Sunday, December 28, 2025

Feast of Holy Family (Dec 28-30)

திருகுடும்ப ஞாயிறு/ எசாயா 7:10-14. உரோமையர் 1:1-7. மத்தேயு 1:18-24


வலுவின்மையை சுமப்பதே குடும்பம்: ஒரு குடும்பத்தில் அண்ணன்-தம்பி என்று இரு சகோதரர்கள் இருந்தார்கள். தம்பி போலியோ நோயினால் நடக்க முடியாமல் ஆகிறான். ஆனால், அவனுக்கு கேரம் போர்ட் விளையாடுவது ரொம்பப் பிடிக்கும். ஊரின் வெளியில் உள்ள ஒரு அரங்கில் சிறுவர்களுக்காக கேரம் போர்ட் விளையாட்டு நடக்கும். அங்கே செல்ல விரும்பிய தன் தம்பியைத் தோளில் சுமந்துகொண்டு செல்கின்றான் அண்ணன். அரங்கம் நிரம்பி இருந்ததால் காத்திருக்க வேண்டிய கட்டாயம். அரங்கத்தின் ஓரத்தில் தம்பியை முதுகில் சுமந்தவாறு எந்த இடம் காலியாகும் என்று காத்திருக்கின்றான் அண்ணன். அண்ணன் தம்பியைத் தூக்கிக்கொண்டே நிற்பதைக் கவனிக்கின்ற பெரியவர் ஒருவர், ‘தம்பி! அந்தச் சுமையைக் கொஞ்சம் இறக்கிவைக்கலாமே! இப்படி தூக்கிக்கொண்டே நிற்கின்றாயே?’ எனக் கேட்கின்றார். ‘இவன் சுமையல்ல. என் தம்பி!’ என்கிறான் அண்ணன்.


குடும்பம் என்றால் ஒருவர் மற்றவரின் வலுவின்மையைச் சுமப்பதே.


திறமைகள், உடல்நலம் மற்றும் செல்வம் சேர்க்கும் திறன் பகிர்ந்து கொள்வது தான் குடும்பம்.  நம்முடைய வலுவின்மைகளைத் தாங்கிக்கொள்ள கடவுள் ஏற்படுத்திய ஒன்றுதான் குடும்பம்


குடும்பம் கடவுளின் மீட்புத் திட்டத்தின் அடிப்படை மனிதனை ஆணும் பெண்ணும் ஆக படைத்தார் அவர்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்ப வேண்டும் என்று விரும்பினார். ஆதாம் ஏவாள் தொட்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடைசி புத்தகமான திருவழிப்பாட்டு வரை நாம் காண்கின்றோம். 


பழைய ஏற்பாட்டில் கடவுள் தனி நபருடன் அல்ல, குடும்பத்துடன் உடன்படிக்கை செய்கிறார்: நோவா, ஆபிரகாம், இஸ்ரவேல் மக்கள்



கடவுளின் மீட்பு தனிநபருக்கல்ல – குடும்பத்திற்கான மீட்பு


  • கடவுள் நோவாவை நீதிமானாகக் கண்டார் (தொ. 6:9). கடவுளின் திட்டம் ஒருவரை மட்டும் காப்பாற்றுவது அல்ல; அவர் வழியாக அவருடைய குடும்பத்தை ஆசீர்வதித்தார்,  காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார்.
  • சக்கேயுவிடம் இயேசு: “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது” (லூக்கா 19:9)
  • சிறைக்காவலனிடம் பேதுரு, “ஆண்டவர் இயேசுவை விசுவாசி; நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (தி தூ 16:31)


மாதா டிவியில் கத்தோலிக்க வழக்கறிஞர் கூறுகிறார், "மற்ற குடும்பங்களை விட இன்று நம்முடைய கத்தோலிக்கு குடும்பங்களில் திருமணங்கள் முறிவு பெறுகின்றது,?


கணவன் மனைவி சிறு பிரச்சனைக்கு கூட உடனே நீதிமன்றத்தின் ஆடுவது, விவாகரத்து கேட்பது சகிப்புக் கொள்ளும் தன்மை இல்லாமல் அதிகமாகி விட்டது


We go for summer vacation trip to some places like Ooty, Kodaikanal. You need to go to the USA for a harmonious family relationship. You need not get a visa to go USA. U stands for Understanding, S stands for Sacrifice, and A stands for Affection. 



1. Understanding: 

Trust: அனைத்து உறவுகளின் மையம் நம்பிக்கை டிரஸ்ட். 


கடவுள் மையம்: நாசரேத் திரு குடும்பத்திலே திருகுடும்பத்தின் மையம் இயேசு. மரியாவாக இருக்கட்டும் யோசிப்புவாக இருக்கட்டும் அவர்கள் இருவருமே இயேசு கிறிஸ்து உடைய எதிர்காலத்தை பற்றி எண்ணியவாறு அவரைப்பற்றி சிந்தித்தவாறு அவரை எப்படி வளர்ப்பது என்று எப்படி பாதுகாப்பது என்று எண்ணி எவர்கள். நம்முடைய குடும்பங்களும் கடவுளை மையப்படுத்தியதாகவும் கடவுள் மையம் கொண்டவராக வேண்டும். 


யோவான் 15 "என்னோடு இருப்பவன் மிகுந்த கனி தருவான்" என்னை விட்டு பிரிந்து ஒன்றும் எந்த குடும்பத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது."


லூக்கா 1:37 கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை. 


