Sunday, January 4, 2026

பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுங்கள்

திங்கள், 5 ஜனவரி 2026

1 யோவா 3:22-4:6. மத் 4:12-17, 23-25 

வாழ்க்கையில் நாம் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம்; அதற்காகவே comfort zone–இல் தங்கிக்கொள்கிறோம். ஆனால் போர்க்களத்திற்குள் இறங்காமல், வெற்றியை அடைய முடியாது. ஆபத்துகளை ஏற்காமல், சவால்களை எதிர்கொள்ளாமல், வாழ்க்கையில் முன்னேற இயலாது.

இன்றைய நற்செய்தியில், முப்பது ஆண்டுகளாக மறைந்த வாழ்க்கை வாழ்ந்த இயேசு, நாசரேத்து என்னும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுகிறார். அவர் கப்பர்நாகும் சென்று அங்கே குடியிருக்கிறார்; அங்கே போதிக்கிறார்; அங்கேயே வல்ல செயல்களையும் செய்கிறார். அதே நேரத்தில், அங்கே எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் அந்த எதிர்ப்புகள் இயேசுவை நிறுத்தவில்லை; மாறாக, அவரது பணியை இன்னும் வெளிப்படையாக மாற்றின.

2026 ஆம் ஆண்டு துவங்கி 1 வாரமே ஆகிறது. நாம் எடுத்தது மோடிவேசன், motivation alone cannot bring success. அது தீப்பொறி போல—ஒரு கணம் எரியும், பின்னர் மங்கும். நம்மை முன்னே கொண்டு செல்பவை, நம்முடைய தீர்மானம், தைரியம், தொடர்ச்சியான முயற்சி, திட்டமிடல் ஆகியவையே. 

அதற்கு முக்கியமான தடைகள் இரண்டு: ஒன்று நம் சோம்பல்; மற்றொன்று பிறரின் விமர்சனம். இவற்றிற்கு இடம் கொடுத்தால், நம் அழைப்பையும் நம் பணியையும் நாமே நிறுத்திவிடுவோம். இயேசு அதைப் போலச் செய்யவில்லை. அவர் சொன்னார்: “மனம் மாறுங்கள்; விண்ணரசு அண்மையில் வந்துள்ளது.” இந்த அழைப்பு முதலில் நமக்கே.

இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான்: பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுங்கள்; பயத்தை விடுங்கள்; விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள். கடவுள் அழைக்கும் இடத்திற்குச் சென்று, அவர் கொடுத்த பணியை தைரியமாகச் செய்யுங்கள். அப்பொழுதே நம் வாழ்க்கையும் பிறருக்கு நற்செய்தியாக மாறும்.

Saturday, January 3, 2026

Feast of Epiphany - திருக்காட்சிப் பெருவிழா

ஞாயிறு, 4 ஜனவரி 2026

 எசாயா 60:1-6. எபேசியர் 3:2-3, 5-6. மத்தேயு 2:1-12

கதை: சிற்றூர் ஒன்றுக்கு இளைஞன் ஒருவன் வந்தான். ஊருக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருந்த அவனைப் பற்றி ஊரார் ஒவ்வொரு விதமாக ஊகித்தார்கள். அந்த இளைஞன் தன்னைப் பற்றி யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. ‘அவன் ஒரு ஞானி, பித்துப் பிடித்தவன்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். ஒரு நாள் மாலையில் அந்த இளைஞனிடம் சிறுமி ஒருத்தி வருகிறாள். ‘உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்?’ என்று சிறுமி இளைஞனிடம் கேட்டாள். பழைய அந்தப் பையைத் திறந்த இளைஞன் அதிலிருந்த வைரக்கல்லை எடுத்து சிறுமியிடம் நீட்டினான். மாலை வெயில் பட்டு வைரம் மின்னியது. ‘இதை எனக்குத் தருவாயா?’ எனக் கேட்டாள் சிறுமி. ‘எடுத்துக்கொள்!’ என்று சொல்லி சிறுமியிடம் வைரக் கல்லைக் கொடுத்தான் இளைஞன். வைரக்கல்லின் பிரமாண்டம் கண்டு வியந்தாள் சிறுமி. மறுநாள் காலையில் துயில் எழுந்த இளைஞன் தன் அருகே அதே சிறுமி நிற்கக் கண்டான். ‘என்ன ஆயிற்று?’ என விசாரித்தான். தன் கையை விரித்து இளைஞனை நோக்கி நீட்டிய சிறுமி, ‘இந்தா உன் வைரம்!’ என்றாள். ஆச்சர்யத்துடன் இளைஞன், ‘உனக்கு இது வேண்டாமா?’ என்று கேட்டான். ‘இந்த வைரக் கல்லை அப்படியே எனக்குத் தரத் தூண்டிய உன் உள்ளத்தைத் தா!’ என்றாள் சிறுமி.

