Friday, November 14, 2025

34th Sunday Ordinary time,

ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், திங்கள்

தானியேல் 1:1-6, 8-20. லூக்கா 21:1-4

(Thanks: Fr. Yesu Karunanidhi, blogger)

கண்ணீரும் காசும்

‘இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை’ என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். ‘கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்’ என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை’ நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை ‘கைம்பெண்’ என அழைக்க, லூக்கா மட்டும், ‘அவர் வறுமையில் வாடியவர்’ என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.

நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:

(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்

‘பற்றாக்குறை’ என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்

அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.

(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது.

லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை’ என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, ‘அன்றைய நாளைப் பற்றிக் கூட’ அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.

நிற்க.

இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. ‘கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்’ என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா?

கைம்பெண்களின் கடைசிக் காசைப் பெற்றுத்தான் ஆலயமும் ஆலயத்தின் குருக்களும் வாழ வேண்டுமெனில் அத்தகைய அமைப்புகள் தேவையா? அமைப்பை உடைப்பதை விடுத்து அமைப்புக்குள் மக்கள் தங்களையே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல இருக்கிறது இயேசுவின் செயல்பாடு. இன்றும் சில நேரங்களில் சில இடங்களில், ‘ஏழைக் கைம்பெண் போல அனைத்தையும் காணிக்கை போடுங்கள்’ என்று அருள்பணியாளர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் வானளவாகக் கோவில் கட்டவும், ஊர் பாராட்ட சப்பரம் இழுப்பதற்கும் இன்றும் ஏழைகளும் கைம்பெண்களும் தங்கள் கடைசிக் காசுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய கண்ணீரும் நம் ஆசையும் ஒருபோதும் குறைவதில்லை!

Saturday, November 8, 2025

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !

ஞாயிறு, 9 நவம்பர் ’25

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !  

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா; எசே 47:1-2, 8-9, 12. 1 கொரி 3:9-11, 16-17. யோ 2:13-22

லாதெரன் பேராலய நேர்ந்தலிப்பு விழா! ஒரு ஆலயத்திற்கு இவ்வளவு பெரிய விழாவா! ஆம்! இது ஒரு பசிலிக்கா, பேராலயம்! திருத்தந்தையர்கள் அனைவரும் பாரம்பரியமாக வசித்து வந்த ஆலயம். 

இவை எல்லாவற்றையும் விட ஆலயம் என்பது கிறிஸ்துவின் மேல் எழுப்பப்பட்ட ஒரு சமூகம்! புதிய ஜோராபூர் ஆலயம்! ஒவ்வொரு ஆலயமும் அதைச் சார்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. ஆலயமணி , தேர்த்திருவிழா, சப்பரம், எங்க ஊரு கோயிலில் மானப்பிரச்சனை, 

இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட, சாலமோன் அரசர் கட்டிய அந்த எருசலேம் தேவாலயத்தில் இயேசுவின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்பே உருவான இயேசு, இரக்கமே உருவான இயேசு, கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, கோவிலிலிருந்து துரத்தினார்;

ஒரு சாமானியனின் கோபம் "கோபம் மூக்குக்கு மேல வருகிறது" 

விவிலிய பின்னணி: எருசலேம் நகரத்தின் பாஷ்கா விழா, 19 வயது நிரம்பிய ஒவ்வொரு யூதனும் தங்களுடைய வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாக எப்படி ஆவது எருசலேம் ஆலயத்திற்கு சென்றிருக்க வேண்டும். அப்படி செல்லும்போது இந்த காரியங்கல் செய்ய வேண்டும். 

1. அவர்கள் வரி கட்ட வேண்டும். கோவில் வரி கட்ட வேண்டும் இந்த கோவில் வரி மிக அதிகமான வரி காரணம். எருசலேமுக்கு அருகில் உள்ளவர்கள் அடிக்கடி செல்வார்கள், ஆனால் புரவினத்தார்கசல். என்றாவது ஒருவர்கள் அதிகமாக வரி கட்ட வேண்டும்.

2. காணிக்கை பலி செலுத்த வேண்டும். சந்தையில் ஆடு மாடுகள், புறாக்கள், பறவைகள் மற்றும் பலவிதமான மிருகங்கள் கடவுளுக்கு பலியிடுவதற்காக விலங்குகளை விற்க ஆரம்பித்தனர். ஏனெனில் பணக்காரர்கள் பெரிய விலங்குகளை வாங்குவார்கள். ஏழைகள் மாடப்புறாக்களை .

