Friday, December 5, 2025

திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி

பரிவு: மானுடம்மேல் படைத்தவன் கொள்ளும் பேரன்பு

எசாயா 30:19-21, 23-26. மத்தேயு 9:35-10:1, 6-8

சமீபத்தில் தீபாவளி வெளியீடாக வந்த 'பைசன்' என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்தேன். தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, ஜாதியச் சிக்கல்களிலும், கலவரங்களிலும் புதைந்து கிடந்த ஒரு இளைஞன், பல்வேறு அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து, ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடும் கபடி வீரனாக உயர்கிறான்.

அதில் என்னை ஆழமாகத் தொட்ட ஒரு வரி— இரு முக்கியமான ஜாதித் தலைவர்கள் அடிக்கடி கூறும் வசனம்:

“ஒருத்தன் அடிமட்டத்திலிருந்து தன்னுடைய திறமையை நம்பி மேலே எழுந்து வர்ரானா … அவனை விட்டுடு!”

இந்தப் பண்பு தலைவர்களுக்கு மட்டுமன்று, அனைத்து மனிதர்களுக்கும் அவசியமான ஒன்று. —
இரக்கக்குணம்!


இறைவனுடைய பேரிரக்கம் - இந்தப் பெரும் பிரபஞ்சத்தையே படைத்து, தந்தைபோல் அன்புடன் வழிநடத்தும் இறைவன், தனது பேரிரக்கத்தின் உச்சத்தை, கிறிஸ்துவின் பிறப்பில் மனிதருக்கு வெளிப்படுத்துகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனிய சிறையில் துன்பப்படும் யூதர்களை நோக்கி இறைவாக்கினர் எசாயா, மெசியாவை “உங்கள் போதகர்” என்று அறிமுகப்படுத்துகிறார். இதுவரை “உங்கள் அரசர்,” “உங்கள் குரு,” “உங்கள் இறைவாக்கினர்” என்று கேட்ட மக்களுக்கு, “போதகர்” என்ற புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இந்தப் போதகர்

* மனிதர்மீது பரிவு கொள்ளும் போதகர்,

* “இதுதான் வழி… இதில் நடந்துசெல்லுங்கள்!” என்று உண்மையை காட்டும் போதகர்.



இன்றைய நற்செய்தியில், இயேசு திரண்டிருந்த மக்களைப் பார்த்து பரிவு கொள்கிறார். அவரைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் கூட்டத்தில் இருந்தபோதும், அவர்கள்மீதும் compassionate heart உடன் பரிவு கொள்கிறார். 

ஆண்டவரின் குரல் நம் உள்ளத்தில் ஒலிப்பதுதான் நம் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆறுதல். இயேசு தம் சீடர்களுக்குச் சொற்களால் முன் கற்றுக்கொடுப்பதற்கு முன், தம் பரிவினால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
ஏனெனில், கற்றுத்தருவதின் முதல் படி—பரந்துபட்ட பரிவுள்ளம்.

அனைவரையும் அன்பு செய்யும்
,கீழிருப்பவனை உயர்த்தும்,
அனைவரையும் மன்னிக்கும்

பேரிரக்கம் நமக்கும் அருளப்பட வேண்டி மன்றாடுவோம்!


Thursday, December 4, 2025

Friday of the 1st week of Advent

Isaiah 29:17–24 / Matthew 9:27–31

Jesus Gives the True and Meaningful Vision of Our Life

A few days ago, I received a heartbreaking phone call from a mother who had lost her 9-year-old daughter in an accident. The little girl was returning from school when a tragic incident occurred right near their home. She was the only child in the family. The mother called me as she was travelling back to her village with her daughter’s body. Her voice was filled with pain and darkness. She could not see any meaning or future in her life anymore. And I myself did not know how to console a mother whose whole world had collapsed in a moment. The human words are insufficient. For her, everything seemed lost. This sorrow will remain a deep wound in her heart until her death. 

Who can give her a new vision for life?