ஜெபம் இறைவார்த்தை, ஞாயிறு திருப்பலி வழிபாடு. புனிதர்கள் பற்றிய கதைகள் விவிலிய கதைகள் இவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் . திருவருசாதனங்கள் வழி வாழ்தல், ஞாயிற்றுக்கிழமை எங்கள் குழந்தை ஓய்வு எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களே பார்க்கிறேன்


கூடி ஜெபிக்கின்ற குடும்பம் குலையாது.


கடவுளோடு இணைந்து குடும்பம் கண்ணியமான குடும்பம். 



2. Sacrifice: 

திருமணத்தின் போது நீங்கள் கொடுத்த திருமண வாக்குறுதிகளை மறந்து விடாதீர்கள். 


பீடத்த்திற்கு முன்பாக கண்களைப் பார்த்து, உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் சாட்சியாக, பொருளுணர்ந்து நீங்கள் கூறிய அந்த வார்த்தைகளை அடிக்கடி நினைத்துப் பாருங்கள். "நான் இன்பத்திலும் துன்பத்திலும், உடல்நலத்தில், நோயிலும், என் வாழ்நாள் முழுவதும் உன்னை அன்புடன் காப்பாற்றுவேன்."


தியாகத்திற்கு எடுத்துக்காட்டு புனித சூசையப்பர். அகதிகள் நாட்டிலே வாழ்ந்தபோது எப்படி அலைந்து திரிந்தார் குடும்பத்தை தூக்கிக்கொண்டு அவர்களை காப்பாற்ற வேண்டும் எதிரிகள்டம் கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயிரையும் பயணம் செய்யும் இயல்பு அது தான் தியாகம். 


மனைவி யார் என்பது கணவன் வேலையை விடும்போதுதான் தெரியும். கணவன் யார் என்று மனைவி நோய்வாய்ப்படும் போது தான் தெரியும், பிள்ளைகள் யாரென்று பெற்றோர்கள் இறக்கும் தருவாயில் இருக்கும்போது தான் தெரியும். 


3. Affection: 

1 கொரிந்தியர் 13. 


அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;


We need to move from attractive love to mature love; கவர்ச்சிகரமான அன்பிலிருந்து, பக்குவமான அன்பிரறற்கு செல்ல வேண்டும். 


“உங்களுடைய ஈகோ லெவலை அறிந்து கொள்ள வேண்டுமா?


உங்கள் குடும்பத்தினருடன் சண்டை போட்ட பின், எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கிறீர்களோ, அத்தனை நாட்களே உங்கள் ஈகோ லெவல்.


ஒரு நாள் பேசாமல் இருந்தால் – ஈகோ குறைவு. பல நாட்கள் பேசாமல் இருந்தால் – உறவு காயம்.


மன்னிப்பு பலவீனம் அல்ல, ஆன்மீக வலிமை



Open and Honest Communication


“Speak the truth in love.” (Eph 4:15)


Listening is as important as speaking.


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது அன்பு அறமாக திகழ வேண்டும் அன்பு அறமாக வழிந்தோட வேண்டும். 



அன்பு எப்போது அரண் ஆகும் அது சமூக அக்கறை கொண்டபோது அரன, 


மரியாள் காண ஒரு திருமணத்தில் தண்ணீர் தீர்ந்தபோது திராட்சை ரசம் தீர்ந்த போது அந்த அன்பு அவர்கள் அவர் தம் குடும்பம் மேல் தன் மகன் மேல் கொண்ட அன்பு இப்போது சமூக அக்கறை கொண்டதாக மாறுகிறது காண்கின்றோம் விருந்தோம்பல் தம்பதியினர் மேல் ஒரு அக்கறை கொண்டதாக. 


திரு குடும்பம் இந்த உலகை ஒரு எதிரியாக பார்க்கவில்லை.  திருகுடும்பத்தை உலகம் எதிர்த்தாலும் அது அன்பை போதிக்கின்றது, அன்பை பரப்புகிறது அன்பை வளர்க்கும் ஒரு சமூகமாக திரு குடும்பத்தில் உள்ளவர்களை வளர்த்தெடுக்கிறது அக்கறை கொண்டவர்களை குடும்பம் வளர்த்தெடுக்கிறது. 

Saturday, December 20, 2025

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு (A)

எசாயா 7:10-14. உரோமையர் 1:1-7. மத்தேயு 1:18-24

ஒரு ரீல் நினைவுக்கு வருகிறது. "வாழ்க்கையில பெருசா சாதிக்கணும்னு நினைக்கும் போது பசி வருகிறது. சரி, சாப்பிட்டு சாதிக்கலாம் அப்படின்னு நினைக்கும்போது, தூக்கம் வருகிறது. பசியையும் தூக்கத்தையும் ஜெயிப்பவனால் மட்டுமே சாதிக்க முடியும்."

ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் செலவிடுகிறானாம். தூக்கம் நேரம் வீணாக்கம் அல்ல; அது தனது வாழ்க்கையை சீரமைக்கும் அவசியமான ஓய்வு.  எங்கள் மனநலக காப்பகத்தில் உள்ள பலர் எதனால் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றால் பலருக்கு தூக்கமின்மை பெரிய வியாதியாக இருக்கிறது. ஒரே ஒரு நாள் கூட நல்ல தூக்கம் இல்லாவிட்டால், எரிச்சல், கோபம் போண்ற மன நோய்கள்
அதிகரிக்கும். தூக்கம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தினமும் 6 மணி நேரத்திற்குக் குறைவாக தூங்குபவர்கள் அடிக்கடி நோயுற்றுவிடுவார்கள். “தூக்கம் சோம்பல் அல்ல; அது உடல் சொல்லும் குரலைக் கேட்கும் ஞானமே அது.”

இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும், அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.

முதல் வாசகம்: கிமு 735-ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசன் அசீரியாவை எதிர்க்க திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான்.  இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார்: ‘பயம் வேண்டாம். ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்’ (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். ஆக, அச்சம் என்னும் தூக்கத்திலிருந்த ஆகாசு ஆண்டவராகிய கடவுள் எசாயா வழியாக அருளிய அடையாளத்தால் துணிவுக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), முதலில், பவுல் தன்னைப் பற்றி பதிவு செய்கின்றார் – ‘இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,’ ‘திருத்தூதன்,’ மற்றும் ‘நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.’ ஆண்டவராகிய திருஅவையை, ஆண்டவரின் திருஅவையை அச்சுறுத்துவதற்காகத் தமஸ்கு புறப்பட்ட சவுல் தூக்கத்திலிருந்து விடுதலை பெறுகின்றார். புதிய அடையாளங்களைப் பெற்றுக்கொள்கின்றார். இரண்டாவதாக, ‘தாவீதின் மரபினரான இயேசுவே கடவுளின் மகன்’ என முன்மொழிந்து பிறஇனத்தார் அனைவரையும் நம்பிக்கைக்கு விழித்தெழச் செய்கின்றார். ஆக, நம்பிக்கையின்மை என்னும் தூக்கத்திலிருந்த பவுல் (மற்றும் பிறஇனத்தார்) இயேசு கிறிஸ்து தமஸ்கு வழியில் தோன்றிய நிகழ்வு வழியாக நம்பிக்கைக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் ‘பெயரிடும் நிகழ்வால்’ உறுதிசெய்யப்படுகிறது. நிகழ்வில் அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த யோசேப்பு திடீரென தூங்கிவிடுகின்றார். கனவில் ஆண்டவரின் தூதர் அவரிடம் பேசுகின்றார். இரு செய்திகள் தரப்படுகின்றன. ஒன்று, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான். இரண்டு, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய பெயர்.

Sleeping St. Joseph

வாழ்வின் எதார்த்தங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, உடனடியாகத் தூங்கிவிடுதல் நலம்
என்பது யோசேப்பு தருகின்ற முதல் பாடமாக இருக்கின்றது.  கடவுளின் திட்டங்கள் நமக்கு புரியாத போது, இந்த வாழ்வு நம்மை அலைக்கழிக்கும் போது, பலருடைய விமர்சனங்களால் நாம் கூனி குறுகி நிற்கும்போது, பல தோல்விகளை சந்தித்து துவண்டு விழும்போது நாமும் தூங்கியாக வேண்டும். ஆனால்,  ஆனால் கடவுளின் வெளிப்படுத்துதலுக்காக ஆயத்தமாய் இருக்க வேண்டும். காதுகளை தீட்டிக்கொண்டு செவிமடுக்க வேண்டும். நிராகரித்தல் என்னும் தூக்கத்திலிருந்த யோசேப்பு கனவில் நிகழ்ந்த வெளிப்பாட்டின் வழியாக ஏற்றுக்கொள்தல் என்னும் நிலைக்கு விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

இன்று நம் வாழ்வில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் நிலைகளில் இருக்கக் காரணம் நாம் கொள்ளும் அச்சம், நம்பிக்கையின்மை, மற்றும் நிரகாரித்தல் ஆகியவைதாம். இவற்றால்தாம் நம் அமைதியும் நிலைகுலைகிறது. தனிப்பட்ட வாழ்வு பற்றிய அச்சம், இறைவன்மேல் நம்பிக்கையின்மை, மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும் நிரகாரித்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விழித்தெழ வேண்டும் எனில் என்ன செய்வது? இறைவனின் குறுக்கீட்டைக் கண்டடைந்து அதை உறுதியாகப் பற்றிக்கொள்வது.

திருத்தந்தை பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர் Sleeping St. Joseph என்ற ஒரு பக்தி முயற்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதாவது ஒரு அருட்சகோதரி கொடுத்த இந்த Sleeping St. Joseph சுரூபத்தை  எப்போதுமே தன்னுடைய தலையணைக்கு அருகில் வைத்துக்கொள்வாராம். தூங்கும் போது தன்னுடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ துன்பங்கள் கவலைகள் அனைத்தையும் திரு அவையின் சவால்களையும் ஒரு பேப்பரில் எழுதி அந்த சிலையின் அடியில் வைத்து தூங்கச் செல்வார். தூங்கும்போது கடவுள் நம் பிரச்சனைகளை சரி படுத்துகிறார். ஆகவே வருடம் முடிவில் தான் கவனித்தாராம் ஏராளமான பேப்பர்கள் அங்கே இருந்தன.  

திருவருகைக்காலத்தின் நான்காம் (இறுதி) வாரத்திற்குள் நுழையும் நாம் இறைநம்பிக்கை வைத்தபடி, பிரச்சினைகளை கடவுளிடம் கையளித்தபடி, அயர்ந்து தூங்குவோம். இறை வார்த்தையின் படி செயல்படுவோம். விழித்தெழுந்து அமைதியின் அரசரைக் கண்டுகொள்வோம்.