3. புரவினத்தாரின் நாணயங்கள் கோவிலில் நாணயங்களாக மாற்றப்பட்ட பின்னரே வரி கட்ட முடியும், ஆறில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வர். ஏழைகள் அநியாய வட்டிக்கு நாணயம் செலுத்தினார்கள். இதன் காரணத்தினாலே  திருப்பதி வேளாங்கண்ணி இந்த திருத்தலங்களை விட அதிகமான பன்மடங்கு அதிகமான காணிக்கை எருசலேம்.


யேசுவின் கோபத்திற்கு இதுவே காரணம்!  இறைவனுக்கு முதலிடத்தை கொடுக்க மறந்த மக்கள்! கடவுளின் பெயரால் ஏழைகலுக்கு நடக்கும் சமூக அநீதி! கடவுளுக்கு பலியிட தொலைவிலிருந்து கோவிலுக்கு வருகின்றார். ஏழை மக்கள் துன்பப்படுகின்றார். Courtyard is the unique place for the gentiles, for the high-priests, Pharisees and other people have their own space in the Temple of Jerusalem. The unique place for the poor is being encroached for the business purpose.  அவர்கள் வழிபடும் இடங்களில் சந்தைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன, எப்போதும் கூச்சல் இறைச்சல். 

இயேசுவின் உண்மையான கோபம் அவர் கடவுள் மீதும் ஏழைகள் மீதும் வைத்திருந்த எல்லையற்ற அன்பு வெளிப்படுத்தியது. 

1. ஆலயத்தில் கடவுளுக்கு முதலிடம்: "என்னுடைய இல்லத்தை கள்வர் குகையாக மாற்றaதீர்கல்". லூக் இiறவேண்டலின் வீடு! உடல் வழியாக, உல்லம் வழியாக வனக்கம் செய்ய வேண்டும். நறகருனை ஆராதனை.  ஆலயம் கடவுல் வசிக்கும் இடம், அவர் எஙகும் இருக்கிரார், ஆனால் கோவிலில் வசிக்கிறரர். 

நம்மை முன்னிறுத்துவதில் பயன் கிடையாது. மாராக, கடவுளுக்கே முன்னுரிமை! அதனாலே நற்கருநையே பேழை ஆலயத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். காரணம் இயேசுவே-நற்கருநையே மையம், பல நேரங்களில் நாம் ஆலயங்களை நம் பல்வேறு சொந்த பணிக்கு உபயோகப்படுத்துகிரோம். எப்பொதும் இரைச்சல், ஆட்டம், பாட்டம்! Fashion show, திறமைகளை வெளிப்படுத்தும் மேடை அல்ல! மாறாக கடவுளுக்கு முதலிடம்! ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; (1 கொரி 3:17)

2. அமைதி சுத்தம், ஜெபம்: உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் ஆலயம். (கொரி 6:19) கடவுள் விரும்பியது காணிக்கவில்லை அல்ல மாறாக நொறுங்கொண்டு இதயத்தை. 

ஒவ்வொரு பங்கின் இலக்கு! மக்களை அவர்களுடைய ஆன்மாவை இறைவனிடத்தில் வந்து சேர்க்க வேண்டுமே! தவிர உள்ளத்தில் உணர உதவியாக இருக்க வேண்டும். பெயருக்காகவும், நம்முடைய விசுவாசமும், இறை பக்தியும் மற்றவர்களை கவர்ந்து அவர்களையும் இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்கும். 

Tuesday, November 4, 2025

INDECENT PROPOSAL (1993)

பல ஆண்டுகள் முன்னரே, நம்மூர் சினிமாக்களில் பார்த்து பழகிப்போன ஒரு முக்கோண காதல் கதையை, பிரமாண்டமாக அடல்ட்ஸ் ஒன்லி கதையாக பல புரிதல்களுடன் நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் Adrial Lyne. 

அன்பின் முன் அனைவரும் வளர்ந்த குழந்தைகள் தான் என்பதைத் தான் இந்தப் படமும் உரைத்து சொல்கிறது. ஆசையாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி,  பணமாக இருந்தாலும் சரி எத்தனை அள்ளிக் கொடுத்தாலும், இவற்றை வைத்து காதலுக்குள் எளிதாக நுழைய முடியாது என்பதே உண்மை. 

Woody Harrelson and டெமி மூர்  சிறு வயது முதலே காதலிக்க தொடங்கிய இளங்காதலர்கள். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கரம் பிடிக்கிறார்கள். அவன் ஒரு கட்டிடக்கலைஞன், அவளுக்கு கனவு இல்லத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். ஆனால் வறுமை அவர்களின் வாழ்க்கையை அலைகழித்தது.  வறுமை அவர்களை துரத்தவே, ஒரு கட்டத்தில் சூதாட துவங்குகிறார்கள்.  ராபர்ட் என்னும் மல்டி மில்லியரான ஒரு பணக்காரனுக்கு டெமி மூரின் ஏழைக்கனவு, இயல்பான சிரிப்பு மிகவும் பிடித்து போகிறது. பணம் வைத்து விளையாட வேண்டிய வுடீ, மனைவியை பணயம் வைத்து விளையாட நேரிடுகிறது. வெற்றி பெறவே பணம் வந்ததைப் பற்றி யோசிக்காமல், தான் நேசித்த, தான் ரசித்த, தான் கொண்டாடிய மனைவியை எப்படி அனுப்பினேன், அவள் எப்படி அதை இயல்பாக கடக்கிறாள் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல், தன்னுடைய கையாள தன்மையை உணர்ந்த நொடியில் கணவரின் அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. 