In today's first Reading: God Promises Vision to the Hopeless through the Prophet Isaiah. He spoke to a people who lost hope for their future. They are spiritually blind and discouraged. But God promises a new day: "The blind shall see, the lowly will rejoice and they shall receive understanding and wisdom" (Is 29:17–24)

This is more than physical healing—it is inner renewal, a promise that God can bring light even into the deepest darkness.

In the Gospel, two blind men cry out to Jesus for mercy. Their world was dark. No one could help them. Yet they believed that Jesus could. Jesus not only restores their physical sight but also awakens their spiritual vision, because they recognize Him through faith as the Messiah.

Their healing shows that faith can open what life has closed. There are moments in the life we feel like that of mother's pain—when death, tragedy, or evil suddenly blind us. Everything is dark. We cannot understand. We cannot see the future. At such moments, human words cannot fix our pain. But the presence of Jesus can slowly open a path where we see none.

Thank You Jesus! for the Word of God that God alone can give new vision to those who have lost all hope.

Through Jesus, we receive the vision of eternal life—a hope that suffering cannot erase.

May the Lord who opened the eyes of the blind open our hearts as well, so that even in moments of darkness, we may see His light, His way, and His promise of life. Amen!

Wednesday, December 3, 2025

Thursday of the First Week of Advent

Isa 26:1-6 / Mt 7:21.24-27

  • வேகமாக வளர்வதை விட வேரோட்டத்துடன் வளர்வது நீடிக்கும்.
  • அழகாய் வளர்வதை விட ஆரோக்கியமாய் வளர்வது நல்லது.

Today, people no longer seek modern and beautiful houses — they want strong houses. Natural disasters, such as typhoons, remind us that without a firm foundation, even the most modern buildings can collapse. Many invest so much, but are cheated by weak structures.

In the first reading, Isaiah speaks of Jerusalem, the strong city. Its strength does not come from its fine marbles, strong stones, or gigantic walls, but from the Lord who protects it. Its foundation is trust in God.

In the Gospel, Jesus gives us the image of the wise and foolish builders. The wise man builds his house on rock; the foolish builds on sand. What is this rock? It is a solid foundation — faith, formation, discipline, and commitment.


Life built on a solid rock...

A child who receives proper (strict) guidance from parents and teachers grows roots — grows strong. But a life without discipline becomes unstable and easily shaken.

This is true for every vocation:

  • Young men and women who follow Christ must be rooted in formation, family values, and missionary passion.
  • Students preparing for their future need training, hard work, and perseverance.

I recently watched Cristiano Ronaldo score a spectacular bicycle kick — even at 40, he remains extraordinary. That strength is the fruit of constant discipline. Greatness doesn’t happen overnight; it is built through years of formation.

Jesus expects the same from His disciples. Formation comes before mission. In the Church — and especially in our Guanellian Congregation — formation is our first mission.

Let us build a Church for the future: founded on faith, strengthened by prayer, made beautiful by love for God and the poor.

May our lives be houses built on the rock of Christ — strong, steady, and unshakable in every storm. Amen.

Tuesday, December 2, 2025

International Day of Persons with Disability (December 3)

இன்று புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலரின்
பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதே நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.  நமது சபைக்கு மிகவும் நெருக்கமான இந்த மாற்றுத்திறனாளிகளை பற்றி ஒருசில சிந்தனைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
  • சமூகத்தில் ஏன் இந்த மாற்றுத்திறனாளிகள்?
  • கடவுள் எதற்காக இவ்வுலகில் ஊனமுற்றவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் படைத்தார்? 
  • எதற்காக இத்தனை குறைபாடுகள், ஏனிந்த ஊனங்கள்? 

