Tuesday, December 2, 2025

International Day of Persons with Disability (December 3)

இன்று புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலரின்
பெருவிழாவை கொண்டாடுகின்றோம். இதே நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.  நமது சபைக்கு மிகவும் நெருக்கமான இந்த மாற்றுத்திறனாளிகளை பற்றி ஒருசில சிந்தனைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...
  • சமூகத்தில் ஏன் இந்த மாற்றுத்திறனாளிகள்?
  • கடவுள் எதற்காக இவ்வுலகில் ஊனமுற்றவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் படைத்தார்? 
  • எதற்காக இத்தனை குறைபாடுகள், ஏனிந்த ஊனங்கள்? 

விவிலியத்தின் தொடக்க நூலின் அனைத்து மக்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட உள்ளார்கள் என்று வாசிக்க காண்கிறோம் (தொ.நூ 1:27) 

அன்றைய காலத்தில் ‘ஊனம்’ என்பது கடவுளின் தண்டனை அல்லது சாபம் என்று மக்கள் நம்பினர். ஆனால் விவிலியம் “கடவுளின் செயல்கள் ஊனம் மூலம் வெளிப்படுத்தப்படலாம்” என்று கூறுகிறது. "கடவுளின் செயல்கள் அவரில் வெளிப்படும் பொருட்டு இது நடந்தது." - (யோ 9:3) ஊனம் என்பது ஒரு குறைபாடு அல்ல. கடவுள் அவர்களின் மூலமும் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.


19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதர் லூயிஸ் குவனெல்லா “மாற்றுத்திறனாளிகள் கடவுளின் பரிசுகள்” என்று கூறினார். அவர்கள் விண்ணகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடவுளின் தேவதூதர்கள்.  மாற்றுத்திறனாளிகளை “செல்ல குழந்தைகள்” என்றழைத்தார். 

ஒரு அப்பாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மூத்தவன் வளர்ந்து மருத்துவராகி சாதிக்கத் துவங்கி விட்டான். இளையவன் இன்ஜினியராகி இல்லத்தில் இனிதே நுழைந்து விட்டான். மூன்றாவது மகனோ, இரண்டு கால்களையும் இளம்பிள்ளை வாதத்தால் இழந்து, வாழ்க்கையை வருந்தி வாழ்ந்து கொண்டிருந்தார். 

இந்த மூவரில் அப்பாவின் பாசத்துக்குரிய செல்ல மகன் யார்? சந்தேகமே இல்லாமல் ஊனத்தோடு பிறந்த மூன்றாவது மகனே தந்தையின் பார்வையில் செல்ல குழந்தையாய் தெரிகிறான். 

கடவுளைத் தந்தையாக பாவித்த அவருக்கு "செல்லக் குழந்தையாக" தெரிகிறார்கள், இந்த உலகின் கடை எல்லை வரை ஒதுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள். போலிகளைப் படைத்து வெறுத்து போன இறைவன் ஒரு மாற்றத்திற்காக உண்மை உயிரை, முழுமையற்ற உடலுக்குள் வைத்து படைத்தார். அவர்கள் தான் கடவுளின் பிரதிநிதிகள். இந்தப் புரிதலினாலே மிகவும் நெருக்கமாக தான் அன்பு செய்த, உடல் நலம் குன்றிய குழந்தைகளை தான் தோற்றுவித்த சபைகளின் முதன்மைப் பணியாக செய்தார்.

ஒருமுறை கோமோ நகர ஆயர் அவர்கள் அந்நகரத்தில் குவனெல்லா தோற்றுவித்த இல்லமான இறைபராமரிப்பு இல்லத்தின் கதவுகளைத் தட்டி தான் குவனெல்லாவைக் காண வந்திருப்பதாகக் கூறினார். அந்த இல்லத்து பணியாளர் ஒருவர், "தந்தை குவனெல்லா, தனது இல்லத்தில் செல்லக் குழந்தைகளோடு சீட்டு விளையான்டு கொண்டிருப்பதைக் கூறினார்". இதைக் கேட்டவுடன் சிறிது அப்சட்டான ஆயர், “மனநிலை பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் விளையாட வாய்ப்பில்லை. புனிதரை விரைவில் அழைத்து வாருங்கள்” என்றார். அந்த பணியாளரோ, "ஆம் ஆயர் அவர்களே! செல்லக் குழந்தைகளை உயர்ந்தவர்களாக மதிக்கும் வரை அவர்களுக்கு விளையாட்டுகள் புரியப் போவதில்லை” என்றார். பிறகு என்ன! ஆயர் நீண்ட நேரம் விளையாட்டு முடியும் வரை இருந்து குவனெல்லாவை சந்தித்து தான் சென்றார். செல்லக் குழந்தைகள் தான் அவரது நிறுவனத்தின் முதலாளிகள். அவர்களின் நிமிடத் துளிகளை மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு, தன்னுடைய மணித்துளிகளையும் செலவிட தயங்கவில்லை.