 பணக்காரன் ஆக நடித்திருக்கும் ராபர்ட் மிக நேர்த்தியான நடிப்பு உள்ளதை உள்ளபடியே சொல்லும் மல்டி மில்லியனர் ஆனால் உண்மை காதலுக்கு மட்டும் மரியாதை பண்ணுகிறார். ஏதோ ஒரு வேகத்தில், தன்னுடைய பண பலத்தை வைத்து, ஒரு காதலை பிரித்து விட்டோம் என்ற குற்ற உணர்வில், அமைதியாக அவளைப் பிரிய நினைக்கும் பணக்கார நாயகனுக்கும் சேர்த்து பரிதாபப்பட தோன்றுகிறது. 

ஆனால், எத்தனை பெரிய சாம்ராஜ்ய மன்னராக இருந்தாலும், அவளது காதல் முழுவதும் கணவரின் மீதே இருக்கிறது. அவள் அவளாகவே இருக்க முடிந்த நபர் அவள் கணவரிடம் மட்டுமே.


சில நேரங்களில் சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில் தவறுகள் நேர்ந்தாலும், மறுபடியும் மனிதர்கள் சரணடையும் இடம், அவரவர் காதலில் மட்டுமே என்று முடிக்கிறார்கள். 

 கணவன் மனைவி உறவில்தான் எத்தனை புரிதலின்மைகள் - எத்தனை சந்தேகங்கள். எல்லாவற்றையும் தாண்டி அவள் என்னுடையவள் என்று உணர்வதற்கு பிரிவு ஒன்றை அவசியமாகிறது. மூவரும் போட்டி போட்டு அநியாயத்திற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.  படம் கண்டிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அல்ல. காரணம், பல்வேறு அடல்ஸ் காட்சிகள் உள்ளன. தவறுகளுக்கு மேல் தவறு செய்த மனிதர்களுக்குள்ளும் ஒரு உன்னதமான காதல் ஒளிந்து கொண்டிருக்கிறது. 


Sunday, October 5, 2025

OPPENHEIMER (2023)

ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான 'அணுகுண்டின் தந்தை' எனக் கொண்டாடப்பட்ட காரணமயிருந்த ஓபன்ஹெய்மர் பற்றிய உண்மைத் திரைப்படம். இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் உலக அரசியலையே பேசியுள்ள அற்புதமான படம் தான் ஓபன்ஹெய்மர். நோலனின் முந்தைய படங்களான ‘மெமென்டோ’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டெர்ஸ்டெல்லார்’ எல்லாம் உங்களுக்கு பிடித்தால் இது நிச்சயம் உங்களை இம்ப்ரஸ் செய்யும். இந்த நூற்றாண்டின் சிறந்த திரைப்படம் ஓபன்ஹெய்மர் என பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய பால் ஸ்க்ரேடர் (Last temptation of Christ) தனது விமர்சனத்தை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். 

கதை: 1920-களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தனது மேற்படிப்பை தொடரும் இளம் வயது ஓப்பன்ஹைமர், தொடர்ந்து கம்யூனிஸ்ட்களுடனான அவரது நட்பு, ஜீன் டேட்லாக் (ஃப்ளோரன்ஸ் பக்) உடனாக காதல், ஹிட்லரின் நாஜிப் படையினருக்கு எதிரான போரில் ஒப்பன்ஹைமரின் பங்கு என அடுத்தடுத்து காட்சிகள் நகர்கின்றன.

சொந்த நாடு திரும்பும் அவர், அமெரிக்க அரசின் ‘புராஜெக்ட் மன்ஹாட்டான்’ என்ற ஒரு திட்டத்துக்காக அமெரிக்காவின் லாஸ் அலமாஸ் என்ற செவ்விந்தியர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனி நகரமே உருவாக்கப்படுகிறது. அங்குதான் உலகையே புரட்டிப் போடும் அந்த அணுகுண்டு(கண்டு)பிடிப்பை தனது சகாக்களுடன் நிகழ்த்துகிறார். தன் மீதான புகார்களை ஒப்பன்ஹைமர் உதறித் தள்ளினாரா என்பதை ஒரு சிறிய ட்விஸ்ட் உடன் சொல்லியிருக்கிறார் நோலன்.