விவிலியத்தின் தொடக்க நூலின் அனைத்து மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட உள்ளார்கள் என்று வாசிக்க காண்கிறோம் (தொ.நூ 1:27) 

அன்றைய காலத்தில் ‘ஊனம்’ என்பது கடவுளின் தண்டனை அல்லது சாபம் என்று மக்கள் நம்பினர். ஆனால் விவிலியம் “கடவுளின் செயல்கள் ஊனம் மூலம் வெளிப்படுத்தப்படலாம்” என்று கூறுகிறது. "கடவுளின் செயல்கள் அவரில் வெளிப்படும் பொருட்டு இது நடந்தது." - (யோ 9:3) ஊனம் என்பது ஒரு குறைபாடு அல்ல. கடவுள் அவர்களின் மூலமும் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.


19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் லூயிஸ் குவனெல்லா “மாற்றுத்திறனாளிகள் கடவுளின் பரிசுகள்” என்று கூறினார். அவர்கள் விண்ணகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடவுளின் தேவதூதர்கள்.  மாற்றுத்திறனாளிகளை “செல்ல குழந்தைகள்” என்றழைத்தார். 

ஒரு அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தவன் வளர்ந்து மருத்துவராகி சாதிக்கத் துவங்கி விட்டான். இளையவன் இன்ஜினியராகி இல்லத்தில் இனிதே நுழைந்து விட்டான். மூன்றாவது மகனோ, இரண்டு கால்களையும் இளம்பிள்ளை வாதத்தால் இழந்து, வாழ்க்கையை வருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார். 

இந்த மூவரில் அப்பாவின் பாசத்துக்குரிய செல்ல மகன் யார்? சந்தேகமே இல்லாமல் ஊனத்தோடு பிறந்த மூன்றாவது மகனே தந்தையின் பார்வையில் செல்ல குழந்தையாய் தெரிகிறான். 

கடவுளைத் தந்தையாக பாவித்த அவருக்கு "செல்லக் குழந்தையாக" தெரிகிறார்கள், இந்த உலகின் கடை எல்லை வரை ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள். போலிகளைப் படைத்து வெறுத்து போன இறைவன் ஒரு மாற்றத்திற்காக உண்மை உயிரை, முழுமையற்ற உடலுக்குள் வைத்து படைத்தார். அவர்கள் தான் கடவுளின் பிரதிநிதிகள். இந்தப் புரிதலினாலே மிகவும் நெருக்கமாக தான் அன்பு செய்த, உடல் நலம் குன்றிய குழந்தைகளை தான் தோற்றுவித்த சபைகளின் முதன்மைப் பணியாக செய்தார்.

ஒருமுறை கோமோ நகர ஆயர் அவர்கள் அந்நகரத்தில் குவனெல்லா தோற்றுவித்த இல்லமான இறைபராமரிப்பு இல்லத்தின் கதவுகளைத் தட்டி தான் குவனெல்லாவைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அந்த இல்லத்து பணியாளர் ஒருவர், "தந்தை குவனெல்லா, தனது இல்லத்தில் செல்லக் குழந்தைகளோடு சீட்டு விளையான்டு கொண்டிருப்பதைக் கூறினார்". இதைக் கேட்டவுடன் சிறிது அப்சட்டான ஆயர், “மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் விளையாட வாய்ப்பில்லை. புனிதரை விரைவில் அழைத்து வாருங்கள்” என்றார். அந்த பணியாளரோ, "ஆம் ஆயர் அவர்களே! செல்லக் குழந்தைகளை உயர்ந்தவர்களாக மதிக்கும் வரை அவர்களுக்கு விளையாட்டுகள் புரியப் போவதில்லை” என்றார். பிறகு என்ன! ஆயர் நீண்ட நேரம் விளையாட்டு முடியும் வரை இருந்து குவனெல்லாவை சந்தித்து தான் சென்றார். செல்லக் குழந்தைகள் தான் அவரது நிறுவனத்தின் முதலாளிகள். அவர்களின் நிமிடத் துளிகளை மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு, தன்னுடைய மணித்துளிகளையும் செலவிட தயங்கவில்லை.