அன்பின் பணியாளர் சபையைத் துவங்கிய நேரங்களில் தனது சபையில் சேர விரும்பும் மாணவர்களையும், இளைஞர்களையும் அழைத்திட ஒவ்வொரு மறைமாவட்ட பங்குகளிலும் சென்று இறையழைத்தல் கூட்டம் ஏற்பாடு செய்தார். அவர் எப்போது வெளியே சென்றாலும் தன்னோடு ஐந்தாறு செல்ல குழந்தைகளையும் கூட்டிச் செல்வார்கள். ஒருமுறை கோமா நகரத்து பங்கு இளைஞர்களை சந்தித்தபோது குவனெல்லாவோடு வந்திருக்கிற செல்லக் குழந்தைகளை பார்த்து அவர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு தந்தை குவனெல்லா, “இந்த சிறப்பு குழந்தைகளிடம் உங்களிடமும், என்னிடமும் இல்லாத ஆற்றல் ஒன்று உள்ளது. ஏனெனில் அவர்கள் கடவுளின் சிறப்பு அருள் பெற்றவர்கள் (Innocence and angelic grace).  

செல்லக் குழந்தைகளை எந்த வித நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொண்டு கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்கள் அன்பின் பணியாளர் சபையில் சேரலாம். பட்டப்படிப்புகளும், நூலகங்களும் தர முடியாத அனுபவங்களை இவர்களின் அருகாமையில் அறிந்து கொள்ளலாம்.

இன்று நாம் வாழக்கூடிய உலகம் அறிவியலின் பயனை அனுபவிக்கும் உலகம். இங்கு அறிவு தான் அனைத்தையும் அளக்கும் அளவுகோல்! தோற்றம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் கருவி! அழகை கண்டு கொள்வதும் அன்பு செய்வதும் மனிதருக்கு மிக எளிது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மறைந்து கிடக்கும் திறன்களையும் அறிந்த அன்பு செய்வது என்பது மிக அரிது.

இன்றைய தினத்தில் நமது இல்லங்களில், சமூகத்தில், குடும்பத்தில் இருக்கும் அனைத்து இருக்கும் அனைத்து மாற்று திறனாளிகளும் அன்பு, அரவணைப்பு மற்றும் கண்ணியம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்தி ஜெபிக்கும் குவனெல்லிய இல்லங்கள். 


Monday, December 1, 2025

Tuesday of the 1st Week of Advent

Is 11:1-10; Lk 10:21-24

Brothers and Sisters! Do you feel you are cut down by failures, relationship problems, financial crisis, depression, or anxiety?

When everything seems broken or lost, God still creates new beginnings. The coming of the Messiah, the Son of David, is the sign of hope for our lives.

Today’s first reading opens with the prophecy: “A shoot shall sprout from the stump of Jesse.” (Is 11:1)

Who is the father of King David? Jesse.

In the time of Isaiah, the people thought the Kingdom of Israel would be cut down, just like a dead stump. Exile, sin, and defeat made it seem as though the story of God’s people would end. But the prophet announces something astonishing: God can bring life from what looks like nothing.




  • He can grow greatness from your brokenness.
  • He can restore hope when the world sees only ruins.
  • This is the power of our God — life through the Messiah.

The Spirit of the Lord rests upon Him: wisdom, understanding, counsel, and strength.

What once was dead will bear fruit again. Do not feel tired, wounded and ended. Life would begin at any time.

In the Gospel, Jesus rejoices in the Spirit and tells us that this revelation is not given to the proud, the powerful, or the worldly wise, but to the humble—to those with the heart of a child. God’s kingdom is accessed not through intellect or status, but through trust, simplicity, and openness.

As we prepare our hearts in this Advent season, let us welcome Christ with childlike faith. When we kneel before Him as children of the Kingdom, we discover that no stump in our life is truly dead—because where Jesus enters, new life begins.

Friday, November 14, 2025

34th Sunday Ordinary time,

ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் வாரம், திங்கள்

தானியேல் 1:1-6, 8-20. லூக்கா 21:1-4

(Thanks: Fr. Yesu Karunanidhi, blogger)

கண்ணீரும் காசும்

‘இந்தியக் கைம்பெண்களின் உளவியல், மற்றும் சமூக நிலை’ என்ற ஓர் ஆய்வுக்கட்டுரையை இரு நாள்களுக்கு முன்னர் வாசித்தேன். ‘கைம்பெண்கள் மறுவாழ்வு அல்லது மீள்வாழ்வு அல்லது மறுமணம்’ என்பது அதிகரித்து வந்தாலும், மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்கின்ற அளவுக்கு, கணவரை இழந்த ஆண்கள் மறுமணம் செய்துகொள்வதில்லை என்றும் ஆய்வு சொன்னது. தன் கணவரை இழந்ததால் உள்ளத்தில் சோகமும், தன் பிள்ளைகளின் கைகளை நம்பி நிற்பதால் உடல்நோயையும் பொறுத்துக்கொண்டும் பலர் இருப்பதாகவும், கைம்பெண்கள் சமூகத்திலும் பல துன்பங்களுக்கும் ஆளாவதாகவும் கட்டுரை சொன்னது. இன்னொரு பக்கம், தாங்கள் தங்கள் கணவரை இழந்ததால், இனி தனக்கே அனைத்துப் பொறுப்பும் என்று தங்கள் குடும்பத்தை மேலே உயர்த்திய பல பெண்களைப் பற்றியும் கட்டுரை கூறுகிறது.

இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் பின்தங்கி இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர். இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘வறுமையில் வாடிய கைம்பெண் ஒருவரின் காணிக்கை’ நிகழ்வை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள், இவரை ‘கைம்பெண்’ என அழைக்க, லூக்கா மட்டும், ‘அவர் வறுமையில் வாடியவர்’ என்று பொருளாதார நிலையையும் குறிப்பிடுகின்றார். இயேசுவின் சமகாலத்தில் எல்லா யூதர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வரி கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வரி பெரும்பாலும் கீழிருப்பவர்களைக் கருத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, நம் ஆலயங்களில் திருவிழாவுக்கென்று வரி, ரூ 1000 விதிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்கில் உள்ள வசதியானவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்காது. ஆனால், சில குடும்பங்களுக்கு அந்த 1,000 என்பது அவர்களுடைய ஒரு மாத வருமானமும், செலவினமுமாகவும் இருக்கும். இயேசுவின் சமகாலத்திலும் அனைவரும் அரை ஷெக்கேல் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. நம் நிகழ்வில் வருகின்ற கைம்பெண்ணிடம் அரை ஷெக்கேலில் ஆறில் ஒரு பகுதிதான் இருந்தது. ஆனால், அவர் அதையும் காணிக்கையாகப் போடுகின்றார்.

நிகழ்வில் வரும் கைம்பெண்ணைப் பற்றி மூன்று குறிப்புகளைத் தருகின்றார் இயேசு:

(அ) தமக்குப் பற்றாக்குறை இருந்தும்

‘பற்றாக்குறை’ என்பது தேவைக்கும் குறைவான நிலை. ஆனால், அந்தக் கைம்பெண் தன் பற்றாக்குறையை பெரிதுபடுத்தவில்லை. தன் வாழ்வில் நிறைய பற்றாக்குறைகளை அனுபவித்த அவர் இந்தப் பற்றாக்குறையையும் கண்டுகொள்ளவில்லை.

(ஆ) தம் பிழைப்புக்காக அவற்றை வைத்திருந்தார்

அதாவது, அவர் இட்ட காணிக்கை அவருடைய ஒரு நாள் செலவினம். தன் வாழ்வைத் தக்கவைக்க அவர் செலவழிக்க வேண்டிய பணம். ஆக, மருத்துவம், முதுமை போன்ற எந்த எதிர்கால வசதிகளையும் கூட எண்ணிப்பார்க்காத நிலையில் இருந்த அவர், தன் நிகழ்காலத் தேவையையும் தள்ளி வைக்கின்றார்.

(இ) எல்லாவற்றையும் போட்டுவிட்டார்

வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண். ஆலயத்தை விட்டு வெளியே சென்றால் அவர் தன் வாழ்வை எப்படி எதிர்கொள்வார்? என்ற கேள்வி நம்மில் எழுகிறது.

லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை’ என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, ‘அன்றைய நாளைப் பற்றிக் கூட’ அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.

நிற்க.

இப்படியாக நாம் அந்த இளவலின் செயலைப் புகழ்ந்து கொண்டாடினாலும், அவருடைய வறுமை என்னவோ நம்மை நெருடவே செய்கிறது. ‘கடவுள் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். அவர் நம்மைப் பாராட்டுகிறார்’ என்னும் சொற்கள் நமக்கு ஆறுதல் தரவில்லை. எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அவருடைய கைகளில் பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் அவர் பசியாறுவாரா?

கைம்பெண்களின் கடைசிக் காசைப் பெற்றுத்தான் ஆலயமும் ஆலயத்தின் குருக்களும் வாழ வேண்டுமெனில் அத்தகைய அமைப்புகள் தேவையா? அமைப்பை உடைப்பதை விடுத்து அமைப்புக்குள் மக்கள் தங்களையே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல இருக்கிறது இயேசுவின் செயல்பாடு. இன்றும் சில நேரங்களில் சில இடங்களில், ‘ஏழைக் கைம்பெண் போல அனைத்தையும் காணிக்கை போடுங்கள்’ என்று அருள்பணியாளர்கள் மக்களிடம் சொல்கிறார்கள். நாம் வானளவாகக் கோவில் கட்டவும், ஊர் பாராட்ட சப்பரம் இழுப்பதற்கும் இன்றும் ஏழைகளும் கைம்பெண்களும் தங்கள் கடைசிக் காசுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய கண்ணீரும் நம் ஆசையும் ஒருபோதும் குறைவதில்லை!

Popular Posts