படத்தின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் ஒரு காட்சி. ஹிரோஷிமா - நாகசாகி சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்காவின் அப்போதைய அதிபராக இருந்த ஹாரி ட்ரூமேன், ஒப்பன்ஹைமரை நேரில் பாராட்ட அழைக்கிறார். வெள்ளை மாளிகைக்குச் செல்லும் ஒப்பன்ஹைமர் அதிபரின் முகத்துக்கு நேரே, ‘மிஸ்டர் ப்ரெசிடென்ட், என் கைகளில் ரத்தக் கறை படிந்திருப்பதைப் போல உணர்கிறேன்’ என்று சொல்கிறார். இதுதான் ‘ஓப்பன்ஹைமர்’ படத்தின் கரு. இது வெறுமனே அணுகுண்டு வெடிப்பை அகலத்திரையில் பிரம்மாண்டமாக காட்டும் ஒரு திரைப்படமல்ல. மாறாக, அறிவியல் முன்னேற்றம், மனித அகங்காரம், நெறிப்பொறுப்பு மற்றும் மனச்சாட்சியின் போராட்டம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஒரு சிந்தனைத் திரைப்படமாகும். அரசியல் சுழலில் அலைகழிக்கப்பட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியின் கதை. ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஒருவன், தனி மனிதனின் ஈகோவால் ஜீரோவாக கீழிறக்கப்படும் கதை.

ஓப்பன்ஹைமராக வாழ்ந்திருக்கும் சிலியன் மர்ஃபிக்கு இது வாழ்நாளுக்கான படம். இதுவரை வந்த நோலன் படங்களில் எந்தவொரு நடிகரும் (சிலியன் மர்ஃபி உட்பட) வழங்காத ஒரு அற்புதமான நடிப்பை இதில் வழங்கியுள்ளார். சிறந்த நடிகருக்கான பல விருதுகளை தட்டி தூக்கியிருக்கிறார்.  மேட் டேமன், ஃப்ளோரென்ஸ் பக், எமிலி ப்ளண்ட், ஜோஷ் ஹார்ட்நெட்ம் கேஸி அஃப்ளிக், கேரி ஓல்ட்மேன் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வரலாறுப் பின்னணி குறித்து சிறிது தெரிந்துகொண்டு படம் பார்க்கச் செல்வது சிறப்பு. படத்தின் தொடக்கத்தில் வரும் ஆழமான அறிவியல் வசனங்களையும், ஏராளமான கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

'இப்போது நான் உலகத்தை அழிக்கும் மரணமாக ஆகிவிட்டேன்’ என்ற கீதையின் மேற்கோள், ஐன்ஸ்டீனுக்கும் ஓப்பன்ஹைமருக்கும் இடையிலான நட்பு, அதனை படத்தில் காட்டிய விதம் சிறப்பு. லுட்விக் கோரன்ஸனின் பின்னணி இசை படத்துக்கும் பெரும் பலம். அணுகுண்டு சோதனையை காட்சியப்படுத்திய விதம் பிரம்மாண்டம்.

இந்த படம் முதலில் என்டர்டெயின்மென்ட்டுக்கான படமில்லை ஆகவே கமர்ஸ்ஷியல் தளபதி விஜய் - தல அஜித் ரசிகர்கள் தவிர்க்கவும். முதல் பாதி முழுக்க வசனங்களாகவும் கருப்பு வெள்ளை, கலர் என காட்சிகள் நகர்கின்றன. எந்த மசாலாவும் இல்லாமல் நல்ல கலைப்படைப்பை விரும்பும் ரசிகர்களுக்கான படமாக இதனை நோலன் கொடுத்துள்ளார்.

அணுகுண்டு எனும் அரக்கன்: பாம் பிளாஸ்ட் காட்சிகள் எல்லாம் படமாக்குவது AI உலகில் ஜுஜுபி மேட்டர். ஆனால், கிறிஸ்டோபர் நோலன் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். அதன் நிஜ வலியையும் நிஜ உணர்வையும் அப்படியே திரையில் படமாக கடத்தப் போகிறேன் என சிஜி காட்சிகளே பயன்படுத்தாமல் இந்த படத்தை இயக்கி உள்ளார். “மனிதன் எவ்வளவு சக்தி பெற்றாலும், அவன் இறைவன் அல்ல” என்ற அடிப்படை உண்மையை நமக்கு சொல்கிறார். “அறிவு பெருகும் போது பொறுப்பும் பெருக வேண்டும்” என்ற இறைவார்த்தையின் ஒளியில், இந்த திரைப்படம் கேட்கும் கேள்வி இதுதான்: மனித உயிரை அழிக்கக்கூடிய சக்தியை உருவாக்கும் உரிமை மனிதனுக்குண்டா? ஓப்பன்ஹைமரின் உள் குற்றவுணர்ச்சி, மனவேதனை, மற்றும் மௌனம், மனச்சாட்சியின் குரல் எவ்வளவு வலிமையானது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பங்குத் தளங்களில் உள்ள இளையோரை பார்க்கச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். 