Christmas Mass Homilies

Christmas Mass, Sulur Sagaya Matha Parish, Dec 2025

கிறிஸ்துமஸ் – கொண்டாட்டமா? மாற்றமா?

சில நாட்களுக்கு முன், உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி, குறுகிய காலத்திற்கு இந்தியாவுக்கு வந்தார். அவர் வந்த செய்தி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக வலைதளங்கள்—எங்கும் மெஸ்ஸியைப் பற்றிய பேச்சே. அரசியல்வாதிகளுடன் சந்திப்பு, பிரபலங்களுடன் புகைப்படங்கள், மிகப்பெரிய விழாக்கள்— மூன்று நாட்களுக்காகவே சுமார் 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான சுனில் சேத்ரி, அமைதியாக ஓரமாக நின்றார். பல ஆண்டுகளாக நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர், சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்தவர்களில் ஒருவர்—அவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. மெஸ்ஸியின் ஜெர்சியை அணியச் சொல்லப்பட்டு, அரங்கின் ஓரத்தில் மறக்கப்பட்டவர் போல நின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு ஒரு கசப்பான உண்மையை நினைவூட்டுகிறது:

நாம் எளிமையைவிட புகழைக் கொண்டாடுகிறோம்;

நன்றியைவிட செல்வத்தை விரும்புகிறோம்;

நீடித்த உழைப்பைவிட பிரபலத்தையே மதிக்கிறோம்.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் இயேசுவே மறுபிறப்பு எடுத்து வந்தாலும், இன்று நம் முன்னே இயல்பான மனிதனாக ஏசு வந்து நின்றாலும் அவர் நாம் எதிர்பார்க்கும்  நடை,உடை, அதிசயங்கள் நிகழ்த்தும் இயேசுவாக இருந்தால் மட்டுமே நாம் அவரை வரவேற்கும் மனித சமூகமாக இருக்கின்றோம். 

அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு ரீல்ஸ் போடுவோமே தவிர மாறாக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள மாட்டோம்.

இதுதான் இன்று நம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் ஒரு எச்சரிக்கை.

மெஸ்ஸியின் ஜெர்சியை வரவேற்க, கொண்டாடத்தெரிந்த நமக்கு .. நம் மண்ணின் சாதனை சேத்ரியை மகிழ்விக்க, கொண்டாட  மறந்தது ஏன்??? அன்று ஏசு கிறிஸ்துவுக்கு சொந்த ஊரில் மதிப்பில்லாது போலவே இன்று நம் நாட்டு சாதனையாளனை ஓரம் கட்டியது போல் அல்லவா...

பல நேரங்களில் கிறிஸ்துமஸ் என்பது வெளிப்புற நிகழ்ச்சியாக மாறிவிடுகிறது: ஒளிவிளக்குகள், விலை உயர்ந்த அலங்காரங்கள், ஷாப்பிங், பார்ட்டிகளில், கரோல்கள், சமூக வலைதளப் பதிவுகள்.

எங்கும் கிறிஸ்துமஸ் இருக்கிறது—

ஆனால் இதயத்தில் இல்லை.

கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதன் நோக்கத்தை மறக்காதீர்கள்.

“இதோ, கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெறுவாள்” (எசா 7:14)கிறிஸ்துமஸ் என்பது கடவுள் மனிதரிடம் வந்த நாள்.

அவர் அரண்மனையில் பிறக்கவில்லை— நாம் அசிங்கம் என்று நினைக்கக்கூடிய மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

பிரபலங்களிடையே, அரசியல் பிரமுகர்களுக்கு இடையே அல்ல மாறாக— ஆடு மாடு மேய்க்கும் இடையர்களுக்கு நடுவே .

பிரம்மாண்டுகளுக்கு நடுவே அல்ல மாறாக இயற்கைக்கு இடையில். 

பிரபலமான மனிதராக அல்ல மாறாக குழந்தையாக...

மத்தேயு நற்செய்தியில், யோசேப்புக்கு கனவில் தூதர் கூறுகிறார்: “அவளிடம் பிறக்கவிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியால் உண்டானது.” (மத் 1:20)

அந்தக் குழந்தை—எம்மானுவேல்,

“கடவுள் நம்மோடு இருக்கிறார்.”

“அனைத்து மக்களுக்கும் கிருபையும் சமாதானமும்” (உரோ 1:7)

பவுல் திருத்தூதர் சொல்வதுபோல்,

கிறிஸ்து வருகையின் நோக்கம்—

வாழ்க்கையை மாற்றுவது,

மனங்களை மாற்றுவது,

உறவுகளைப் புதுப்பிப்பது.


மெஸ்ஸியின் வருகையின் நோக்கம் இளம் வீரர்களை ஊக்குவிப்பதுதான்.

அதைப்போல, இயேசுவின் பிறப்பின் நோக்கம்

வெறும் பரிசுகள் அல்ல—பரிசுத்தமான மாற்றம்.

இயேசு ஒரு அழகான கதையாக மட்டும் இருக்க வரவில்லை.

ஆண்டு ஒருமுறை வரும் சடங்காகவும் அல்ல.

அவர் நம் வாழ்க்கையில் பிறக்க விரும்புகிறார்.

இயேசு பாலனிடம் நம் என்ன கேட்கலாம்? 

