Thursday, April 2, 2026

எந்தக் கடவுள் போரை நிறுத்துவார்?

புனித வெள்ளி மறையுரை

அன்புடைய சகோதரர் சகோதரிகளே,

மனித வரலாறு இரண்டு மரங்களின் நடுவே நிற்கிறது.

முதல் மரம் – தொடக்க நூலில் காணப்படும் நன்மைத் தீமை அறியக் கூடிய மரம்.

அது கண்களுக்கு இனிமையானது. விரும்பத் தக்கது.

மனிதன் கீழ்ப்படியாமையைத் தேர்ந்தெடுத்தான். 

அந்த மரத்தின் கனியை உண்டபோது, பாவம் உலகிற்குள் நுழைந்தது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு முறிந்தது.

அந்த மரம் அழகாகத் தோன்றினாலும், அதன் விளைவு மரணம்.

இரண்டாவது மரம் – சிலுவை மரம்.

அது அவமானத்தின் சின்னம். குற்றவாளிகளுக்கே உரிய தண்டனை.

ஆனால் அந்த சிலுவைமேல் நின்றவர் இயேசு.

அவர் கீழ்ப்படிதலைத் தேர்ந்தெடுத்தார்:

“அப்பா, என் சித்தமல்ல, உமது சித்தமே ஆகட்டும்” என்றார்.


திரு. பவுல் சொல்லும் வார்த்தை நமக்கு நினைவில் வருகிறது (ரோமர் 5):

"ஒரு மனிதனால் பாவம் உலகில் நுழைந்தது; மற்றொரு மனிதனால் இரட்சிப்பு உலகில் வந்தது."


  • அந்த முதல் மரம் மனிதனை வீழ்த்தியது.
  • இந்த இரண்டாவது மரம் மனிதனை எழுப்புகிறது.

இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளி சடங்குகள் நடைபெறுகின்றன.

ஆனால் சில இடங்களில்—இஸ்ரேல், காசா, லெபனான்— பாதுகாப்பு காரணமாக அந்த சடங்குகளே தடைபடுகின்றன.


நாம் கேட்கத் தொடங்குகிறோம்: இது புனித பூமியா? அல்லது சபிக்கப்பட்ட பூமியா?

எத்தனை போர்கள்!எத்தனை அழிவுகள்!

சாதாரண மனிதர்கள் கட்டிய வீடுகள், அன்புடன் வளர்த்த பிள்ளைகள் எங்கேயோ இருந்து வரும் குண்டுகளால் அழிக்கப்படுகின்றனர்.


திருத்தந்தை ஃபிரான்சிஸ் கூறியதுபோல்:“போரில் யாரும் வெற்றி பெறவில்லை; அனைவரும் தோல்வியடைந்தவர்களே.” In a war, there is no real winner, all are losers.

அப்போது மனிதன் கேட்கிறான்: “கடவுள் எங்கே?” “எந்த கடவுளை நோக்கி நாம் ஜெபிக்க வேண்டும்?” “எந்தக் கடவுள் இந்த போரை நிறுத்துவார்?”


ஒரு மனிதன் சாலையில் சென்று கொண்டிருந்தான். திடீரென பாதாள சாக்கடியில் விழுந்துவிட்டான். முதல் இருவர் கம்பும் கயிறும் கொடுத்தனர்—அவர்கள் உதவி செய்ய விரும்பினர், ஆனால் தொலைவில் இருந்தனர்.

மூன்றாவது ஒருவர் வந்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் உடனே உள்ளே குதித்தார். தன்னுடைய தோள்களில் அவனைத் தாங்கி அவனை காப்பாற்றினார். அந்த மனிதனைத் தனது தோள்களில் சுமந்து மேலே கொண்டுவந்தார்.

அவர்தான் இயேசு.

மற்றவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்;

இயேசு காப்பாற்றுகிறார்.


அதுவே சிலுவையின் அர்த்தம்:

தொலைவில் இருந்து பார்க்கும் கடவுள் அல்ல,

உள்ளே இறங்கி நம்மைத் தூக்கும் கடவுள்.


பிலிப்பியர் 2:10-11:

“இயேசுவின் நாமத்தில் விண்ணிலும், மண்ணிலும், மண்ணுக்குக் கீழிலும் உள்ள அனைவரும் மண்டியிடுவார்கள்; அனைத்து நாவுகளும் ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என்று அறிவிப்பார்கள்.”

Every knee Shall Babu in front of the grass every time shall profess the name of Christ?

புனித வெள்ளியில் நாம் என்ன செய்வோம்?

ஜெபிப்போம்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபிப்போம்.

நம் தலைவர்களுக்காக ஜெபிப்போம்.

மன்னிப்போம். மன்னிப்பு கேட்போம்.


ஏனெனில்,

முதல் மரம் பாவத்தை கொண்டு வந்தது;

சிலுவை மரம் மன்னிப்பை அளிக்கிறது.


முதல் மரம் மனிதனை கடவுளிடமிருந்து பிரித்தது;

சிலுவை மரம் மனிதனை மீண்டும் கடவுளோடு இணைக்கிறது.

இன்று நாம் தேர்வு செய்ய வேண்டியது இதுதான்:

கீழ்ப்படியாமையின் மரமா?

அல்லது கீழ்ப்படிதலின் சிலுவையா?


ஆமென்.


Popular Posts