில் ஒலிப்பதுதான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆறுதல். இயேசு தம் சீடர்களுக்குச் சொற்களால் முன் கற்றுக்கொடுப்பதற்கு முன், தம் பரிவினால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
ஏனெனில், கற்றுத்தருவதின் முதல் படி—பரந்துபட்ட பரிவுள்ளம்.

அனைவரையும் அன்பு செய்யும்
,கீழிருப்பவனை உயர்த்தும்,
அனைவரையும் மன்னிக்கும்

பேரிரக்கம் நமக்கும் அருளப்பட வேண்டி மன்றாடுவோம்!


Thursday, December 4, 2025

Friday of the 1st week of Advent

Isaiah 29:17–24 / Matthew 9:27–31

Jesus Gives the True and Meaningful Vision of Our Life

A few days ago, I received a heartbreaking phone call from a mother who had lost her 9-year-old daughter in an accident. The little girl was returning from school when a tragic incident occurred right near their home. She was the only child in the family. The mother called me as she was travelling back to her village with her daughter’s body. Her voice was filled with pain and darkness. She could not see any meaning or future in her life anymore. And I myself did not know how to console a mother whose whole world had collapsed in a moment. The human words are insufficient. For her, everything seemed lost. This sorrow will remain a deep wound in her heart until her death. 

Who can give her a new vision for life?

In today's first Reading: God Promises Vision to the Hopeless through the Prophet Isaiah. He spoke to a people who lost hope for their future. They are spiritually blind and discouraged. But God promises a new day: "The blind shall see, the lowly will rejoice and they shall receive understanding and wisdom" (Is 29:17–24)

This is more than physical healing—it is inner renewal, a promise that God can bring light even into the deepest darkness.

In the Gospel, two blind men cry out to Jesus for mercy. Their world was dark. No one could help them. Yet they believed that Jesus could. Jesus not only restores their physical sight but also awakens their spiritual vision, because they recognize Him through faith as the Messiah.

Their healing shows that faith can open what life has closed. There are moments in the life we feel like that of mother's pain—when death, tragedy, or evil suddenly blind us. Everything is dark. We cannot understand. We cannot see the future. At such moments, human words cannot fix our pain. But the presence of Jesus can slowly open a path where we see none.

Thank You Jesus! for the Word of God that God alone can give new vision to those who have lost all hope.

Through Jesus, we receive the vision of eternal life—a hope that suffering cannot erase.

May the Lord who opened the eyes of the blind open our hearts as well, so that even in moments of darkness, we may see His light, His way, and His promise of life. Amen!

Wednesday, December 3, 2025

Thursday of the First Week of Advent

Isa 26:1-6 / Mt 7:21.24-27

  • வேகமாக வளர்வதை விட வேரோட்டத்துடன் வளர்வது நீடிக்கும்.
  • அழகாய் வளர்வதை விட ஆரோக்கியமாய் வளர்வது நல்லது.

Today, people no longer seek modern and beautiful houses — they want strong houses. Natural disasters, such as typhoons, remind us that without a firm foundation, even the most modern buildings can collapse. Many invest so much, but are cheated by weak structures.

In the first reading, Isaiah speaks of Jerusalem, the strong city. Its strength does not come from its fine marbles, strong stones, or gigantic walls, but from the Lord who protects it. Its foundation is trust in God.

In the Gospel, Jesus gives us the image of the wise and foolish builders. The wise man builds his house on rock; the foolish builds on sand. What is this rock? It is a solid foundation — faith, formation, discipline, and commitment.


Life built on a solid rock...

A child who receives proper (strict) guidance from parents and teachers grows roots — grows strong. But a life without discipline becomes unstable and easily shaken.

This is true for every vocation:

  • Young men and women who follow Christ must be rooted in formation, family values, and missionary passion.
  • Students preparing for their future need training, hard work, and perseverance.

I recently watched Cristiano Ronaldo score a spectacular bicycle kick — even at 40, he remains extraordinary. That strength is the fruit of constant discipline. Greatness doesn’t happen overnight; it is built through years of formation.

Jesus expects the same from His disciples. Formation comes before mission. In the Church — and especially in our Guanellian Congregation — formation is our first mission.

Let us build a Church for the future: founded on faith, strengthened by prayer, made beautiful by love for God and the poor.