அன்பின் பணியாளர் சபையைத் துவங்கிய நேரங்களில் தனது சபையில் சேர விரும்பும் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்திட ஒவ்வொரு மறைமாவட்ட பங்குகளிலும் சென்று இறையழைத்தல் கூட்டம் ஏற்பாடு செய்தார். அவர் எப்போது வெளியே சென்றாலும் தன்னோடு ஐந்தாறு செல்ல குழந்தைகளையும் கூட்டிச் செல்வார்கள். ஒருமுறை கோமா நகரத்து பங்கு இளைஞர்களை சந்தித்தபோது குவனெல்லாவோடு வந்திருக்கிற செல்லக் குழந்தைகளை பார்த்து அவர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு தந்தை குவனெல்லா, “இந்த சிறப்பு குழந்தைகளிடம் உங்களிடமும், என்னிடமும் இல்லாத ஆற்றல் ஒன்று உள்ளது. ஏனெனில் அவர்கள் கடவுளின் சிறப்பு அருள் பெற்றவர்கள் (Innocence and angelic grace).  

செல்லக் குழந்தைகளை எந்த வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்கள் அன்பின் பணியாளர் சபையில் சேரலாம். பட்டப்படிப்புகளும், நூலகங்களும் தர முடியாத அனுபவங்களை இவர்களின் அருகாமையில் அறிந்து கொள்ளலாம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகம் அறிவியலின் பயனை அனுபவிக்கும் உலகம். இங்கு அறிவு தான் அனைத்தையும் அளக்கும் அளவுகோல்! தோற்றம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் கருவி! அழகை கண்டு கொள்வதும் அன்பு செய்வதும் மனிதருக்கு மிக எளிது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மறைந்து கிடக்கும் திறன்களையும் அறிந்த அன்பு செய்வது என்பது மிக அரிது.

இன்றைய தினத்தில் நமது இல்லங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இருக்கும் அனைத்து இருக்கும் அனைத்து மாற்று திறனாளிகளும் அன்பு, அரவணைப்பு மற்றும் கண்ணியம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தி ஜெபிக்கும் குவனெல்லிய இல்லங்கள். 


Monday, December 1, 2025

Tuesday of the 1st Week of Advent

Is 11:1-10; Lk 10:21-24

Brothers and Sisters! Do you feel you are cut down by failures, relationship problems, financial crisis, depression, or anxiety?

When everything seems broken or lost, God still creates new beginnings. The coming of the Messiah, the Son of David, is the sign of hope for our lives.

Today’s first reading opens with the prophecy: “A shoot shall sprout from the stump of Jesse.” (Is 11:1)

Who is the father of King David? Jesse.

In the time of Isaiah, the people thought the Kingdom of Israel would be cut down, just like a dead stump. Exile, sin, and defeat made it seem as though the story of God’s people would end. But the prophet announces something astonishing: God can bring life from what looks like nothing.




  • He can grow greatness from your brokenness.
  • He can restore hope when the world sees only ruins.
  • This is the power of our God — life through the Messiah.

The Spirit of the Lord rests upon Him: wisdom, understanding, counsel, and strength.

What once was dead will bear fruit again. Do not feel tired, wounded and ended. Life would begin at any time.

In the Gospel, Jesus rejoices in the Spirit and tells us that this revelation is not given to the proud, the powerful, or the worldly wise, but to the humble—to those with the heart of a child. God’s kingdom is accessed not through intellect or status, but through trust, simplicity, and openness.

As we prepare our hearts in this Advent season, let us welcome Christ with childlike faith. When we kneel before Him as children of the Kingdom, we discover that no stump in our life is truly dead—because where Jesus enters, new life begins.

Friday, November 14, 2025

34th Sunday Ordinary time,

ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், திங்கள்

தானியேல் 1:1-6, 8-20. லூக்கா 21:1-4

(Thanks: Fr. Yesu Karunanidhi, blogger)

கண்ணீரும் காசும்

‘இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை’ என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். ‘கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்’ என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை’ நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை ‘கைம்பெண்’ என அழைக்க, லூக்கா மட்டும், ‘அவர் வறுமையில் வாடியவர்’ என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.

நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:

(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்

‘பற்றாக்குறை’ என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்

அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.

(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது.

லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை’ என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, ‘அன்றைய நாளைப் பற்றிக் கூட’ அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.

நிற்க.

இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. ‘கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்’ என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா?

கைம்பெண்களின் கடைசிக் காசைப் பெற்றுத்தான் ஆலயமும் ஆலயத்தின் குருக்களும் வாழ வேண்டுமெனில் அத்தகைய அமைப்புகள் தேவையா? அமைப்பை உடைப்பதை விடுத்து அமைப்புக்குள் மக்கள் தங்களையே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல இருக்கிறது இயேசுவின் செயல்பாடு. இன்றும் சில நேரங்களில் சில இடங்களில், ‘ஏழைக் கைம்பெண் போல அனைத்தையும் காணிக்கை போடுங்கள்’ என்று அருள்பணியாளர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் வானளவாகக் கோவில் கட்டவும், ஊர் பாராட்ட சப்பரம் இழுப்பதற்கும் இன்றும் ஏழைகளும் கைம்பெண்களும் தங்கள் கடைசிக் காசுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய கண்ணீரும் நம் ஆசையும் ஒருபோதும் குறைவதில்லை!

Saturday, November 8, 2025

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !

ஞாயிறு, 9 நவம்பர் ’25

ஆலயம் கடவுளின் வீடு! எளியோரின் கூடு !  

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா; எசே 47:1-2, 8-9, 12. 1 கொரி 3:9-11, 16-17. யோ 2:13-22

லாதெரன் பேராலய நேர்ந்தலிப்பு விழா! ஒரு ஆலயத்திற்கு இவ்வளவு பெரிய விழாவா! ஆம்! இது ஒரு பசிலிக்கா, பேராலயம்! திருத்தந்தையர்கள் அனைவரும் பாரம்பரியமாக வசித்து வந்த ஆலயம். 

இவை எல்லாவற்றையும் விட ஆலயம் என்பது கிறிஸ்துவின் மேல் எழுப்பப்பட்ட ஒரு சமூகம்! புதிய ஜோராபூர் ஆலயம்! ஒவ்வொரு ஆலயமும் அதைச் சார்ந்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. ஆலயமணி , தேர்த்திருவிழா, சப்பரம், எங்க ஊரு கோயிலில் மானப்பிரச்சனை, 

இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட, சாலமோன் அரசர் கட்டிய அந்த எருசலேம் தேவாலயத்தில் இயேசுவின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்பே உருவான இயேசு, இரக்கமே உருவான இயேசு, கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, கோவிலிலிருந்து துரத்தினார்;

ஒரு சாமானியனின் கோபம் "கோபம் மூக்குக்கு மேல வருகிறது" 

விவிலிய பின்னணி: எருசலேம் நகரத்தின் பாஷ்கா விழா, 19 வயது நிரம்பிய ஒவ்வொரு யூதனும் தங்களுடைய வாழ்வில் ஒரு முறையாவது கண்டிப்பாக எப்படி ஆவது எருசலேம் ஆலயத்திற்கு சென்றிருக்க வேண்டும். அப்படி செல்லும்போது இந்த காரியங்கல் செய்ய வேண்டும். 

1. அவர்கள் வரி கட்ட வேண்டும். கோவில் வரி கட்ட வேண்டும் இந்த கோவில் வரி மிக அதிகமான வரி காரணம். எருசலேமுக்கு அருகில் உள்ளவர்கள் அடிக்கடி செல்வார்கள், ஆனால் புரவினத்தார்கசல். என்றாவது ஒருவர்கள் அதிகமாக வரி கட்ட வேண்டும்.