அன்பும் நீதியும் இல்லாத அறிவியல், மனிதகுலத்தைக் காக்காது—அதை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும்.

Overall Rating:  8.5 / 10

Wednesday, October 1, 2025

LAL SINGH CHADHA (2022)

ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம். 

உள்ளம் சொல்வதை உள்ளபடிச் செய்யும் உண்மையான உன்னதன் ஒருவனது வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'லால் சிங் சத்தா'.

மெல்லிய இசையின் உந்துதலுடன், தள்ளாடிக்கொண்டே பலரின் புறக்கணிப்புகளையும் தாண்டி, காற்றில் மிதந்தபடியே லால் சிங் சத்தா (ஆமீர்கான்) காலில் வந்து விழுகிறது அந்த வெண் சிறகு. அந்த வெண் சிறகைப் போலத்தான் அவனது வாழ்க்கையும். ஏதோ ஓர் அறிமுகமில்லா புள்ளியில் தொடங்கி, பல புறக்கணிப்புகளைக் கடந்து இலக்கற்ற பாதைகளில் பயணித்து இறுதியில் ஓர் இடத்திற்கு வந்தடைகிறது.


வெறும் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்டதுதான் லாலின் உலகம். அன்பும், கருணையும், பாசமும், ஏக்கமும், ஏமாற்றமும், வலியும் நிரம்பிக் கிடக்கும் அந்த உலகத்திற்குள் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் சென்று தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அழகான கதையாகத் தொகுத்து சொல்லும் படம் தான் 'லால் சிங் சத்தா'. ஹாலிவுட் க்ளாசிக் என புகழப்படும் 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் அதிகாரபூர்வ இந்தியத் தழுவல்.

படத்தின் உயிரே அதன் அமீர்கான் நாயக கதாபாத்திரம்தான். அதனை தனது அப்பாவித்தனமான முகபாவனை, குழந்தைத்தனமான உடல்மொழி, வெள்ளந்திச் சிரிப்பு என 'லால் சிங் சத்தா' கதாபாத்திரத்தை மெனக்கெடலுடன் மெருகேற்றியிருக்கிறார் ஆமீர்கான். குறிப்பாக அந்தந்த காலக்கட்டங்களுக்கு தகுந்தாற்போல உடல் எடையை குறைத்தும், கூட்டியும் படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பாராட்ட வைக்கிறது. 

கரீனா கபூர், மோனா சிங் இருவரின் நடிப்பும் காட்சிகளுக்கான நேர்த்தியைக் கூட்டுகின்றன. நாக சைதன்யா சிறிது நேரமே வந்தாலும், நடிப்புக்காக கூடுதல் உழைப்பைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஷாருக்கானின் சிறப்புத் தோற்றம் அப்லாஸ் அள்ளுகிறது. லெஃப்டினட் ஜெனரலாக நடித்திருக்கும் மானவ் விஜ் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஆயிரம் சொன்னாலும் எனக்கு என்னவோ ஆங்கிலத்தின் Forrest Gump இன் Tom Hanks, Robin Wright கதாபாத்திரங்கள் கண்ணுக்குள்ளே இருக்கின்றார்கள்.  ஆங்கில படம் வசனங்கள் மனதை தொடும் அளவுக்கு இந்தியில் மற்றும் தமிழில் இல்லை. சாக்லெட்டுக்குப் பதிலாக பானிபூரி முன்வைக்கப்படுகிறது. அதையொட்டி வரும், 'எங்க அம்மா சொல்லுவாங்க பானிபூரி சாப்டா வயிறு நிறையும் மனசு நிறையாது' வசனம், வாழ்க்கையை மையப்படுத்தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் எழுதப்பட்ட (Life is like a box of chocolates, you never know what you're going to get.) அழுத்தமான வசனத்தை பழிவாங்கி விடுகிறது.

தவிர, 'ஆப்ரேஷன் புளு ஸ்டார்', 'எமர்ஜென்சி', 'கார்கில் போர்', 'ரத யாத்திரை' போன்ற சென்சிடிவான வரலாற்றுச் சம்பவங்களை கவனமாக கையாண்டிருக்கின்றனர். குறிப்பாக மத மோதல்களையும், வன்முறைகளையும், உயிரைக் கொல்லும் வைரஸுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட வசனம் கவனம் பெறுகிறது. 'கடவுள் ஒண்ணு சொன்னா அத சொல்றவன் வேற ஒண்ணு சொல்றான்' என்ற வசனம் அழுத்தமாக கடந்து செல்கிறது.