May our lives be houses built on the rock of Christ — strong, steady, and unshakable in every storm. Amen.

Tuesday, December 2, 2025

International Day of Persons with Disability (December 3)

இன்று புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலரின்
பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதே நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.  நமது சபைக்கு மிகவும் நெருக்கமான இந்த மாற்றுத்திறனாளிகளை பற்றி ஒருசில சிந்தனைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
  • சமூகத்தில் ஏன் இந்த மாற்றுத்திறனாளிகள்?
  • கடவுள் எதற்காக இவ்வுலகில் ஊனமுற்றவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் படைத்தார்? 
  • எதற்காக இத்தனை குறைபாடுகள், ஏனிந்த ஊனங்கள்? 

விவிலியத்தின் தொடக்க நூலின் அனைத்து மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட உள்ளார்கள் என்று வாசிக்க காண்கிறோம் (தொ.நூ 1:27) 

அன்றைய காலத்தில் ‘ஊனம்’ என்பது கடவுளின் தண்டனை அல்லது சாபம் என்று மக்கள் நம்பினர். ஆனால் விவிலியம் “கடவுளின் செயல்கள் ஊனம் மூலம் வெளிப்படுத்தப்படலாம்” என்று கூறுகிறது. "கடவுளின் செயல்கள் அவரில் வெளிப்படும் பொருட்டு இது நடந்தது." - (யோ 9:3) ஊனம் என்பது ஒரு குறைபாடு அல்ல. கடவுள் அவர்களின் மூலமும் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.


19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் லூயிஸ் குவனெல்லா “மாற்றுத்திறனாளிகள் கடவுளின் பரிசுகள்” என்று கூறினார். அவர்கள் விண்ணகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடவுளின் தேவதூதர்கள்.  மாற்றுத்திறனாளிகளை “செல்ல குழந்தைகள்” என்றழைத்தார். 

ஒரு அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தவன் வளர்ந்து மருத்துவராகி சாதிக்கத் துவங்கி விட்டான். இளையவன் இன்ஜினியராகி இல்லத்தில் இனிதே நுழைந்து விட்டான். மூன்றாவது மகனோ, இரண்டு கால்களையும் இளம்பிள்ளை வாதத்தால் இழந்து, வாழ்க்கையை வருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார். 

இந்த மூவரில் அப்பாவின் பாசத்துக்குரிய செல்ல மகன் யார்? சந்தேகமே இல்லாமல் ஊனத்தோடு பிறந்த மூன்றாவது மகனே தந்தையின் பார்வையில் செல்ல குழந்தையாய் தெரிகிறான். 

கடவுளைத் தந்தையாக பாவித்த அவருக்கு "செல்லக் குழந்தையாக" தெரிகிறார்கள், இந்த உலகின் கடை எல்லை வரை ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள். போலிகளைப் படைத்து வெறுத்து போன இறைவன் ஒரு மாற்றத்திற்காக உண்மை உயிரை, முழுமையற்ற உடலுக்குள் வைத்து படைத்தார். அவர்கள் தான் கடவுளின் பிரதிநிதிகள். இந்தப் புரிதலினாலே மிகவும் நெருக்கமாக தான் அன்பு செய்த, உடல் நலம் குன்றிய குழந்தைகளை தான் தோற்றுவித்த சபைகளின் முதன்மைப் பணியாக செய்தார்.

ஒருமுறை கோமோ நகர ஆயர் அவர்கள் அந்நகரத்தில் குவனெல்லா தோற்றுவித்த இல்லமான இறைபராமரிப்பு இல்லத்தின் கதவுகளைத் தட்டி தான் குவனெல்லாவைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அந்த இல்லத்து பணியாளர் ஒருவர், "தந்தை குவனெல்லா, தனது இல்லத்தில் செல்லக் குழந்தைகளோடு சீட்டு விளையான்டு கொண்டிருப்பதைக் கூறினார்". இதைக் கேட்டவுடன் சிறிது அப்சட்டான ஆயர், “மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் விளையாட வாய்ப்பில்லை. புனிதரை விரைவில் அழைத்து வாருங்கள்” என்றார். அந்த பணியாளரோ, "ஆம் ஆயர் அவர்களே! செல்லக் குழந்தைகளை உயர்ந்தவர்களாக மதிக்கும் வரை அவர்களுக்கு விளையாட்டுகள் புரியப் போவதில்லை” என்றார். பிறகு என்ன! ஆயர் நீண்ட நேரம் விளையாட்டு முடியும் வரை இருந்து குவனெல்லாவை சந்தித்து தான் சென்றார். செல்லக் குழந்தைகள் தான் அவரது நிறுவனத்தின் முதலாளிகள். அவர்களின் நிமிடத் துளிகளை மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு, தன்னுடைய மணித்துளிகளையும் செலவிட தயங்கவில்லை.