இதன் நன்றி சொல்வோம் எந்நேரம் மகிழ்ச்சியாய் இருங்கள் எப்பொழுதும் நன்றி கூறுங்கள் இடைவிடாது ஜெபியுங்கள் பி கிரேட் ஃபுல் நம்மில் ஒருவராக கடவுள் பிறந்ததற்கு நன்றி கூறுங்கள் கடவுள் ஏழைகள் ஏழைகளோடு வாழ முடிவு செய்ததற்காக நன்றி கூறவும் அதுவே கிறிஸ்துமஸ். 

உரோமையர் 7:1 God will give blessing and peace" பிலிப்பைன்ஸ் நாட்டில் குழந்தை இயேசுவின் பக்தி, 


இந்த கிறிஸ்துமஸில் நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள்:

  • நாம் இயேசுவை கொண்டாடுகிறோமா?அல்லது வெறும் கிறிஸ்துமஸை மட்டுமா?
  • வீட்டை அலங்கரிக்கிறோமா? அல்லது இதயத்தைத் திறக்கிறோமா?
  • இந்த விழா நம்மை மாற்றுகிறதா? அல்லது வெறும் மகிழ்விக்கிறதா?

இந்த கிறிஸ்துமஸ் 2025, நம்மை வெளிப்புற கொண்டாட்டத்திலிருந்து உள் மாற்றத்துக்குக் கொண்டு செல்லட்டும்.


உண்மையான கிறிஸ்துமஸ் அதிசயம் ஒளிவிளக்குகளில் இல்லை— மாறிய இதயங்களில் இருக்கட்டும். அவருடைய பிறப்பு நம் காயங்களை குணமாக்கும்.  உங்களுடைய உள்ளங்களி லும் இல்லங்களில் அமைதி பிறக்கும். 

இறை ஆசீரை எச்சூழலிலும் பெற்றுவாழும் திருக்குடும்பமாக வாழ்வதுடன் வருங்கால தலைமுறைகளை ஆன்மீகத்தில் மீட்டெடுக்க முயற்சி செய்வோம்....ஆமென். 

இயேசு நம்முள் பிறக்கட்டும், நம்முள் வாழட்டும், நம்மை மாற்றட்டும். அதேதான் உண்மையான கிறிஸ்துமஸ்


few days ago, a world-famous Argentine footballer, Lionel Messi, visited India for a short period. His arrival created a great impact across the country. Television channels, newspapers, and social media spoke only about his visit. It was a grand celebration — meetings with politicians, photo sessions with celebrities, and massive public events. Huge sums of money (they tell about 500 crores) were spent to host and celebrate a global icon for just a few days.

At the same time, Sunil Chhetri, one of India’s greatest football legends, stood silently on the sidelines. A player who has brought pride to our nation for decades, who has been among the top goal scorers in international football, remained largely unnoticed. He was asked to wear Messi’s jersey, and he stood at the corner of the stadium, forgotten. This fact reveals a painful truth for me about Strong Xmas message: we often celebrate fame more than faithfulness, glamour more than gratitude, popularity more than perseverance.

This incident invites us to pause and reflect on our own celebrations — especially our celebration of Christmas.

Sometimes, Christmas too risks becoming a grand event: bright lights, expensive decorations, shopping, parties, carols and social media displays. We celebrate Christmas everywhere — except where it truly matters: in our hearts. I am not telling you not to celebrate Christmas itself, but never forget its purpose.


The purpose of Messi’s visit was to inspire local footballers and ignite a deeper love for the Football game. Likewise, the purpose of Christmas is not merely to showup our gifts, but to transform lives. The birth of Jesus is not meant to remain a beautiful story or a yearly ritual. It is an invitation for change — to recognize Christ not only in the crib, but in the poor, the forgotten, the wounded, and the unnoticed people around us.

Jesus is born not in palaces, but in a manger. Not among famous players, celebrities, politicians, but among shepherds. Not in noise, but in silence. Christmas reminds us that God chooses simplicity over show, love over luxury, and humility over hype.

This Christmas, let us ask ourselves:

  • Are we celebrating Jesus, or only Christmas?
  • Are we welcoming Christ into our homes, or only decorating our houses?
  • Are we touched by His birth, or merely entertained by the festival?

May this Christmas 2025 move us from celebration to transformation, from external glitter to inner grace, from gifts under the tree to Christ in the heart.

Let the real miracle of Christmas happen within us — where Jesus is truly born, lives, and changes us.

Merry Christmas and a transformed New Year 2026.

Thursday, December 18, 2025

HOLINESS IS WHOLENESS - 183rd BIRTHDAY OF ST. L. GUANELLA

“Holiness Is Wholeness” 

யார் இந்த புனித லூயிஸ் குவனெல்லா?
எதற்காக அவரை நாம் “புனிதர்” என்று அழைக்கிறோம்?

புனித குவனெல்லா… 

  • புனித அந்தோனியார் போன்று
அற்புதங்களால் உலகை வியப்பில் ஆழ்த்தியவர் அல்ல.
  • புனித தாமஸ் அக்குவினாஸ் போன்று
ஆழ்ந்த இறையியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளால்
திருச்சபையை வளப்படுத்தியவரும் அல்ல.
  • புனித பியோ போன்று
இயேசுவின் திருக்காயங்களைத் தமது உடலில் சுமந்தவரும் அல்ல.

ஆனால்…

புனித லூயிஸ் குவனெல்லா,
“புனிதம் என்பது ஒரு முழுமை.” என்று கூறி வாழ்ந்தவர். மனிதத்தை முழுமையாக வாழ்ந்தாலே புனிதராக முடியும் என்று நிரூபித்தவர்.