இந்தத் திரைப்படம் எளிமை, தூய்மை, நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற அன்பு ஆகியவை மனித வாழ்வை எவ்வாறு அர்த்தமுள்ளதாக்குகின்றன என்பதை அழகாக வெளிப்படுத்துகிறது. அமீர் கதாபாத்திரம் அறிவிலும் உலகியலிலும் “பலவீனன்” என்று கருதப்பட்டாலும், அவன் இதயம் இயேசு பாராட்டும் குழந்தை மனப்பான்மையை உடையது. அவன் எந்தச் சூழலிலும் குறை கூறாமல், பழிவாங்காமல், கிடைத்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறான். உலகின் கணக்கில் பெரியதாய் தோன்றாத வாழ்க்கையிலும், உண்மையான அன்பு, விசுவாசம், நேர்மை ஆகியவற்றை வாழ்ந்தால், அந்த வாழ்க்கை இறைவனின் திட்டத்தில் ஆழமான அர்த்தம் பெறுகிறது.

Overall Rating:  7.2 / 10

COLD WAR (2018)

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இயங்கும் கம்யூனிச நாடாக மாறிப் போயிருந்தது போலந்து. 

மேற்கு நாடுகள், குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா அனைத்தும் “சுதந்திர ஜனநாயக நாடுகள்” எனக் கருதப்பட்டாலும், கம்யூனிச ஆட்சிகள் அவற்றை எதிரி நாடுகளாக பார்த்தன. போலந்தில் நடப்பதும் கம்யூனிச ஆட்சி என்பதால் தாமாகவே அவை போலந்துக்கும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன. இந்த உலக நாடுகளில் அரசியல் சூழலுக்கு இடையில் ததும்பிப் பெருகிய ஒரு காதலின் கதைதான் Cold War (2018 film) 


போர்முடிந்த பிறகு நாயகனும் அவனது மேலாளரும் சேர்ந்து போலந்து நாட்டின் நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் வேலையை அரசு உதவியுடன் செய்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் இசையைக் கண்டுபிடித்து ஒரு இசைக்குழு உண்டாக்குவதுதான் நோக்கம். அப்படி தங்கள் இசைத் திறமையை வெளிக்காட்ட வந்திருப்பவர்களில் ஒருத்திதான் நாயகி. அவளைப் பார்த்த கணமே நாயகனுக்குப் பிடித்து விடுகிறது. கோடி முகங்களில் ஒரு முகம் மட்டும் உயிரின் வேரில் பூவை மலர்த்துமே அது போல முதல் பார்வை முதல் ஈர்ப்பு என இருவருக்கும் இடையில் காதல் தளும்பத் தொடங்குகிறது.

இசைக்குழுவினரை கம்யூனிச சித்தாந்தம் பற்றியும் தலைவர்கள் பற்றியும் பாடல் பாடச் சொல்லி அரசாங்கம் அறிவுறுத்தும் போது நாயகன் எதிர்க்கிறான், மேலாளன் தனது தொழில் வளர்ச்சிக்காக ஒப்புக்கொள்கிறான். நாயகிக்கோ எப்படியாவது நாயகனோடு இந்த வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட வேண்டும். இசைக்குழுவை விட்டு நீங்கும் முடிவை நாயகன் எடுக்கிறான். 

ஒரு அரிய வாய்ப்பில் பெர்லினில் ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு நாயகனுடன் இந்த நாட்டை விட்டே ஓடிவரச் சம்மதிக்கிறாள். எங்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்றால் பிரான்ஸ்க்கு. போலந்து நாட்டின் எதிரி நாட்டுக்கு. ஆனால் குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அவள் வரவில்லை, நாயகன் மனமுடைந்து அவன் மட்டுமே பிரான்ஸ்க்கு சென்றுவிடுகிறான். 

இருவரும் இருவேறு திசையில் வாழ நேர்கிறது. காலங்கள் ஓடுகின்றன, அவனுக்குச் சில காதலிகள் வாழ்வில் வருகிறார்கள். அவளுக்குச் சில காதலன்கள் வாழ்வில் வருகிறார்கள். ஆனாலும் அணையாத சுடராய் இந்தக் காதல் மட்டும் எப்போதும் எரிந்தபடியே இருக்கிறது. அவள் சிறந்த பாடகியாக மாறி இருக்கிறாள், அவன் ஓர் இசையமைப்பாளனாக மாறி இருக்கிறான்.