அன்பின் பணியாளர் சபையைத் துவங்கிய நேரங்களில் தனது சபையில் சேர விரும்பும் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்திட ஒவ்வொரு மறைமாவட்ட பங்குகளிலும் சென்று இறையழைத்தல் கூட்டம் ஏற்பாடு செய்தார். அவர் எப்போது வெளியே சென்றாலும் தன்னோடு ஐந்தாறு செல்ல குழந்தைகளையும் கூட்டிச் செல்வார்கள். ஒருமுறை கோமா நகரத்து பங்கு இளைஞர்களை சந்தித்தபோது குவனெல்லாவோடு வந்திருக்கிற செல்லக் குழந்தைகளை பார்த்து அவர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு தந்தை குவனெல்லா, “இந்த சிறப்பு குழந்தைகளிடம் உங்களிடமும், என்னிடமும் இல்லாத ஆற்றல் ஒன்று உள்ளது. ஏனெனில் அவர்கள் கடவுளின் சிறப்பு அருள் பெற்றவர்கள் (Innocence and angelic grace).  

செல்லக் குழந்தைகளை எந்த வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்கள் அன்பின் பணியாளர் சபையில் சேரலாம். பட்டப்படிப்புகளும், நூலகங்களும் தர முடியாத அனுபவங்களை இவர்களின் அருகாமையில் அறிந்து கொள்ளலாம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகம் அறிவியலின் பயனை அனுபவிக்கும் உலகம். இங்கு அறிவு தான் அனைத்தையும் அளக்கும் அளவுகோல்! தோற்றம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் கருவி! அழகை கண்டு கொள்வதும் அன்பு செய்வதும் மனிதருக்கு மிக எளிது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மறைந்து கிடக்கும் திறன்களையும் அறிந்த அன்பு செய்வது என்பது மிக அரிது.

இன்றைய தினத்தில் நமது இல்லங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இருக்கும் அனைத்து இருக்கும் அனைத்து மாற்று திறனாளிகளும் அன்பு, அரவணைப்பு மற்றும் கண்ணியம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தி ஜெபிக்கும் குவனெல்லிய இல்லங்கள். 


Monday, December 1, 2025

Tuesday of the 1st Week of Advent

Is 11:1-10; Lk 10:21-24

Brothers and Sisters! Do you feel you are cut down by failures, relationship problems, financial crisis, depression, or anxiety?

When everything seems broken or lost, God still creates new beginnings. The coming of the Messiah, the Son of David, is the sign of hope for our lives.

Today’s first reading opens with the prophecy: “A shoot shall sprout from the stump of Jesse.” (Is 11:1)

Who is the father of King David? Jesse.

In the time of Isaiah, the people thought the Kingdom of Israel would be cut down, just like a dead stump. Exile, sin, and defeat made it seem as though the story of God’s people would end. But the prophet announces something astonishing: God can bring life from what looks like nothing.




  • He can grow greatness from your brokenness.
  • He can restore hope when the world sees only ruins.
  • This is the power of our God — life through the Messiah.

The Spirit of the Lord rests upon Him: wisdom, understanding, counsel, and strength.

What once was dead will bear fruit again. Do not feel tired, wounded and ended. Life would begin at any time.

In the Gospel, Jesus rejoices in the Spirit and tells us that this revelation is not given to the proud, the powerful, or the worldly wise, but to the humble—to those with the heart of a child. God’s kingdom is accessed not through intellect or status, but through trust, simplicity, and openness.

As we prepare our hearts in this Advent season, let us welcome Christ with childlike faith. When we kneel before Him as children of the Kingdom, we discover that no stump in our life is truly dead—because where Jesus enters, new life begins.

Popular Posts