புனித குவனெல்லா நமக்குச் சொல்வது:
புனிதம் என்பது உடல் நலம், மன நலம், ஆன்ம நலம்
இவை மூன்றும் இணைந்ததுதான் வாழ்வின் அழகு.

அற்புதங்கள்-புதுமைகள் எதுவும் நிகழ்த்தாமல்,
தன் அன்றாட வாழ்வையே அற்புதமாக மாற்றியவர்
புனித லூயிஸ் குவனெல்லா.






1. உடல்நலம்: Saint Guanella was, first of all, fully human. உடலைத் துறந்து அல்ல, உடலை அன்பின் கருவியாக மாற்றுவது புனிதம். பிரச்சிஸியோ என்ற கடினமான மலைப்பகுதிகளில் பிறந்தவர். He was born among the mountains; he had the gift of hard work, sobriety, and perseverance. He was from the river Rabbiosa, and so he possessed remarkable physical stamina. He used to work for the poor, the sick, and the abandoned. His holiness was not detached from the body; rather, his body became an instrument of love. He cared for concrete needs—bread, shelter, work—because he knew that grace does not float above human misery but enters it. He often says, “Give bread and the Lord.” The first need for man is to give bread for his bodily health. Before giving the spiritual A holy life, therefore, does not neglect physical well-being but uses strength and health in the service of others.

2. மன நலம்: சிந்திக்கும் மற்றும் கற்றுக் கொடுக்கும் திறன்: Secondly, Saint Luigi Guanella was a man of clear intelligence and was recognized as a good and passionate educator. He lived in a time of social upheaval, poverty, and anticlericalism, yet he was neither bitter nor rigid. He reflected, discerned, planned, educated, and adapted. Guanella, after learnt from Don Bosco, became capable of shaping minds and restoring dignity, particularly among the mentally disabled and marginalized. His mental balance was a result of realism and hope—he saw human weakness clearly, yet always believed in the possibility of renewal. He said often, “Holiness is not escapism, but a healthy, compassionate way of thinking, rooted in truth and mercy.

3. ஆன்ம நலன்: ஆன்மாவை உலகிலிருந்து பிரித்து அல்ல, உலகின் துயரங்களில் கடவுளைக் காண்பதே புனிதம். Above all, Saint Guanella was a Man of God. His spiritual life was the center that held everything together. His assiduous prayer, deep love for the Eucharist, devotion to Scripture, and total trust in Divine Providence gave unity to his actions. “It is God who does,” he repeated often. This spiritual abandonment did not make him passive; instead, it made him fearless. Because his soul rested in God, his body could labor tirelessly, and his mind could remain serene even amid misunderstanding and failure.

Dear friends, Saint Luigi Guanella shows us that holiness is a healthy harmony between the full and right use of your body, mind, and Soul. He had a body spent generously in service, a mind formed by wisdom and compassion, and a soul anchored in constant communion with God.

In a fragmented world, where people are exhausted in body, anxious in mind, and empty in spirit, Saint Guanella’s life is a prophetic reminder: to love God and neighbor fully, we must be whole persons. May his example inspire our families, our ministries, and our communities to seek not just success or comfort, but the joyful balance that leads to true holiness.

Amen.

Saturday, December 13, 2025

மகிழ்ச்சி ஞாயிறு

திருவருகைக்காலம் 3ஆம் வாரம்

மகிழ்ச்சி மெசியாவின் செயல்

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை ‘கௌதேத்தே சண்டே’ (‘மகிழ்ச்சி ஞாயிறு’) என அழைக்கின்றோம். இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியும், முதல் வாசகமும் ‘அகமகிழ்தல்’ என்னும் சொல்லுடன் தொடங்குகின்றன.

சிரிப்பு பற்றிய ஒரு குட்டி ஜோக்கிலிருந்து துவங்குகிறேன்: 

  • முகத்தில் சிரிப்பு இல்லாதவனைப் பார்த்து ஒருவர் கேட்டார்:
“என்னப்பா, சிரிக்கவே இல்லையே?”
  • அவன் சொன்னான்:
“சார்… சிரிப்பு ஃப்ரீ தான்,
ஆனா காரணம் இல்லாம சிரிச்சா
ஆளுங்க சந்தேகப்படுறாங்க!”

உங்களுக்கு சிரிப்பு தருவது எது? நீங்கள் எதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?

  •  பிரியாணி சாப்பிடுவது
  •  ஃபுட்பால் விளையாடுவது
  • வகுப்புகளுக்கு விடுமுறை விடுவது

மகிழ்ச்சி என்பது ஒரு ‘ரெலடிவ்’ (தனிநபர்சார் உணர்வு) எமோஷன். அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்று கிடையாது. 

நெக்ஸ்ட் கொஸ்டின்: மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? ‘உள்ளிருந்து வருகிறது’ என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன?  மனதுக்கு உள்ளே இருந்து வருவது உன்னத மகிழ்ச்சியாக (Joy) மாறாக சற்று நேரமே நீடிப்பது சிற்றின்பம் (happiness) எனப்படும். 

அலெக்ஸாண்டர் தெ கிரேட் உலகையே தன் கைக்குள் அடக்கிவிடத் துணிந்தது இன்பதிற்காகவே! புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் அமர்ந்தது நிறை மகிழ்ச்சிக்காகவே! 

மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுவதும், ஏற்பதும், செய்வதும் அக மகிழ்ச்சி என்று முழுமகிழ்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 35:1-6,10) பின்புலம் மிகவும் சோகமானது. கிமு 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்ரயேலும் எருசலேமும் அசீரியாவால் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின. மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். கோயில் தீட்டாக்கப்பட்டது. ‘எல்லாம் முடிந்தது’ என்று நினைத்த மக்களுக்கு, ‘முடியவில்லை, விடிகிறது’ என்று இறைவாக்குரைக்கின்றார் எசாயா. முதலில், ஒட்டுமொத்த படைப்பும் புத்துணர்ச்சி பெறுகிறது – ‘பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழ்கிறது,’ ‘பொட்டல்நிலம் அக்களிக்கிறது,’ ‘லீலிபோல் பூத்துக்குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படைகிறது’ – படைத்தவரின் அரவணைப்பை படைப்பு பெற்றுக்கொள்கிறது. 

பாடம் 1: Do not worry about the past, Be firm உள்ளத்தில் உறுதி

இஸ்ராயேல் மக்கள் கடந்த காலத்தின் அடிமைத் தனத்தில் நொந்து போய், திளைந்து போய் இருந்தவர்களிடம், "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்என அழைப்பு விடுக்கின்றார் எசாயாDo not worry about the past, do not waste your time by regretting the past life. மாறாக, Increase Gratitude. கிடைப்பதை வைத்து 

மகிழுங்கள் அடிக்கடி உங்களை மற்றவர்களோடு கம்பேர் செய்யாதீர்கள். நீங்கள் கடவுளுடைய கொடை உறுதியாக கூறுங்கள். சின்ன சின்ன செயல்களுக்கு கூட நன்றி கடவுளுக்கு நன்றி கூறுங்கள் குறிப்பாக உணவுக்கு கிடைத்தகுடும்பத்திற்கு கிடைத்த நபர்களுக்கு மனிதர்களுக்கு நன்றி கூறி ஜெபியுங்கள்



இன்றைய இரண்டாம் வாசகம் (காண். யாக் 5:7-10) யாக்கோபின் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யாக்கோபு இத்திருமடலை எழுதுகின்ற நேரத்தில் உலகின் முடிவு மற்றும் இரண்டாம் வருகையை மையமாகக் கொண்டு ‘நிறைவுகாலம்’ (‘பரூசியா’) பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. மக்கள் பொறுமையின்றி இருந்தனர். அதாவது, ஒரு வகையான அவசரம் அனைவரையும் பற்றிக்கொண்டது. எல்லாம் அழியப் போகிறது என்னும் அச்சம் அவர்களுக்கு இருந்தது.  இவர்களுக்கு அறிவுறுத்துகின்ற யாக்கோபு, ‘பயிரிடுபவரைப் போல பொறுமையாகவும்,’ ‘ஒருவர் மற்றவரிடம் முறையீடு இன்றியும்’ இருக்குமாறு அறிவுறுத்துகின்றார்.



(ஆ) பாடம் 2 - பொறுமை:  நம் வாழ்வில் நம்மை அறியாமல் ஏதோ ஓர் அவசரம் நம்மைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம். எதையாவது செய்துகொண்டே வேண்டும் என்ற நிர்பந்தமும் நம்மை அழுத்துகிறது. இந்த இடத்தில் யாக்கோபு தருகின்ற உருவகத்தின் பொருளை உணர்ந்துகொள்வோம். பயிரிடுபவர் கொண்டிருக்கும் பொறுமையை நாம் கொண்டிருக்க வேண்டும். நிலத்தில் விதைகளை இட்ட விவசாயி விதை தானாக வளரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். Be calm, relate with every one. Experience the present life. அவசரம் குறைத்து பொறுமை ஏற்றால்தான் நம் வாழ்வில் மெசியாவின் செயல் நடந்தேறுதலைக் காண முடியும். நாமும் அச்செயலைச் செய்ய முடியும்.


நற்செய்தி வாசகம்: இயேசுவின் சமகாலத்தில் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மெசியா என்றால் அரசராக அல்லது அருள்பணியாளராக வந்து தங்களை எதிரிகளின் கைகளிலிருந்து விடுவிப்பார் என்று நம்பினர் மக்கள். இந்த நம்பிக்கை யோவானுக்கும் இருந்தது. ஆனால், இயேசுவின் மெசியா புரிதல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இயேசுவைப் பொருத்தவரையில் மெசியாவின் செயல்கள் என்பவை தனிநபர் வாழ்வில் நடந்தேறுபவை: ‘பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் நலமடைகின்றனர், காதுகேளாதோர் கேட்கின்றனர், இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று மெசியாவின் வருகையின் மாற்று அடையாளங்களைச் சொல்லி அனுப்புகின்றார்.


பாடம் 3: நன்மை தரும் செயல்கள் செய்து அனுபவிக்க வேண்டும்: யோவானின் உடல் சிறைப்பட்டிருந்தாலும் அவருடைய உள்ளம் என்னவோ உறுதியோடு இருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நற்செயல்கள்: பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 


நண்பர்களே! நன்மை தரும் செயல்கள் அதிகம் செய்ய வேண்டும். Do at least one act of kindness daily. A kind word, a smile, and help at home for your family. மொபைல் உபயோகிப்பதாதை தவிர்ப்பீர். Put the phone down during meals. We lose a lot of time because of mobile phones. Look at each other. Listen. Happiness begins with attention. Even just one minute of prayer or silence each day can bring calm, unity, and inner strength to the family.