2. காணிக்கை பலி செலுத்த வேண்டும். சந்தையில் ஆடு மாடுகள், புறாக்கள், பறவைகள் மற்றும் பலவிதமான மிருகங்கள் கடவுளுக்கு பலியிடுவதற்காக விலங்குகளை விற்க ஆரம்பித்தனர். ஏனெனில் பணக்காரர்கள் பெரிய விலங்குகளை வாங்குவார்கள். ஏழைகள் மாடப்புறாக்களை .

3. புரவினத்தாரின் நாணயங்கள் கோவிலில் நாணயங்களாக மாற்றப்பட்ட பின்னரே வரி கட்ட முடியும், ஆறில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வர். ஏழைகள் அநியாய வட்டிக்கு நாணயம் செலுத்தினார்கள். இதன் காரணத்தினாலே  திருப்பதி வேளாங்கண்ணி இந்த திருத்தலங்களை விட அதிகமான பன்மடங்கு அதிகமான காணிக்கை எருசலேம்.


யேசுவின் கோபத்திற்கு இதுவே காரணம்!  இறைவனுக்கு முதலிடத்தை கொடுக்க மறந்த மக்கள்! கடவுளின் பெயரால் ஏழைகலுக்கு நடக்கும் சமூக அநீதி! கடவுளுக்கு பலியிட தொலைவிலிருந்து கோவிலுக்கு வருகின்றார். ஏழை மக்கள் துன்பப்படுகின்றார். Courtyard is the unique place for the gentiles, for the high-priests, Pharisees and other people have their own space in the Temple of Jerusalem. The unique place for the poor is being encroached for the business purpose.  அவர்கள் வழிபடும் இடங்களில் சந்தைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டன, எப்போதும் கூச்சல் இறைச்சல். 

இயேசுவின் உண்மையான கோபம் அவர் கடவுள் மீதும் ஏழைகள் மீதும் வைத்திருந்த எல்லையற்ற அன்பு வெளிப்படுத்தியது. 

1. ஆலயத்தில் கடவுளுக்கு முதலிடம்: "என்னுடைய இல்லத்தை கள்வர் குகையாக மாற்றaதீர்கல்". லூக் இiறவேண்டலின் வீடு! உடல் வழியாக, உல்லம் வழியாக வனக்கம் செய்ய வேண்டும். நறகருனை ஆராதனை.  ஆலயம் கடவுல் வசிக்கும் இடம், அவர் எஙகும் இருக்கிரார், ஆனால் கோவிலில் வசிக்கிறரர். 

நம்மை முன்னிறுத்துவதில் பயன் கிடையாது. மாராக, கடவுளுக்கே முன்னுரிமை! அதனாலே நற்கருநையே பேழை ஆலயத்தின் மையத்தில் வைத்திருக்கிறார்கள். காரணம் இயேசுவே-நற்கருநையே மையம், பல நேரங்களில் நாம் ஆலயங்களை நம் பல்வேறு சொந்த பணிக்கு உபயோகப்படுத்துகிரோம். எப்பொதும் இரைச்சல், ஆட்டம், பாட்டம்! Fashion show, திறமைகளை வெளிப்படுத்தும் மேடை அல்ல! மாறாக கடவுளுக்கு முதலிடம்! ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; (1 கொரி 3:17)

2. அமைதி சுத்தம், ஜெபம்: உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் ஆலயம். (கொரி 6:19) கடவுள் விரும்பியது காணிக்கவில்லை அல்ல மாறாக நொறுங்கொண்டு இதயத்தை. 

ஒவ்வொரு பங்கின் இலக்கு! மக்களை அவர்களுடைய ஆன்மாவை இறைவனிடத்தில் வந்து சேர்க்க வேண்டுமே! தவிர உள்ளத்தில் உணர உதவியாக இருக்க வேண்டும். பெயருக்காகவும், நம்முடைய விசுவாசமும், இறை பக்தியும் மற்றவர்களை கவர்ந்து அவர்களையும் இறைவனிடம் கொண்டு வந்து சேர்க்கும். 

Popular Posts