கீழ்த்திசையிலிருந்து வந்து தாங்கள் பெற்றிருந்த அறிவை, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைத் தந்துவிட்டு வெறுங்கையராய் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய மூன்று ஞானியரை இன்று நாம் கொண்டாடுகிறோம். மாதா காட்சி தந்தார். அந்தோனியார் புதுமைகள் செய்தார். விநாயகர் சிலையில் பால் வந்தது என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். ஆனால் இன்று கடவுள் காட்சி தருகிறார். தன்னையே வெளிப்படுத்துகிறார். 

  • “பெத்லகேமில் மனிதருக்காக மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது கிறிஸ்துமஸ்.
  • அதே கிறிஸ்து, உலகின் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கீழ்திசைஞானிகளுக்கு தன்னையே வெளிப்படுத்திய விழாவே திருக்காட்சி.”

மூன்றே மூன்று பாயின்ட்ஸ்...

1. தாழ்ச்சி இல்லையேல் காட்சி இல்லை: 

“கீழ்த்திசை ஞானிகள்” என்று சொல்லப்படும் இவர்கள்: கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் (wise men) வானியல், ஜோதிடம், இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் (Science, Astronomy, Philosophy) நட்சத்திரங்களின் இயக்கங்களை கவனித்தவர்கள். ஏழைகள் அல்ல! அரசர்களுக்கும் ஆலோசனை வழங்கும் அளவுக்கு உயர்ந்த நிலை கொண்டவர்கள். அனைத்தையும் விட்டுவிட்டு உண்மையைத் தேட புறப்பட்டவர்கள்.

“இது உலக வரலாற்றில் முக்கியமான பிறப்பு” என்று உணர்ந்தவர்கள்

  • அறிவியல் அவர்களை பயணிக்க வைத்தது;
  • விசுவாசம் அவர்களை மண்டியிட வைத்தது.

அதனால்: பயண ஆபத்துகள், தெரியாத நாடுகள், அரசியல் அச்சுறுத்தல்கள் (ஏரோது) இவை எல்லாவற்றையும் மீறி அவர்கள் கிளம்பினார்கள்.

  • அவர்கள் உயர வானத்தை பார்த்தார்கள்.  நட்சத்திரம் அவர்களை கீழ் நோக்கி பார்க்க வைத்தது.
  • அரண்மனைக்கு அல்ல! குடிசைக்கு அழைத்தது.
  • அங்கே: ஞானிகள்/அறிவாளிகள் மண்டியிட்டார்கள்

தாழ்ச்சி இல்லையேல் காட்சி இல்லை.  நாடாளும் அரசராக இருந்தாலும், எவரையும் வீழ்த்தும் வீரனாக இருந்தாலும், அறிவு புகழ் பெற்றிருந்தாலும், இறுதியில் அனைத்துலக அரசன் இயேசுவை நாடியே வர வேண்டும்


(2) தாராளமாய் தருவோம் காணிக்கை!  

தங்கம், தூபம், வெள்ளைப்போளம் – அவை பொருள்களின் மதிப்பைக் காட்டுவதில்லை;

தங்களைத் தாங்களே முழுமையாகக் கடவுளுக்குக் காணிக்கையாக அளித்ததை வெளிப்படுத்துகின்றன.

“மூன்று ஞானிகள் வெறுங்கை வீசி இல்லத்திற்குள் நுழையும் விருந்தாளிகள் அல்ல.

  • அவர்கள் காயினைப் போல மேலோட்டமான காணிக்கையை அல்ல,
  • ஆபேலைப் போல உள்ளத்தில் இருக்கையோடு தங்களுடைய காணிக்கைகளில் சிறந்தவற்றையே கடவுளுக்குத் தருகிறார்கள்.