சிலகாலம் கழிந்து அவளைத் தேடிச் சென்று சந்தித்து காரணம் கேட்பான், நீ ஏன் என்று வராமல் போனாய்? "என்னால் உன்னோடு வரமுடியாமல் போனதுக்கு மன்னித்துக்கொள், ஒருவேளை அன்று நாம் சேர்ந்து ஓடிப் போயிருந்தால் இருவருமே தோற்று இருப்போம். வாழ்விலும் சரி. கனவிலும் சரி"

"என் இடம் வந்துவிட்டது இனி என்னைப் பின்தொடராதே" என்று சொல்லிவிட்டுச் சிறுது தூரம் சென்று அடக்கமாட்டாமல் திரும்ப ஓடிவந்து முத்தம் தருவாள். அதுதான் அவர்களின் காதலின் துவக்கமும், நிறைவும். வெட்ட வெட்டப் பல்லாயிரம் கிளைகளாகப் பெருகும் காதல் இது. 

நாயகி போலந்துக்கு சென்றுவிட்டாள் என்று தெரிந்ததும், நாயகனும் போலந்துக்கு செல்வான். ஆனால் போலந்தைப் பொறுத்தவரை இவன் எதிரிநாட்டுக்கு தப்பிச் சென்றவன், தேசதுரோகி. கைது செய்யப்படுகிறான்.  பதினைந்து வருட சிறை தண்டனை. நாயகிக்குத் தெரிந்து சிறைக்குத் தேடிவருவாள். 

நீ ஏன் இங்க வந்த? போ போயி யாராவது உனக்கு உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆண்மகனாக தேர்ந்தெடுத்து சந்தோசமா வாழு. என்பான். அவனை அழுத்தமாக முத்தமிட்டுச் சொல்வாள். "அப்படி ஒருத்தன் இன்னும் பிறக்கல. நான் உன்னை வெளியில் கொண்டுவருவேன் எப்படியாவது."

இதற்குப் பிறகான இறுதி பத்து நிமிடக் கதையைச் சொல்ல மாட்டேன். அதைக் காணுங்கள். மனதைக் கரைத்து நினைவில் அகலாது நின்றுவிடக் கூடிய ஒரு உன்னத காதல். 

“ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” (மாற் 8:36) என்ற வார்த்தைகள் இந்தக் கதையில் உயிர் பெறுகின்றன. விடுதலை மறுக்கப்படும் இடத்தில், மனித மரியாதை மிதிக்கப்படும் சூழலில், காதலும் நம்பிக்கையும் சுவாசிக்க முடியாது என்பதை நாயகன் விக்டர்–நாயகி ஸூலா உறவு நினைவூட்டுகிறது. “சமாதானம் செய்பவர்கள் பேறுபெற்றோர்” (மத் 5:9) என்ற நற்செய்தி அழைப்பின் ஒளியில், Cold War மனித இதயம் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேர்வு செய்யும் போது உறவுகள் உடைகின்றன என்றும், உண்மை, தியாகம், மன்னிப்பு ஆகியவை உள்ள இடத்தில்தான் உண்மையான ஒன்றியம் சாத்தியமென்றும் அமைதியாகச் சொல்கிறது.

படம் பாரத்து முடித்ததில் இருந்து மனம் முழுக்க ஒரு வெறுமையும், வெறுமை முழுக்க காதலும் நிரம்பியிருக்கிறது. (நன்றி: முக நூல் நண்பர்)

Overall Rating:  7.1 / 10

Tuesday, September 9, 2025

Sore; A wife from the future

வார வார எத்தனை படங்கள் வந்து கொண்டிருக்கிறது? எடுத்த கதையை எடுத்தால் என்ன பிரச்சனை? கதைக்கு இங்கே பஞ்சம் என்று சொல்பவர்கள் எல்லாம் கொரிய படங்களை பார்க்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்! ஒவ்வொரு சீனும் என்ன மேக்கிங் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு 2025ல ஒரு இந்தோனேசியன் ரொமான்டிக் சயின்ஸ் பிக்ஷன் டைம்லூப் படமாக வெளியான Sore; A wife from the future.