மூன்று வாசகங்களிலும் துன்பம் பின்புலமாக நிற்கிறது: (அ) முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் அசீரியாவின் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். (ஆ) இரண்டாம் வாசகத்தில், எதிர்காலம் பற்றிய அச்சம் யாக்கோபின் திருஅவைக்குத் துன்பம் தருகிறது. (இ) நற்செய்தி வாசகத்தில், அடிமைத்தனம், அச்சம், சிறையடைப்பு என்றும் மூன்று துன்ப நிலையில் இருந்தவர்களும் மெசியாவின் செயல்களைக் கேள்வியுறுகிறார்கள், காண்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.


கடந்த காலத்தின் அடிமைத் தனத்தின் துவளாமல், இரண்டாம் வாசகம் காட்டும் பொறுமையோடும், நற்ச்செய்தி காட்டும் பிறரன்புப் பணிகளின் வழியாகவே மெசியாவின் செயல்கள் கண்டு கொள்ளப்ப்டும்.  மெசியாவின் செயல்கள் இஸ்ரயேல் மக்களுக்கும் இயேசுவின் சமகாலத்தவருக்கும் மட்டும் உரியவை அல்ல. அவை இன்றும் நம்மில் நம் வழியாக நடந்தேறுகின்றன. அவரின் செயல்கள் நம் வாழ்வில் சிற்றின்பகமன்று, மாறாக, நிறைமகிழ்ச்சி தருகின்றன.


Thursday, December 11, 2025

Our Lady of Guavadalupe - Feast

மறையுரை

குவாடலூபே அன்னை விழா - திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி

எசாயா 48:17-19. மத்தேயு 11:16-19

டிசம்பர் 12 ஆம் நாள் உலகம் முழுவதும் குவாடலூபே அன்னை திருவிழாவை கொண்டாடுகிரோம், அன்னை மரியா இல்ல பல இடங்களில் காட்சி கொடுத்திருக்கிறார். மெக்சிகோ நாட்டு குவாடலூபே அன்னயின சிறப்பம்சம் என்ன? 

13ம் நூற்றாண்டில் மிக்சிகோ நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்த Juan Diego என்ற 13 வயது மலைவாழ் சிறுவனுக்கு சிறுவனுக்கு மரியா அற்புதமாக தோன்றினார். 

ஆயர் அவர்களும், மற்றவர்களும் நம்பிக்கைக்கான ஒரு அடையாளம் கேட்டபோது அடுத்த முறை மரியாள் காட்சி தந்த போது அவருடைய பாரம்பரிய உடையான (Tilma) மேலாடையில் ரோஜாக்களை சேகரித்து ஆயரின் அறையில் திறந்த போது அன்னையின் அற்புதத் திருவுருவம் அந்த ஆடையில் அச்சிடப்பட்டிருந்தது.

இதில் என்ன சிறப்பு என்றால் என்னவென்றால் குவாடலூபே  அன்னையின் உருவமும், விவிலியத்தின் இறுதி நூலான திருவழிப்பாட்டு நூல் குறியீடுகளோடு பொருத்தமாக இருந்தது. திரு அவையின் இருபெரும் தூண்கள் அன்னையும் விவிலியமும். 

இது ஒரு இயற்கைக்கு மாற்றான அற்புதம் என்று அனைவரும் உணர்ந்தனர். இதனால் ஆயர் அங்கு ஆலயம் அமைத்தார். இன்று அது உலகில் கோடிக்கணக்கான யாத்திரிகர்கள் வரும் குவாடலூபே தாயின் திருத்தலம், மெக்ஸிகோ நகரத்தில் உள்ள Basilica of Our Lady of Guadalupe ஆகும்.


குவாடலூபே அன்னைக்கு அற்புத செபம்

அன்பும் அருளும் நிறைந்த குவாடலூபே அன்னை,
எங்கள் தாயாகி, எங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும் கருணைச் செல்வியே,
உமது பரிசுத்த திருவுருவத்தில் எங்களை உன்னதமான அன்பால் தழுவியருளும்.

உமது திருவிரல்களில் மலர்ந்த ரோஜாக்கள் போல,
எங்கள் வாழ்விலும் அருள் மலர்ச்சி உண்டாகச் செய்யும்.


எங்கள் கவலைகளை அமைதியாக மாற்றி,
எங்கள் காயங்களை ஆறுதலின் மணத்தால் ஆற்றுதலாக்கும் தாயே,
எங்களை உமது திருத்தோழமையில் பாதுகாத்தருளும்.

அன்னை, நோயாளிகளுக்கு ஆற்றல்,
துயரப்படுவோருக்கு நிம்மதி,
அதிர்ச்சியில் இருப்போருக்கு துணை,
இருளில் நடப்போருக்கு வெளிச்சம் நீரே.
எங்கள் குடும்பத்தைக் காக்கவும்,
எங்கள் மனங்களை வலிமைப்படுத்தவும்,
எங்கள் பாதைகளை உண்மையின் வழியிலே நடத்தவும்.

குவாடலூபே அன்னை,
உமது அன்பு போர்வையில் எங்களைச் சூழவைத்து,
தெய்வகுமாரனின் அருளைப் பரிந்துரைத்து,
எங்கள் வேண்டுகோள்களை ஏற்று நிறைவேற்றும் தாயே,
எங்களுக்காக விண்ணப்பம் செய்.

ஆமென்.

Popular Posts