அதே மனநிலையே, தன்னிடம் இருந்த ஒரே வாழ்வாதாரமாகிய இரண்டு செப்பு காசுகளையும் எந்தக் கணக்குமின்றி கடவுளுக்குக் கொடுத்த அந்த ஏழை கைம்பெண்ணிலும் (மாற்கு 12:41–44) காண்கிறோம்.

  • ஆபிரகாம் தன் ஒரே மகனை அர்ப்பணிக்கத் தயங்காதார்;
  • சகேயு தன் செல்வத்தை விடுத்து மனம் மாறினான்;

இவர்கள் அனைவரும் ‘என்னிடம் இருப்பதை’ அல்ல, ‘என்னையே’ கடவுளுக்குக் கொடுத்தவர்கள்.

அதனால்,

  • உண்மையான காணிக்கை என்பது பொருளின் அளவில் அல்ல;
  • உள்ளத்தின் ஆழத்தில் தான் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.”

“கடவுள் தேடுவது நமது பொருள்களை அல்ல; இவர்கள் கொண்டு வந்த பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அல்ல, மாறாக, இவர்களுடைய தற்கையளிப்பு இதயமே நம்மை அவர்கள் நோக்கி இழுக்கிறது.

3) வழிபடுவோம் அந்தக் குழந்தையை!

மத்தேயு 2:11 – “நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்” மத்தேயு பயன்படுத்தும் கிரேக்கம் சொல்: Προσκυνέω (Proskyneō) - முழுமையாக தாழ்ந்து விழுதல்

மண்டியிட்டு அல்ல; முகம் தரையில் படுமாறு விழுதல்

முழு சரணாகதி (total surrender):  "மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய் என்று உணர்ந்து மண்ணையும் நம்முடைய நெற்றியும் இணைத்துக் கொள்வதுதான்!

இது சாதாரண மரியாதை அல்ல. இது ஆழ்ந்த, புனிதமான வழிபாடு.

புதிய ஏற்பாட்டில் இந்தச் சொல் பெரும்பாலும்: கடவுளை வழிபடும்போது பயன்படுத்தப்படுகிறது.

  • மத்தேயு 4:10 – “உன் கடவுளாகிய ஆண்டவரையே வணங்குவாய் (προσκυνήσεις)”
  • யோவான் 4:24 – “ஆவியிலும் உண்மையிலும் வணங்குவோர்”

மத்தேயு யூதர்களுக்காக எழுதினாலும், இங்கு முதல் முறையாக யூதரல்லாதவர்கள் குழந்தை இயேசுவுக்கு Προσκυνέω செய்கிறார்கள். இஸ்ராயேலுக்குள் மட்டுமே சுருக்கப்பட்டிருந்த தேவ வழிபாடு, இப்போது உலகமெங்கும் திறக்கப்படுகிறது.

தேவன் ஒரு குழந்தையில் மறைந்திருக்கிறார். இந்த ஞானிகள் நமக்கு என்ன சொல்லித் தருகிறார்கள்?

ஆம். கடவுளை எப்படி வணங்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுத் தருகிறார்கள். அவர்கள்  பயணம் செய்தார்கள் (உடல்), விழுந்தார்கள் (உடல்), காணிக்கை தந்தார்கள் (உள்ளம்) முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும் வணங்க வேண்டும். 

கீழ் திசை ஞானிகள் நமக்குச் சொல்லும் பாடம்: “கடவுளை உண்மையில் வணங்க விரும்பினால்,

நாம் உயரமாக நிற்க முடியாது; தாழ்ந்து விழ வேண்டியதுதான்.”

திருக்காட்சி ஒரு பயணம்

நாம் அனைவருமே பயணிகள், திருப்பயணிகள். நகர்ந்துகொண்டே இருக்கும்போதுதான் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். கீழ்த்திசை ஞானியர் தொடக்கமுதல் இறுதி வரை பயணிகளாகவே காட்டப்படுகிறார்கள். இவர்களுடைய பயணத்தின் இலக்கு மாறிக்கொண்டே இருக்கிறது – எருசலேம், ஏரோதுவின் அரண்மனை, பெத்லகேம், சொந்த ஊர். ஆனாலும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எந்தவொரு பாதுகாப்பு வளையத்தையும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வழிகாட்டியைக் கைக்கொள்கிறார்கள்: விண்மீன், மறைநூல் அறிஞர்களின் செய்தி, கனவில் எச்சரிக்கை. வாழ்வின் அழைப்புகள் எப்போதும் எங்கிருந்தும் வரலாம் என்று நினைக்கிற அவர்கள், தங்களுக்கு வெளியே தங்களுக்கு உள்ளே என அனைத்தையும் பற்றிக் கருத்தாக இருக்கிறார்கள்.