முதல் காட்சியில், படுக்கையில் இருந்து எழுந்தவன் அருகில் ஒரு அந்நிய பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். "யார் நீ". என் பெயர் sore, உன் வருங்கால பொண்டாட்டி, நான் எதிர்காலத்தில் இருந்து வருகிறேன். நம்மைப் போல் முதலில் நம்ப மறுப்பவன் பிறகு யாருக்குமே தெரியாத அவனது ஆழமான ரகசியங்கள்  அவள் சொல்வதின்  வழியாக நம்பத் தொடங்குகிறான். "இன்னும் மூன்று வருடங்கள் கழித்து நீ என்னை சந்திப்பாய் என் மீது காதல் கொள்வாய், நான் இப்போது உன் வாழ்வை செம்மைப்படுத்ததான் வந்திருக்கிறேன். இனி நீ நான் சொல்வதைக் கேட்டால் மட்டும் போதும் என்று,  குடி புகைப் பழக்கத்தை நிறுத்தச் சொல்கிறாள், அதிகாலையில் எழுந்து உடல்நலம் பேணச் சொல்கிறாள். சம்மதிக்கிறான். ஒரு நாள் அவளுக்குத் தெரியாமல் புகைப் பிடிக்கிறான். அப்போதுதான் உண்மை சொல்வாள். நீ இப்படிதான் என் சொல்பேச்சுக் கேட்காமல் உடலைக் கெடுத்து எட்டு வருடம் கழித்து இறந்துவிட்டாய். நான் தனியாகிவிட்டேன். சொல்லிய மறுகணம் அவள் மூர்ச்சையாகி இறந்துவிடுவாள்.


மீண்டும் கதை முதலில் இருந்து தொடர்கிறது. இவர்தான் தன்னுடைய மனைவி அப்படிங்கறதுக்கு கதாநாயகன் அடுத்து என்னதான் செய்தார் அதை கண்டுபிடிக்கிறதுக்கு. இப்படி பல விஷயங்களுக்கான விடைதான் இந்த படத்துடைய மொத்த கதையே.

இந்த படத்தின் இயக்குனர் யாண்டி லாரன்ஸ், ஒரு பெஸ்ட் இந்தோனேசிய இயக்குனர். இந்த படத்துல அட்டகாசமான எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரம் ஸொரெ என்ற ஹீரோயின் கதாபாத்திரம். அதை அந்த அளவுக்கு அழகாக உணர்ந்து உள்வாங்கி அட்டகாசமாக ஸ்கிரீன்ல புல் ஆஃப் பண்ணாங்க. அட்டகாசமான ஒரு பெர்பார்மன்ஸ். இது ஒரு டைம் லூப் படம். பொதுவாக தமிழில் இந்த மாதிரியான டைம் லூப் படங்கள் மிக மிக அரிது. அடுத்து என்ன நடக்க போதோ என்ற ஒரு பதபதைப்பு, பரபரப்பு  ஒவ்வொரு சீனிலும்! 


படத்துல ஹீரோவே பேசிக்காக ஒரு போட்டோகிராபர் என்பதால் சினிமட்டோகிராபி ஸ்டன்னிங்காக இருக்கும். படத்துடைய சினிமட்டோகிராபர் படத்துடைய மியூசிக் டைரக்டரும் அந்த அளவுக்கு மியூசிக் எங்க வருது உள்ள வருது வெளிய போகுதுனே தெரியாது. சீன்ல நமக்கு கொடுக்க வேண்டிய அந்த உணர்ச்சியை காட்சிகள் கடத்துது.  

இந்த படம் கிட்டத்தட்ட 13 கேட்டகிரில நாமினேட் ஆகி ஆல்ரெடி ஒன்பது விருதுகளை வென்ற ஒரு தரமான படம்தான் . Adult Content பொறுத்த அளவுக்கு எதுவுமே கிடையாது தாராளமாக ஃபேமிலியோட பார்க்கக்கூடிய படம்தான். 

 நம்முடைய திருஅவையில், மறைக்கல்வி மற்றும் பல குடும்பங்களில் இந்த படத்தை நிச்சயமாக ப்ரொபோஸ் செய்யலாம்.  உங்களுடைய Reviewக்கு பயன்படும்படியான சில சிந்தனைகள்:

  • No Marriage is perfect. "எந்தக் கல்யாணமும் குறைபாடற்றது அல்ல, உன்னிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்ட பிறகு எனக்குத் தோன்றும். இறந்து இறந்து பத்தாயிரம் முறை பிறந்தாலும் நான் உன்னையே தான் தேடி வருவேன்" அவன் ஆச்சர்யப்பட்டு ஓ இவ்வளவு காதலிக்கிறாயா என்னை! என்பான்.
  • "அவளால் அவனை மாற்ற முடியவே முடியாது", அப்போதுதான் உணர்வாள், யாரையும் யாரால்  மாற்ற முடியாது, ஏனெனில் அது எப்போதும் உன்கையில்தான் இருக்கிறது, அதைச் செய்யவேண்டியது நீதான். 
  • அது ஒரு கட்டத்துக்கு மேல போகும்போது நமக்கே இவ்வளவுதாமா வாழ்க்கை அப்படிங்கிற அளவுக்கு  நம்மை அறியாமல் மனசு ரொம்ப நொந்து போய்விடுகிறோம். மன்னிப்பு, ஏற்றுக் கொள்தல் இவைதான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர். 


Popular Posts