இன்று நாம் மேற்கொள்கிற அனைத்துப் பயணங்களையும் எண்ணிப்பார்ப்போம். பயன் தராத பயணங்கள் எல்லாம் நேர விரயமே. இலக்குகள் இல்லாத பயணங்கள் எல்லாம் ஆற்றல் விரயமே.


January 7, 2025, Manila 

Feast of the Epiphany

The light that shone in the night of Christmas, illuminating the Bethlehem grotto—where Mary, Joseph, and the shepherds remained in silent adoration—now shines forth and is manifested to all nations. This universal manifestation is called Epiphany, a mystery of light, symbolized by the star that guided the Magi on their journey.

The word Epiphany comes from the Greek epiphaneia, meaning manifestation or appearance. The true source of this light, however, is not the star but Christ himself, the “sun that rises from on high” (cf. Lk 1:78).

Who are the Magi? Joke (I hope ). Did you know there were originally 6 Kings, not 3? Only three reached Bethlehem. The 4th went to the USA, the 5th to China, and the 6th to the Philippines. They were: BURGER KING, CHOWKING, and TAPA KING. * * * J

The Gospel tradition speaks of three Magi, regarded as wise men—Melchior, Gaspar, and Balthasar. They are traditionally understood as coming from different regions, cultures, and races, symbolizing the universality of salvation. They were not Jews, but Gentiles—most likely priests of an Eastern religion, possibly Zoroastrian star-readers, trained in astronomy, philosophy, and religious traditions.

Before setting out for Bethlehem, they were readers of the stars, but during their journey, they undertook a far deeper interior journey. Their long and risky pilgrimage—perhaps lasting months—symbolizes a movement from pagan belief to faith, from scientific observation to spiritual surrender, from curiosity to worship. They were seekers of truth, and their search found fulfillment in Christ.

1. Searching Jesus

The Magi were men with restless hearts. Though learned, respected, and financially secure, they were not satisfied with comfort or status. They desired something more—the ultimate truth. They wanted to know whether God truly exists, whether he is concerned about humanity, and how he can be encountered.

Their outward journey mirrored an inward pilgrimage of the heart. They were seekers after God, and their search transformed them:

scientists became spiritual persons; philosophers became people of faith.

Saint Augustine reminds us that prayer is nothing but the expression of our deepest longing—or restlessness—for God. True prayer detaches us from false securities and opens our hearts to God. Every believer, as a pilgrim of faith, is therefore called to be a person of prayer, living in constant interior communion with God.


2. Offering Jesus

The Magi did not come to Jesus with empty hands. They opened their treasure chests and offered gold, frankincense, and myrrh—costly gifts used in worship, royal ceremonies, healing, and burial.

These gifts carry deep symbolic meaning:

  • Gold honors Christ as King
  • Frankincense acknowledges his divinity
  • Myrrh points to his humanity, suffering, and death

More than the material value, their offerings expressed self-giving. Like Abel, not Cain; like the poor widow who offered her two copper coins, they gave not from abundance alone, but from faith and surrender. True worship always involves offering oneself to God.

3. Worshipping Jesus

Why did the Magi come to Bethlehem? Because they recognized in the Child the King and Messiah.

Matthew 2:11 marks the high point of the narrative: “They prostrated themselves and worshipped him.”

The Greek word used here is Προσκυνέω (Proskyneō)—a term denoting profound reverence, even falling face-down in worship. In Matthew’s Gospel, this word is used almost exclusively for Jesus, highlighting his divine identity. What the Magi offer is not mere respect, but true worship, appropriate to God alone.

Thus, Gentiles become the first to worship Christ, revealing the universal scope of salvation. Their prostration proclaims Jesus as the Son of David, the Son of God, and Emmanuel—God with us.

Becoming Stars for the World

Guided by the star, the Magi reached Christ, the true Light who enlightens everyone (cf. Jn 1:9). Having found him, they themselves became stars, shining in the firmament of history. As Saint Paul says, believers are called to “shine like stars in the world” (Phil 2:15).

Every Christian renewal is a journey guided by the star of faith. When we open our hearts to Christ, allow his grace to transform us, and bind ourselves to him anew, we too become wise men and women—guides for others on the path of life.


Popular Posts